Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகள் மீதான தடை சரியா? தவறா?

Featured Replies

புலிகள் மீதான தடை சரியா? தவறா?

-சோ.ஜெயமுரளி-

இலங்கைத் தீவின் இனக்குழும முரண்பாட்டை சமாதான முறை வழியில் தீர்த்து வைப்பதற்கு ஏதுவாக பிரித்தானியா, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை விலக்கிக் கொள்ள வேண்டுமெனவும் புலிகளின் தலைமைப் பேச்சுவார்த்தையாளரை அழைத்து அவர்களின் வாதத்தை பிரித்தானிய பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் குரல்கள் பலமாக ஒலித்துள்ளதை தொடர்ந்து தென்னிலங்கை அரசியல்வாதிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென கடந்த மே 02 ஆம் திகதி வெளியான இவ் விவகாரத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் 3 மணி நேரமாக இடம்பெற்ற இலங்கை தொடர்பான விவாதமே காரணம்.

`இலங்கைத் தமிழர்களுக்கான நீதி மற்றும் கௌரவத்துடன் கூடிய சமாதானத்தை ஊக்குவித்தல்' (Promoting Peace with Justice and Dignity for the Tamils in the Island of Sri Lanka) என்ற நோக்கத்துடன் கடந்த மே முதலாம் திகதி அதாவது, இந்த பாராளுமன்ற விவாதத்துக்கு ஒரு நாள் முன்னதாக பிரித்தானியாவின் அனைத்து பிரதான கட்சிகளும் இணைந்து `தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு'வை உருவாக்கியிருந்தன. இக் குழுவுக்கு ஆளும் தொழிற்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் கீத் வாஸ் தலைவராகவும் எதிர்க்கட்சியான தாராள ஜனநாயக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சைமன் ஹியூக்ஸ் உதவித் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மே இரண்டாம் திகதி புதன்கிழமை பிற்பகல் 2.48 மணிக்கு இலங்கையின் இனக்குழும முரண்பாடு குறித்த அந்த மூன்று மணி நேரவிவாதம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஆரம்பமானது. (www.publications parliment.uk/ pa/cm 200607/cmhansrd/cm 070502/debtext/70502 - 0009.htm).

பிரித்தானியாவின் மத்திய கிழக்குக்கான அமைச்சரும் இணை வெளிவிவகார அமைச்சருமான கலாநிதி கிம் குவெல்ஸ் விவாதத்தை தொடக்கி வைத்து உரையாற்றினார்.

அவர் தனது உரையில்: "இலங்கையிலுள்ள சமகால நிலைவரம் குறித்து இன்று இச்சந்தர்ப்பத்தையெடுத்துக் கொள்ளலாமெனக் கருதுகின்றேன். இந்த முக்கியமான விடயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொண்டுள்ள அவை உறுப்பினர்களுக்கு எனது நன்றிகள். அங்கு (இலங்கையில்) வன்முறைகள் கட்டுமீறிச் சென்று கொண்டுள்ளன. அந்த அழகிய தீவில் மக்கள் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த விவாதம் இந்த அவை உறுப்பினர்களின் கரிசனைகளிலிருந்தான வெளிப்பாடாக அமைய வேண்டுமென சபையிடம் கேட்டுக் கொள்கின்றேன். இந்த விவாதம் இலங்கை அரசியலின் எந்தவொரு பிரிவினராலேயோ அல்லது பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையரிலுள்ள எந்தவொரு பிரிவினராலேயோ அதாவது விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அல்லது எதிரானவர்களினாலேயோ நடத்தப்படும் ஒன்றல்ல.

ஒரு வருடத்துக்கு முன்னர் இலங்கை குறித்த விவாதமொன்றில் கலந்து கொண்டு, இலங்கை அரசும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தைகளில் தமது முழுமையான ஈடுபாட்டை காட்ட வேண்டுமென வலியுறுத்தியிருந்தேன்.

2006 ஆம் ஆண்டு பெப்ரவரியில் ஜெனீவாவில் மூன்று வருடங்களுக்கு பின் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் பொழுது, இலங்கை அரசாங்கம், தனது பாதுகாப்பு படைகள் தவிர்ந்த எந்தவொரு ஆயுதக் குழுவோ அல்லது தனி நபரோ நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அனுமதிக்கமாட்டோமென உறுதியளித்திருந்தது. அதேபோல், விடுதலைப் புலிகளும் தமது பங்குக்கு அரச படைகளுக்கு எதிராக வன்முறைகளில் ஈடுபடமாட்டோமென உறுதியளித்திருந்தனர்.

துன்பியலாக, அந்த ஈடுபாடுகள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்து கிடப்பிலேயே போடப்பட்டுள்ளன. கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக, அங்கு மோசமான வன்முறைகள் நடைபெறுவதனையே நாம் அவதானிக்கின்றோம். துணை இராணுவக் குழுக்களினால் மோசமான படுகொலைகள் காணாமல், போகடிக்கப்படுதல், இடையூறுகள் மற்றும் வன்முறைகள் என்பன பொதுவாக இடம்பெறுகின்றன. இந்த வன்முறைகள் வலுவான நம்பிக்கையீனங்களுக்கும் பிளவுபடுத்தப்படுதல்களுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

'' புலிகள் மீதான தடை சரியா? தவறா? "

நன்றி இறைவன் நல்ல ஒரு செய்தியை பதிவு செய்திருக்கின்றீர்கள்.

விடுதலைப் புலிகள் மீதான தடை விடயம் அந்தந்த நாட்டுச்சட்ட திருத்தங்களையும், அரசியலையும் பொறுத்தது.

அதாவது இந்தத் தடைமூலம் ஸ்ரீலங்காவை தங்களது நட்பு நாடாக உறுதிப் படுத்தியிருக்கினம்.

எங்களுக்கு இதனாலை ஒரு பாதிப்புமில்லை, ஏனென்றால் எங்களுக்கு இவங்க ஏதாவது நன்மை செய்திருந்தால் தானே நாம் இதைப்பற்றி பெரிதுபடுத்துவதிற்கு.

ஆனால் இன்று எங்களுடன் பேச விருப்பமாம், எதிரியாகவிருந்தாலும் வரவேற்கும் இனம்தான் தமிழினம் வரட்டும் வரவேற்போம்.

வருகிறவை எங்களுக்கு கட்டளையிட அருகதையில்லாமல் தான் வருகினம், இது எங்களுக்கொரு மிகப்பெரிய சாதகமான சூழ்நிலையாகும்.

எங்களுடைய தடையை நீக்குங்கோ என்று நாங்கள் மண்டியிடவேண்டிய அவசியம் எங்களுக்கில்லை, சிங்களவனுக்கு பலமாக அடியாதையுங்கோ என்று சிலவேளை எங்களிடம் மான்றாடினாலும் மன்றாடுவினம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.