Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பிகவின் கைது பாராளுமன்ற சம்பிரதாயங்களின் வரலாறு காணாத இழுக்கு : கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தெரிவிப்பு

Featured Replies

(எம்.மனோசித்ரா)

சம்பிக ரணவகவின் கைது இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்படாத இழுக்கு என சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற கட்சி தலைவர்கள்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

karujayasuriya.jpg

மேலும் பொலிஸ் ஆணைக்குழுவின் அவதானத்திற்கு கொண்டுச் செல்லவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கட்சி தலைவர் கூட்டம் தொடர்பில் சபாநாயகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 

சபாநாயகர் கருஜய சூரிய தலைமையில் பாராளுமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்ற கட்டட தொகுதியில் நடைபெற்றது.

8 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது அமர்வு எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த அமர்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.  

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தையடுத்து பிற்பகல் 12.30 மணிக்கு கட்சி தலைவர்கள் கூட்டம் நடாத்த இதன் போது தீர்மானிக்கப்பட்டது.  இதன் போது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதியிலிருந்து சபையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய முறைமைகள் குறித்து அவதானம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

ஜனவரி மாதம் 3 ஆம் திகதி பிற்பகல் 1 மணி முதல் மாலை 6 மணி வரை மீண்டும் பாராளுமன்ற அமர்வை கூட்டுவதற்கும் இன்று நடைபெற்ற கட்சி தலைவர் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இதன் போது புதிய பாராளுமன்ற உறுப்பினர் சபாநாயகர் முன்னிலையில் பதவியேற்றுக் கொள்ள உள்ளார். சபாநாயகர் கருஜய சூரிய பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சி தலைவராக அறிவித்தல் மற்றும் சிம்மாசன உரையின் அறிவிப்புக்களை ஒழுங்குமுறைப்படி அறிவிப்பதற்கும் கட்சி தலைவர்களுடனான சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சபாநாயகருக்கு காணப்படும் அதிகாரங்களுக்கு அமைய ஜனவரி 3 ஆம் திகதி அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஆசனத்தை ஒதுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இதன் போது கட்சி தலைவர்களுக்கு அறிவித்தார். 

பாராளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகிய பதவிகள் தொடர்பிலும் ஜனவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் அறியப்படுத்துமாறு ஆளுந்தரப்பினர் சார்பில் கலந்து கொண்டவர்களிடம் சபாநாயகர் கருஜய சூரிய அறிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக ரணவக்க கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் இதன் போது அதிக அவதானம் செலுத்தப்பட்டது.

அவர் கைது செய்யப்பட்டமை பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு முரணானது என்பதே ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரதான நிலைப்பாடாக இன்றைய கட்சி தலைவர் கூட்டத்தில் வெளிப்படுத்தப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சம்பவத்துடன் தொடர்புபட்ட அதிகாரிகள் சபாநாயகரை சந்தித்து தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. கைது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழுவின் கவனத்தின் கொண்டு செல்வதற்கும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71643

  • தொடங்கியவர்

சபாநாயகர் கருஜய சூரிய பல தரப்புக்களாலும் மதிக்கப்படுவர்.

அவரின் இந்த கூற்று, சம்பிக ரணவகவின் கைது இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற சம்பிரதாயங்களுக்கு ஏற்படாத இழுக்கு,  அரச தரப்பை சினம் கொள்ளவே செய்யும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.