Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநிதியின் பதவி பறிபோகும் சாத்தியம்

Featured Replies

கருணாநிதி குடும்பச்சண்டை உக்கிரம் தயாநிதியின் பதவி பறிபோகும் சாத்தியம்

தமிழ் நாட்டில் முதலமைச்சர் கருணாநிதியின் குடும்பச் சண்டை உக்கிரமடைந்திருக்கிறது.

கருணாநிதியின் மகன் அழகிரிக்கு கருணாநிதியின் சகோதரியின் பேரனும் இந்திய மத்திய அமைச்சருமான தயாநிதி மாறனுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலையடுத்து தயாநிதி மாறனின் மத்திய அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல, பதவியை தூக்கி எறிய தயாநிதியும் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.

மதுரை வன்முறையானது தி.மு.க. மற்றும் கருணாநிதி குடும்பத்தில் பல முக்கிய நிகழ்வுகளுக்கு அத்திவாரமிட்டதுபோல அமைந்துவிட்டது. அடுத்தடுத்து பல திருப்புமுனை நிகழ்ச்சிகளுக்கு அது அடிக்கல் நாட்டியுள்ளது. இவ்வளவு பிரச்சினைகள் நடந்த பின்னரும் அழகிரிக்கு முதல்வர் கருணாநிதி முழு ஆதரவு தருவதாக தயாநிதியும் அவரது அண்ணனும் சன் டி.வி. நிறுவனருமான கலாநிதியும் கருதுகின்றனர். இதனால் அழகிரி மீது கருணாநிதி நடவடிக்கை எடுக்கமாட்டார் என்றே அவர்கள் நினைக்கின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியை சந்தித்துப் பேசிய அழகிரி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தயாநிதியை நீக்குமாறு வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. அழகிரியின் இந்தக் கோரிக்கைக்கு கருணாநிதி குடும்பத்திலும் ஆதரவு வலுத்துள்ளதாக அறியவருகிறது. தயாநிதி மாறன் முதுகில் குத்திவிட்டார். கலைஞருக்கு துரோகம் செய்துவிட்டார் என்று ஒட்டுமொத்த கருணாநிதி குடும்பமும் கொந்தளித்துக் கிடக்கிறதாம். கலைஞர் மற்றும் தி.மு.க.வை வைத்து பல பலன்களை அனுபவித்தவர்கள் மாறன் சகோதரர்கள். ஆனால், இன்று கலைஞரையே தூக்கி எறியத் துணிந்துவிட்டனர்.

அப்படிப்பட்டவர்களுடன் நமக்கு ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்று அழகிரி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் கோபமாக கருணாநிதியிடம் கூறியுள்ளனராம். அழகிரியின் கோரிக்கையை தி.மு.க. முன்னணியினரும் வரவேற்றுள்ளனராம். காரணம், தயாநிதியின் வருகையை ஆரம்பத்திலிருந்தே விரும்பாதவர்கள் இவர்கள். தயாநிதியின் அசுர வளர்ச்சியால் அவர் மீது எரிச்சலில் உள்ள இந்த தி.மு.க. முக்கிய தலைகளும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குமாறு கருணாநிதியை நெருக்கி வருகின்றனர். குறைந்த பட்சம் அவரது இலாகாவையாவது மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். இந்த வற்புறுத்தல்களால் தயாநிதியை பதவியை விட்டு விலகுமாறு கருணாநிதி கோரலாம் என்று தெரிகிறது.

அழகிரி விவகாரம் தொடர்பாக கருணாநிதியை சந்திக்க தயாநிதி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் கருணாநிதியின் பொன்விழா பொதுக்கூட்டத்தை தயாநிதி புறக்கணித்தார் என்கிறார்கள். மேலும், இதே காரணத்தினால் தான் கருணாநிதியின் பொன் விழா நிகழ்ச்சிகளைக் கூட சன் டிவி நேரடியாக ஒளிபரப்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப சன் டி.வி.க்கு கருணாநிதியே அனுமதி மறுத்ததாகவும் ஒரு தகவல் உள்ளது.

