Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கு படையினர் எச்சரிக்கை

Featured Replies

f_eelanaathamm_c4f3e7c.jpg

குடாநாட்டில் மாணவர்களுக்கு மரணதண்டனை எச்சரிக்கை! கல்விச் சமூகத்தில் பெரும் பதற்றம்

யாழ். நகரின் சில முக்கிய பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கின்றனர் எனக் குற்றம் சுமத்தி, அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை வெளியிட்டு, அவர்கள் பயங்கர வாதிகளுடன் சேர்ந்து மேலும் நாசகார வேலைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று அறிவிக்கும் துண்டுப் பிரசுரம், குடாநாட்டில் நேற்று பரவலாக விநியோகிக்கப்பட்டது.

நாட்டைக் காக்கும் தமிழர் கூட்டமைப்பு யாழ். மாவட்டம் என்ற பெயரில் இந் தத் துண்டுப் பிரசுரம் அமைந்திருந்தது.

இதில் நான்கு பாடசாலைகளைச் சேர்ந்த பதினாறு மாணவர்கள் மற்றும் ஓர் ஆசிரியரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இவர்கள் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து, அவர்களின் பசப்பு வார்த்தைகளை நம்பி, யுத்தப் பயிற்சி பெற்று, புத்தகப் பையினுள் ஆயுதங்களைக் கொண்டு செல்லல், கைத்துப்பாக்கி, கைக்குண்டு, கிளைமோர் ஆகியவற்றை மறைத்து வைத்திருத்தல், கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளுதல், வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டம் செய்து ரயர், பஸ்களுக்குத் தீ வைத்தல், சாளரம் வெளியீட்டை மாணவர்களுக்குப் பலாத்காரமாக விற்றல் போன்ற பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டனர் எனத் தமது அமைப்புக்கு நம்பகரமான தகவல்கள் கிடைத்துள்ளன என்று அந்த அமைப்பு அத்துண்டுப் பிரசுரத்தில் தெரிவித்துள்ளது.

உங்களைப் போன்ற தேசத் துரோகிகளுக்கு மரண தண்டனை வழங்க நாம் முடிவெடுத்துள்ளோம். ஆனால் நீங்கள் பாடசாலை மாணவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரே ஒரு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகள் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட அனுமதிக்க வேண்டாம். அதிபர், ஆசிரியர்களே, மாணவர்களின் செயற்பாடுகளில் அவதானமாக இருங்கள். அவர்களுக்கு நல்வழி காட்டுங்கள்! என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு தொகை மாணவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் மற்றும் மரணதண்டனை எச்சரிக்கை தெரிவித்து பகிரங்கத் துண்டுப்பிரசுரம் வெளியாகியிருக்கின்றமை குடாநாட்டு கல்விச் சமூகத்தில் பெரும் பரபரப்பையும், அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

http://www.tamilwin.com/

யாழ். பாடசாலை அதிபர்களுக்கு சிறிலங்கா இராணுவம் கொலை அச்சுறுத்தல்

[சனிக்கிழமை, 12 மே 2007, 18:18 ஈழம்] [செ.விசுவநாதன்]

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதான பாடசாலைகளின் அதிபர்களுக்கு சிறிலங்கா இராணுவம் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.

யாழ். நகரத்தில் உள்ள பிரதான பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சில மாணவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அவர்களைத் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என்று கூறி இராணுவத்தினரால் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் பட்டியலிடப்பட்டுள்ளோர், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் அதனைக் கைவிடாத நிலையில் அவர்கள் கொல்லப்படுவர் என்றும் கூறப்பட்டிருந்தது.

இலங்கையைப் பாதுகாக்கும் தமிழ்க் கூட்டமைப்பு என்ற பெயரினால் சிறிலங்கா இராணுவத்தினரால் இந்தத் துண்டுப் பிரசுரம் நேற்று வெள்ளிக்கிழமை விநியோகப்பட்டது.

யாழ். இந்துக் கல்லூரி அதிபரின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது.

இத்தகைய துண்டுப் பிரசுரத்தால் யாழ். கல்வி சமூகத்தினரிடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.