Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் த.தே.கூ உடன் இணைந்து செயற்படும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கிழக்கில் த.தே.கூ உடன் இணைந்து செயற்படும்!

SudarSeithy-1540.jpg

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நாடாளுமன்ற தேர்தலிலும், மாகாணசபை தேர்தலிலும் சேர்ந்து இயங்குவதற்கு தயாரான நிலையில் இருக்கின்றது என கிழக்கு மாகாண முன்னாள் உறுப்பினர் இரா.துரைரெத்தினம் இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் அமைந்திருக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கட்சி காரியாலயத்தில் நேற்று ஊடகவியலாளர் மாநாடு இடம்பெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த மாதம் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் கூட்டப்பட்ட கட்சி கூட்டத்தில் மத்தியகுழு தெளிவாக தீர்மானம் எடுத்துள்ளது.

அந்த தீர்மானத்தில் கிழக்கு மாகாணத்தை பொறுத்தளவில் எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கியத்துக்கு தடையாக இருந்து விடக்கூடாது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகரிக்க வைப்பதும் கிழக்கு மாகாண சபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதற்கும் எமது கட்சி கிழக்கு மாகாணத்தில் ஒற்றுமைப்பட்டால் மட்டும் தான் அது முடியும்.

 
எனவே, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியை பெறுத்தளவில் எந்த சந்தர்ப்பத்திலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர்களுடைய வாக்குகளை பிரிப்பதற்கு உறுதுணையாக நிற்காது.

அதேவேளை தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்காக எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேசுவதற்கான தயார் நிலையில் இருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பாக எமது கட்சியில் நாங்கள் வடக்கு நிலைமைகள் வேறு. கிழக்கு நிலைமைகள் வேறு. வடக்கை பெறுத்தமட்டில் யார் போட்டியிட்டாலும் தமிழ் பிரதிநிதிகள் வரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கின்றது.

ஆனால், கிழக்கை பெறுத்தவரையில் கடந்த 40 வருடமாக அபிவிருத்தியிலும் அரசியல் ரீதியாக, இன ரீதியாகவும் வீதசார அடிப்படையிலும் பாதிக்கப்பட் சமூகம் தமிழ் சமூகம்.

இதன்அடிப்படையில், மக்கள் பல கோரிக்கைகளை எம்மிடம் முன்வைத்திருக்கின்றார்கள்.

எனவே, எதிர்காலத்தில் தமிழர்களுடைய வாக்குகள் பிரிபடாமல் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பாத்துக் கொள்ளக்கூடிய முழுப்பொறுப்பும் எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை மக்கள் தந்திருக்கின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.sudarseithy.com/?p=36989

நல்ல விடயம்.

சுரேஷ் பிரேமசந்திரன் இதட்கு அனுமதி வழங்கிவிடடார? அப்போ வடக்கு தலைமை கிழக்கு தலைமை எண்டு இரண்டு அணிகளா?

இருந்தாலும் கிழக்கின் இந்த ஒற்றுமையை வரவேட்கிறோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.