இதனால் இந்த நிகழ்ச்சியையும் காலையில் சட்டமன்றத்தில் நடந்த பொன் விழா நிகழ்ச்சியையும் ராஜ் டிவி தான் நேரடியாக ஒளிபரப்பியது. இதனால் கருணாநிதியின் பொன் விழா சன் டிவி செய்தியில் 4 ஆவது செய்தியாகத் தான் இடம்பெற்றது. இந்நிலையில் இனி ஆட்சி, கூட்டணி தொடர்பான எந்த முக்கிய விஷயங்களையும் தயாநிதியிடம் தெரிவிக்க வேண்டாம், அதை டி.ஆர்.பாலுவிடம் சொன்னால் போதும் என பிரதமரிடமும் சோனியாவிடமும் கருணாநிதி கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இதனால் தயாநிதி தானாகவே பதவி விலகுவார் அல்லது பதவி விலகுமாறு கேட்டுக் கொள்ளப்படுவார் என்று தி.மு.க.வில் பலமாக பேசப்படுகின்றது. மதுரை வன்முறைக்குப் பிறகு மாறன் குடும்பத்தினர் யாரும் கருணாநிதி வீட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினக்குரல்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயாநிதி ராஜினாமா... கருணாநிதி சீற்றம்: அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

சென்னை மே 12

முதல்வர் குடும்பத்துடன், மாறன் குடும்பத்திற்கு ஏற்பட்ட மோதலை தொடர்ந்து மத்தியதகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் எந்த நேரத்திலும் தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய கூடும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கூறப்படுகிறது. முதல்வரிடம் அவர் ராஜினாமா கடிதத்தை கொடுக்க முற்பட்டதாகவும், ஆனால் ஜன்னதிபதி அல்லது பிரதமரிடம் ராஜினாமாவை கொடுக்கட்டும் என்று அவர் கோபமாக கூறிவிட்டதாகவும் தெரிகிறது. இதனிடையே சன் டிவி நிர்வாக இயக்குனர் கல்லநிதி மாறன் தமது துணைவியாருடன் இன்று அதிகாலை அமெரிக்காவுக்கு திடீரென்று புறப்பட்டு சென்றுள்ளார். தயாநிதி மாறன் ஊட்டிக்கு பயணமாகிவிட்டார்.

கருணாநிதியின் வாரிசு யார் என்பது குறித்து கடந்த 7-ந் தேதி தினகரன் பத்திரிகை கருத்து கணிப்பு வெளியிட்டதை தொடர்ந்து, மதுரை யில் உள்ள தினகரன் பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டது. பெட்ரோல் வெடிகுண்டு வீசப் பட்டது. இதில் 3 ஊழியர்கள் உயிரிழந்தார்கள். முதல்வரின் மகன் மு.க. அழகிரியின் தூண்டுதலால் இந்த தாக்குதல் நடை பெற்றதாக் தினகரன் குற்றம் சாட்டியது.

இதனைத் தொடர்ந்து முதல்வரின் குடும்பத்திற்கும் கலாநிதி மாறன் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நேற்று முதல்வரின் சட்டசபை பொன்விழா நிகழ்ச்சிகள் நடைபெற்ற போது இதை சன் டிவி நேரடியாக அஞ்சல் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. ஆனால் சன் டிவிக்கு விழா அமைப்பாளர்கள் அனுமதி அளிக்கவில்லை. சன் டிவிக்கு மாறாக சண்டிவியின் எதிரியாக கருதப்படும் ராஜ் டிவி, முதல்வரின் பொன் விழா நிகழ்ச்சி களை நேரடியாக ஒளிபரப்பியது பெரும் பரபரப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியது.

முதல்வரின் செல்லப்பிள்ளயாக வலம் வந்த மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் பொன்விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளா விட்டாலும், பிரதமரை வரவேற்பதற்காக விமான நிலையத்திற்கு சென்றார். பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பிரதமர் புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்ற போதும் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பும் நிகழ்ச்சியில் தயாநிதி மாறன் கலந்து கொண்டார். முதல்வர் குடிம்பத்துடன் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியை எந்த நேரத்திலும் ராஜினாமா செய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நேற்று மாலயில் தயாநிதி மாறன் சிஐடி நகரில் உள்ள முதல்வரின் இல்லத்திற்கு சென்றிருக்கிறார். ஆனால் அவரை பார்க்க முதல்வர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும் அவர் அங்கேயே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முதல்வர் வெளியா வந்த போது அவரை கோபமாக பார்த்து, ‘அழகிரி யார் தெரியுமா? அவன் என் மகன்” என்று கூறிவிட்டு போய்விட்டதாக கூறப்படுகிறது.

