Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை அகதிகளிடம் ஜுனியர் விகடன் கருத்துக் கேட்பு... விகடன் நிருபர்கள் மீது வழக்கு!

Featured Replies

``இந்தியாவிலிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும்'', ``இலங்கை அகதிகள் 90 சதவிகிதம்பேர் இலங்கைக்குத் திரும்பிச் செல்லத்தான் விரும்புகிறார்கள்'', ``இலங்கை அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதுதான் சரியான தீர்வு'' - குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் முக்கியமாக எதிரொலித்துக்கொண்டிருப்பது இப்படிப்பட்ட குரல்கள்தான்.

இந்நிலையில், சம்பந்தபட்டவர்களான இலங்கைத் தமிழ் அகதிகள் மனநிலை என்ன என்பதை தெரிந்துகொண்டு ஜுனியர் விகடனில் சிறப்புக் கட்டுரை வெளியிடலாம் எனத் திட்டமிட்டோம். இதற்காக தமிழகம் முழுக்கப் பரவியிருக்கும் அம் மக்களைச் சந்தித்து கருத்துகளைச் சேகரித்தனர் விகடன் நிருபர்கள். கருத்துக்கேட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், கன்னியாகுமரி மாவட்ட நிருபர் சிந்து மற்றும் புகைப்படக்காரர் ராம்குமார் இருவர் மீதும் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிரிவு 447- குற்றமுறு அத்துமீறி நுழைதல் (குற்றம்புரியும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைதல்), பிரிவு-188 அரசாங்க அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்படியாமல் இருத்தல், அதன் காரணமாக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்; பிரிவு-505 (1) பி மக்களிடம் பயம் அல்லது பீதி ஏற்படுத்தி அரசுக்கு எதிராக குற்றம் புரியும் வகையில் பொய்யான செய்திகளைப் பரப்புதல், விநியோகித்தல் ஆகியவைதான் அந்தப் பிரிவுகள். இதில் பிரிவு-505 (1) பி, என்பது பிணையில் விடமுடியாத சட்டப்பிரிவாகும்.

 

பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன போலீஸாரின் இந்த அணுகுமுறை.

கருத்துக்கேட்புப் பணிகள் தொடர்பான மேலதிக விவரங்களும், வழக்கைச் சட்டப்படி எதிர்கொள்வது தொடர்பான விவரங்களும் விரைவில் தெரிவிக்கப்படும்..!

https://www.vikatan.com/news/tamilnadu/kanyakumari-police-filed-a-case-against-junior-vikatan-reporters

  • கருத்துக்கள உறவுகள்

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பத்திரிகை  சுதந்திரம்  உள்ளது என்கிறார்கள்.
இப்படி வழக்குப் போட்டால்,  அதற்கு என்ன அர்த்தம்?

  • தொடங்கியவர்
7 hours ago, தமிழ் சிறி said:

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டில், பத்திரிகை  சுதந்திரம்  உள்ளது என்கிறார்கள்.
இப்படி வழக்குப் போட்டால்,  அதற்கு என்ன அர்த்தம்?

கேள்வி கேட்டால் உங்கள் மீதும் வழக்கு போடுவோம். நாங்கள் தானே 'பெரிய' சனநாயகம் 🙄

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ampanai said:

பத்திரிகை சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன போலீஸாரின் இந்த அணுகுமுறை.

விகடனுக்கு வழக்கும், கைதும் புதிதல்ல. 1987இல் அதன் ஆசிரயர் எஸ்.பாலசுப்ரமணியம் அட்டைப்படக் கேலிச்சித்திரத்திற்காக எம்ஜிஆர் ஆட்சியில் கைது செய்யப்பட்டு மூன்று நாள் சிறையில் இருந்திருக்கிறார்.

அந்த அட்டைப்பட நகைச்சுவை,

ஒரு அரசியல் கட்சி மேடை. நாற்காலியில் 4, 5 அரசியல்வாதிகள் அமர்ந்திருப்பார்கள். மேடைக்கு கீழே இருப்பவர்களில் ஒருவர் கேட்கிறார்.

“மேடையில் இருப்பவர்களில் யார் எம்.எல்..? யார் மந்திரி?”

இன்னொருவர் பதில் கூறுகிறார்.

ஜேப்படி திருடன் மாதிரி இருப்பவன் எம்.எல்.. முகமூடி திருடன் மாதிரி இருப்பவன் மந்திரி

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.