Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை

நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க தீவிர தேடுதல் நடவடிக்கை

கடந்த 26ம் திகதி இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் படகு ஒன்று நெடுந்தீவு பகுதியில் மீட்கப்பட்டுள்ளது. அந்தப் படகில் நான்கு பேர் வந்திறங்கியுள்ளனர் என புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது. எனினும் அவ்வாறு வந்து இறங்கியவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர் என இன்று வரை பாதுகாப்பு தரப்பினரால் கண்டு பிடிக்க முடியவில்லை.இதனால் நெடுந்தீவில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவு செல்வோர் மற்றும் அங்கிருந்து யாழ்ப்பாணம் வருவோர் தொடர்பில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மர்மப் படகில் வந்தவர்கள் இந்தியாவில் உள்ள ஈழ அகதிகளா? பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களா? அல்லது கடத்தல்காரர்களா? என பல கோணங்களில் முப்படையினரும் விசாரணையில் களமிறங்கியுள்ளனர்.அத்துடன் நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பவர்கள இறங்கு துறையில் வைத்து அவர்களது விபரங்கள் பதியப்பட்டு அடையாள அட்டை ஊடாக உறுதிப்படுத்தப்படட பின்னரே கடற்படையினரால் அனுமதிக்கப்படுகின்றனர்.

நெடுந்தீவில் உள்ள வீடுகளுக்கு செல்லும் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் வீடுகளில் உள்ளவர்களின் விபரங்களை சேகரித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.நெடுந்தீவு கடற்கரையில் மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க, அப்பகுதியில் உள்ள வீடுகளில்,இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிட்டு வருவதுடன், பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/நெடுந்தீவு-கடற்கரையில்-ம/

 

"அப்பகுதியில் உள்ள வீடுகளில்,இராணுவம் மற்றும் கடற்படையினரால் சோதனையிட்டு வருவதுடன்"

மக்களை ஒரு உளவியல் பயத்திற்குள் வைத்திருக்கும் சிங்கள அரசின் புருடாவாக (மர்மப் படகு ஒன்றில் வந்து இறங்கியவர்களைப் பிடிக்க), இருக்கலாம். 

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த நான்கு அகதிகள் கைதாகி விடுதலை

 

இராமேஸ்வரத்திலிருந்து நாட்டுப்படகை கடத்தி 4 அகதிகள் இலங்கைக்கு தப்பி வந்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியிருந்த அந்தோணி குருஸ், முஜிபுர் ரஹ் மான் ஆகிய இருவரும் வேறொரு முகாமில் தங்கியிருந்த இரண்டு பேருடன் இராமேஸ் வரத்திலிருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு அனுமதியின்றி வந்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம்-நெடுந்தீவு கடற்கரைக்கு, இந்த நாட்டுப்படகிலிருந்து இலங்கையைச் சேர்ந்த மூன்று ஆண் அகதிகளும் ஒரு பெண் அகதியும் நேற்று சனிக் கிழமை அதிகாலை கரை இறங்கியுள்ளனர். இவர்களை நெடுந்தீவு பொலிஸார் கைது செய்து பின்னர் ஆவணங்களை சரிபார்த்த பின்னர் விடுவித்துள்ளனர்.        

http://valampurii.lk/valampurii/content.php?id=20242&ctype=news

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.