இதன்பின் தயாநிதி மாறன் தமது மூத்த சகோதரன் கலாநிதி மாறனுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தமது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து முதல்வரின் இல்லத்திற்கு கடிதத்தை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த முதல்வருக்கு கோபம் ஏற்பட்டுவிட்டது, ‘நான் என்ன தபால்காரனா? கடிதத்தை அனுப்பிவைக்க’ என்று கூறிவிட்டு, ‘ஜனாதிபதியிடமோ, பிரதமிரிடமோ ராஜினாமா கடிதத்தை கொடுக்கசொல்’ என்று ஆவேசமாக கூறியதாக் தெரிகிறது.

கலாநிதி அமெரிக்கா பயணம்

இந்தநிலையில் சன் டிவியின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறன் இன்று அதிகாலை 1.45 மணிக்கு லுத்தான்சா விமானம் மூலம் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி காவேரியும் சென்றார்.

தயாநிதி ஊட்டி பயணம்

இன்று காலை 11.25 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கோயம்புத்தூருக்கு ஜெட் ஏர்வேச் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவர் வழக்கமாக விமான நிலையத்திற்கு வரும் போது, போலிஸ் பட்டாளத்தோடு வருவது வழக்கம், உயர் காவல்துறை அதிகாரிகள் விமான நிலையத்திற்கு வந்து அவரை வழியனுப்ப வருவார்கள். ஆனால் இன்று தயாநிதி மாறன் விமான் நிலையத்திற்கு வந்த போது மாநில அரசின் ‘புரோட்டக்கல்’ ஊழியர்கள் வரவில்லை. உயர் காவல்துறை அதிகாரிகளும் வரவில்லை. அவருடைய பாதுகாப்பு அதிகாரி மட்டுமே வந்தார்.

தயாநிதி மாறன் துறையைச் சேர்ந்த தபால்துறை அதிகாரி விமான நிலையத்திற்கு வந்து விமாந்த்திற்கான போர்டிங் கார்டை வாங்கி கொடுத்தார். விமான நிலையத்தில் அவரிடம் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்க முயன்றனர். மதுரை சம்பவம் குறித்து இதுவரை நீங்கள் எதுவும் கருத்து தெரிவுக்கவில்லையே என்று அவரிடம் கேட்கப்பட்டது . அவர் பதில் ஏதும் கூறவில்லை.

நீங்கள் மத்திய அமைச்சராக இருப்பதால் சிபிஐ விசாரணையில் தலயிட கூடும் என்று கூறப்படுகிறதே? என்று தொலைக்காட்சி நிருபர்கள் தங்கள் மைக்குகளை நீட்டி கேட்ட போது, மைக்குகளை தட்டிவிட்டு அவர் பதில் ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று விட்டார். கோவையில் இருந்து தயாநிதி மாறன் ஊட்டி செல்லவிருப்பதாக கூறப்படுகிறது. அங்கு ஓய்வெடுத்து விட்டு அவர் திங்கட்கிழமை புதுடெல்லி சென்று ராஜினாம கடிதத்தை கொடுக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.

நன்றி: மாலை சுடர்

விரிவான தகவல்களின் சுட்டிகளை கொடுத்தமைக்கு மிகவும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர் விடயத்தில் கருணாநிதி அடக்கி வாசிப்பதற்கு இந்த மத்திய அமைச்சரின் ஆலோசனைகளும் ஒரு காரணம் என இங்குள்ள தமிழ்நாட்டு நண்பர்கள் சொல்வார்கள். ஆனால் தமிழ்நாட்டை தொழில்துறை ரீதியில் அபிவிருத்தி செய்ய நல்ல திட்டங்கள் வைத்திருந்தார் எனக் கேள்விப்பட்டேன். இளம் அமைச்சர். தமிழகத்திற்கு இழப்புத்தான் என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாறன் என்ற அரசியல் கற்றுக்குட்டியின் அதிகப்பிரங்கித்தனத்திற்குக

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயாநிதி மாறன் தனது மத்திய அமைச்சர் பதவியை

ராஜினாமா செய்துவிட்டதாக சன் டிவியில் ஃபிளாஸ் செய்தி ஓடுகிறது.

"வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதைதான்" இந்த மாறன் குடும்பம், இன்று கலைஜருக்கு செய்தது! ஏணியில் ஈறி விட்டு, ஏற உதைந்தவனேயே எட்டி உதைத்த கும்பலாக மாறன் குடும்பம்!! .... கலைஜருக்கு ஓர் கருணா!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.