Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளை வெளியேற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல்: கிழக்கு இராணுவத் தளபதி

Featured Replies

விடுதலைப் புலிகளை வெளியேற்றிய பின்னர் கிழக்கில் தேர்தல்: கிழக்கு இராணுவத் தளபதி

எதிர்வரும் சில நாட்களுக்குள் கிழக்கு மாகாணத்தில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக வெளியேற்றிய பின்னர் அங்கு தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்காப் படையின் கிழக்கு மாகாண இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண இராணுவத் தளபதி ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய மேலும் தெரிவித்துள்ளதாவது:

கிழக்கின் பல பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட விடுதலைப் புலிகள் தற்போது தொப்பிக்கல பகுதியில் உள்ளனர். வாகரைப் பகுதியில் இருந்து வெளியேறிய மக்களை மீளக்குடியமர்த்தும் வேலைகளை அரசாங்கம் நிறைவு செய்துள்ளது என்றார்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட 23 ஆவது படையணியின் 3 ஆவது பிரிகேட்டின் தளபதியான லெப். கேணல் டபிள்யூ. ஏ.வி. அனுரா சுதசிங்க கூறியதாவது:

பிரதேச செயலகங்கள், பேரூந்து நிலையங்கள், பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் என்பன வாகரையில் தமது பணிகளை ஆரம்பித்துள்ளன. மருத்துவமனை அங்கு உள்ள மருத்துவர்களின் உதவியுடன் இயங்குகின்றது.

தபால் நிலையங்கள், பாடசாலைகள் என்பனவும் இயங்க ஆரம்பித்துள்ளன. கடுமையான காலநிலை கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளை பாதித்துள்ளது. இந்த பிரதேசம் அதிகளவான கண்ணிவெடிகளை உடைய பிரதேசம் என்றார் அவர்.

http://www.eelampage.com/

  • தொடங்கியவர்

கிழக்கிற்கென்று தனியாகத் தேர்தல் நடத்தப் போவதில்லை என்பதை வெளிப்படையாகச் சொல்ல முடியாமல் இவ்வாறு சுற்றி வளைத்து பேசுகிறார். வெளியேற்றவும் முடியாது தேர்தல் நடத்தவும் முடியாது.

  • தொடங்கியவர்

கிழக்கை கைப்பற்றியதாக மார்தட்டும் அரசு கொழும்பை பாதுகாக்க முடியாமல் தடுமாற்றம்

சிவநாதன் கிஷோர் கூறுகிறார்

கிழக்கில் புலிகளின் பிரதேசங்களை கைப்பற்றிவிட்டதாக மார்தட்டிக் கொண்ட அரசாங்கம் இன்று கொழும்பை பாதுகாத்துக் கொள்ள முடியாமல் தடுமாறுகின்றதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே கிஷோர் எம்.பி. இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

அவசரகாலச் சட்டம் அமுலுக்கு கொண்டு வந்ததன் பின்னரும் கொலை, கொள்ளைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கு பொறுப்பானவர்களை அரசாங்கம் இதுவரை கைது செய்துள்ளதா?

திடீரென தெற்கில் புலிகளின் விமானத் தாக்குதல் நடைபெற்றுள்ளது கவலைக்குரிய விடயமென்றாலும் தவிர்க்க முடியாதது. எமது மக்கள் அனுபவிப்பதை இன்று உங்களது மக்களும் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

புலிகளை இலகுவாக மதிப்பிட்டுவிட வேண்டாம். புலிகளிடம் இன்று வான் பலமும் வந்துள்ளது. இதனால் அரசாங்கம் பேச்சு மேசைக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வாகரை, சம்பூரை கைப்பற்றியபோது பெருமிதப்பட்டீர்கள். மட்டக்களப்பை பிடித்தபோது கொட்டாவி விட்டீர்கள். கிழக்கிலிருந்து புலிகளை விரட்டி விட்டதாக கூறினீர்கள். ஆனால், இன்று அரசாங்கம் கொழும்பை பாதுகாக்க முடியாமல் தவிக்கிறது.

