Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை

Featured Replies

உலக கிண்ண கிரிக்கெட்டில் மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை சரியாகக் கடைப்பிடிக்கவில்லை

* மத்தியஸ்தர் வெங்கட்ராகவன்

"முடிவடைந்துள்ள உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், அனுபவம் வாய்ந்த மத்தியஸ்தர்கள் மத்தியஸ்தம் வகித்த போதிலும் இவர்கள் வழங்கிய பல தீர்ப்புகள் பெரும் சர்ச்சையையே ஏற்படுத்தியுள்ளன. இதற்கு முக்கிய காரணம், கிரிக்கெட் விதிகளை மத்தியஸ்தர்கள் அவ்வப்போது மறந்து செயற்படுவது தான் காரணம்".

இவ்வாறு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற சர்வதேச கிரிக்கெட் மத்தியஸ்தருமான வெங்கட் ராகவன் தெரிவித்தார். அவர் இதுபற்றி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;

போட்டிகளின் போது, மத்தியஸ்தர்கள், வழங்கிய LBW முறையிலான பல தவறான தீர்ப்புகளினால் துடுப்பாட்ட வீரர்கள், மனக் கசப்புடனும் முகத்தை சுழித்த வண்ணம் மைதானத்தை விட்டு வெளியேறுவதும், சில வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறும் போது மத்தியஸ்தர்களை முறைத்துப் பார்த்த வண்ணம் வெளியேறுவதையும் நாம் பார்க்கின்றோம்.

மத்தியஸ்தர்கள் வழங்கும் LBW முறையிலான தீர்ப்புகள், சரியா, பிழையா என்பதை, தொலைக்காட்சியின் மூலம் உடனடியாவே காணக்கூடியதாக இருக்கின்றது. கிரிக்கெட் ஆட்டத்தை, இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தொலைக்காட்சிகள் மூலம் பார்க்கின்றார்கள். மத்தியஸ்தர்கள் கொடுக்கும் தீர்ப்பு பிழையானது என்பதை தொலைக்காட்சிகள் மூலம் மக்கள் பார்க்கும் போது மத்தியஸ்தர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைவதுடன், அவர்கள் மீது வெறுப்பையும் ஏற்படுத்திவிடுகின்றது.

இலங்கை, நியூஸிலாந்து அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றபோதிலும், இலங்கை வீரர்களுக்கு எதிராக வழங்கப்பட்ட LBW முறையிலான தீர்ப்புகள் பிழையானது என்பதை நாம் காணக்கூடியதாகவே இருந்தது.

மத்தியஸ்தர்கள் விதிமுறைகளை மறந்து செயல்பட்டதை இலங்கை அவுஸ்திரேலிய இறுதி ஆட்டத்திலும் நாம் காணக்கூடியதாக இருந்தது.

மழை காரணமாக இறுதி ஆட்டம் 38 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது. அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்து ஆடிய பின்பு இலங்கை அணி துடுப்பெடுத்து ஆடும்போது, இறுதிக் கட்டத்தில் 2 ஓவர்களும், 5 பந்துகளும் மிகுதி இருக்கும் போது, போதிய வெளிச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதை இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர்களும் ஏற்றுக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார்கள்.

இந்தக் கட்டத்தில், அவுஸ்திரேலிய அணி வீரர்கள், தாங்கள் தான் "உலக சாம்பியன்" என்ற ஆர்ப்பரிப்பில் ஒருவுரை ஒருவர் கட்டித்தழுவி கரகோஷமிட்டனர். சிறிது நேரத்தின் பின்பு, மிகுதி ஓவர்களையும் வீச வேண்டுமென அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கிபொண்டிங்கிடம் மத்தியஸ்தர்கள் தெரிவித்தபோது, வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த இடத்தில்தான் மத்தியஸ்தர்கள் மிகப்பெரிய தவறை இழைத்துவிட்டார்கள். ஆட்டம் நிறுத்தப்பட்ட நேரத்தில் இருந்து ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்த இடைவெளி நேரத்தை மத்தியஸ்தர்கள் கணித்திருக்க வேண்டும். இதுதான் கிரிக்கெட் ஆட்டவிதி.

20 நிமிடங்களின் பின்புதான் ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. ஒரு ஓவர் பந்துவீச, கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் பிடிக்கும், மிகுதி ஓவர்கள் 3 ஐயும் வீசுவதற்கு 12 நிமிடங்கள் பிடிக்கும். இதன்படி போதிய வெளிச்சம் இல்லாமல் ஆட்டம் நிறுத்தப்படும் போது, ஆட்டம் முடிவடைந்துவிட்டது என்று தான் மத்தியஸ்தர்கள், அறிவித்திருக்க வேண்டும். இதுதான் கிரிக்கெட் ஆட்டவிதி, இதை மத்தியஸ்தர்கள் மறந்து, மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தது. மிகப்பெரிய தவறாகும். இதை போட்டி மத்தியஸ்தரான ஜக்குரோவே ஒப்புக்கொண்டுள்ளார்.

போட்டி மத்தியஸ்தரான ஜக்குரோ இதுபற்றி கருத்துத் தெரிவிக்கையில்;

இறுதி ஆட்டத்துக்கு 5 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழுவே கடமையாற்றினோம். அதாவது, மைதான மத்தியஸ்தர்களான, ஸ்ரப்க்ணர், அலிங்ரர், 3 ஆவது மத்தியஸ்தரான றூடிகொட்சன், அவரின் உதவியாளரான பில்லிபோடன்,போட்டி மத்தியஸ்தரான நான் ஆகிய 5 பேர் அடங்கிய மத்தியஸ்தர் குழு தான் ஆலோசனை நடத்தி இந்த முடிவை எடுத்தோம். இந்த முடிவு, மிகப்பெரிய தவறானதுடன் இது ஒரு கேலிக்கூத்தாகும்.

இது எங்களின் தவறாகும். இதை எந்த ஒரு மத்தியஸ்தரின் தவறு என்றும் கருதக்கூடாது. இது போட்டியை கட்டுப்படுத்தி நடத்த ஒரு குழு எடுத்த முடிவாகும். இந்த முடிவு ஒரு தவறான முடிவு என்பதை நான் ஒப்புக்கொள்கின்றேன். ஒரு நெருக்கடியான நிலையில் இவ்வாறான ஒரு முடிவை எடுப்பது மிகவும் கடினமான நிலை என்று தான் நினைக்கின்றேன். எனவே, இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்று, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றே நான் தெரிவிக்கின்றேன் என்று தெரிவித்தார்.

"டக்வோர்த் லூயிஸ் முறை" என்ன என்பதை, வெங்கட்ராகவன் விளக்கிக் கூறுகையில்;

50 ஓவர்களில் முதலில் துடுப்பெடுத்து ஆடுகிற அணி 250 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருந்தால், அதை "கம்பியூட்டரில்" தெரிவித்து 21 ஆவது ஓவரில் மழை காரணமாகவோ அல்லது போதிய வெளிச்சமின்மையினால் ஆட்டம் நிறுத்தப்படும் போது, எதிரணி எவ்வளவு ஓட்டங்களை எடுத்திருக்க வேண்டும் என்பதை "கம்பியூட்டர்" மிகத் தெளிவாகத் தெரிவிக்கும். இந்த முறையில் எதிரணியினர் விக்கெட்டுகளை இழக்காமல் இருப்பது தான் மிக மிக முக்கியமானது.

எதிரணியினர் ஆட்டம் நிறுத்தப்படும் போது, 20 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தால், அதில் எந்தவிதமான நன்மையும் கிடையாது. இவ்வணி 2 விக்கெட்டுகளை இழந்து 80 ஓட்டங்களை எடுத்திருந்தால், அந்த அணி நல்ல நிலையில் இருக்கின்றது என்பது தான் கணிப்பாகும். இதன்படி எதிர்த்தாடும் அணியினர் தங்களது துடுப்பாட்ட கணிப்பை மிக துல்லியமாக கருத்தில் கொள்ள வேண்டும்.

டக்வோர்த் லூயிஸ் முறைக்கு ஒரு அணி தள்ளப்படும் போது, 20 ஆவது ஓவரில் இருந்து, 50 ஓவர் வரை ஒரு விக்கெட் இழப்புக்கு என்ன கணிப்பு, 2 ஆவது விக்கெட் இழப்புக்கு என்ன கணிப்பு என்று அந்த கம்பியூட்டர் மிகத் தெளிவாகத் தெரிவிக்கும். ஆகவே, இதில் விக்கெட்டுகளை இழக்காமல் கணிசமாகத் துடுப்பெடுத்து ஆடுவது தான் மிக மிக முக்கியமாகும் என்று வெங்கட்ராகவன் தெரிவித்தார்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.