இதேவேளை, புலிகளின் விமானமென அரசாங்கம் தனது விமானத்தையே சுட்டு வீழ்த்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அதாவது, புலிகளின் விமானம் வந்ததாக பதற்றம் ஏற்பட்டபோது விமானப் படையினரின் ஹெலிகொப்டரை படையினரே சுட்டு வீழ்த்திய சம்பவம் அநுராதபுரத்தில் இடம்பெற்றது.

அரசாங்கத்தின் பாதுகாப்பு விவகார பேச்சாளர் நாளாந்தம் பொய் கூறிக்கொண்டிருக்கிறார். அரசாங்கம் கூறும் புள்ளி விபரங்களை பார்த்தால் இந்நேரத்திற்கு புலிகள் மட்டுமல்லாது, தமிழ் மக்கள் முழுவதுமாக அழிந்து சிங்கள மக்களிலும் பாதிப் பேர் இல்லாமல் போயிருக்க வேண்டும். எனவே, இனியாவது அரசாங்கம் உண்மைகளைக் கூற வேண்டும.

தமிழ்த் தரப்பு எப்போதும் பேச்சுவார்த்தைகளுக்கு தயாராகவே உள்ளது. பிரபாகரன் பேச்சுக்கு வராமலில்லை. எனினும், நீங்கள் சரியான தீர்வொன்றை முன்வைக்க மாட்டீர்கள் என்பது அவருக்கு தெரியும். ஏனெனில், தென்னிலங்கை கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்றார்

http://www.tamilwin.com/

கிழக்கு இன்னும் சில தினங்களில் முற்றாக மீட்கப்படும்;

அதன் பின்னர் அங்கு மாகாண சபைத் தேர்தல்

தளபதி பராக்கிரம சொல்கிறார்

கொழும்பு,மே13

கிழக்கில் இருந்து இன்னும் சில தினங் களில் விடுதலைப் புலிகளை முற்றாக விரட்டி விடுவோம். அதாவது கிழக்கு முற் றாக மீட்கப்பட்டுவிடும். அதன் பின்னர் மக்கள் தமது பிரதிநிதிகளை தேர்தல் மூலம் தெரிவு செய்யும் வாய்ப்புக் கிடைக்கும்.

கிழக்கு மாகாண இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட் டிய மேற்கண்டவாறு பத்திரிகையாளர் களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித் திருக்கிறார்.

கிழக்கில் விடுதலைப் புலிகளை விரட்டிவிட்டோம். அவர்கள் இப்போது தொப்பிகல காட்டில்தான் உள்ளனர். அங்கி ருந்தும் மிக விரைவில் அவர்களை விரட்டி விடுவோம் என்றார் அவர்.

கிழக்கில் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படவிருப்பதாக அரசியல் கட்சி கள் தெரிவித்துவரும் வேளையில் கிழக் குத் தளபதி இத்தகவலை வெளியிட்டுள் ளார் என செய்தியாளர் ஒருவர் குறிப்பிட் டிருக்கிறார்.

இதேவேளை, வாகரையில் 15 ஆயிரம் பேரை மீளக்குடியமர்த்தியுள்ளோம். அவர் களுக்குத் தேவையான அடிப்படை வசதி கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று 233 ஆவது படையணித் தளபதி வி.அனுர சுதசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதத்தில் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் கிழக்கிலி ருந்து விடுதலைப் புலிகள் விரட்டியடிக் கப்பட்டுவிட்டதாகவும், தொப்பிக்கல காட் டுப் பகுதில் நூற்றுக்கணக்கில் உள்ள அவர்கள் மிக விரைவில் விரட்டப்படுவர் என்றும், அதன் பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்த முடியுமென்றும் கூறியி ருந்தமை தெரிந்ததே.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.