Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலகில் எந்த நாடு எம்மை எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும்

Featured Replies

உலகில் எந்த நாடு எம்மை எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும்

உலகில் எந்த நாடு எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போரை கைவிடமாட்டோமென சூளுரைக்கும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மிக விரைவில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதற்கெதிராக உயிர் நீத்த படையினரின் அபிலாஷைகளை இந்த அரசாங்கம் நிறைவேற்றுமென்றும் உறுதியளித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற "விருமபவ சுரகிமு" (வீரமகனின் தாயைப் பாதுகாப்போம்) என்ற திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

யுத்த களத்தில் மரணமாகும் படையினரின் தாய்மாருக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் பிரதமரின் பாரியாரான குசும் விக்கிரமநாயக்கவின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு சேவா வனிதா இயக்கமும் ஆதரவை வழங்கியிருந்தது. இந்நிகழ்வில் ஜனாதிபதியின் துணைவியார் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவும் கலந்து கொண்டார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

இன்று சில நாடுகள் எம்மை விமர்சிக்கின்றன. குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றன. எதை எவர் சொன்னாலும் நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். எந்த நாடு எதிர்த்தாலும், எவர் எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போரை கைவிடமாட்டோம். அது அழித்து ஒடுக்கப்படும்.

எமது நாட்டிற்கு வெளிநாடுகள் உதவி செய்யலாம். ஆனால், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. அதனை நாம் தீர்த்துக் கொள்வோம். உதவி செய்யுங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடாதீர்கள்.

நாட்டின் சுயாதிபத்தியம், இறைமை, கௌரவத்தைக் காட்டிக் கொடுக்க முடியாது. எமது நாட்டை பாதுகாப்பதற்காக உயிரை அர்ப்பணம் செய்த படையினரின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அந்தக் கடமையை நிறைவேற்ற முடியாதென்றால் அந்த அரசாங்கம் தேவையில்லை.

எமது அரசாங்கம் நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குகின்றது. எனவே, வெகுவிரைவில் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து அதனை அழிப்பதற்காக உயிர் நீத்த படையினரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவோம்.

இன்று சிலர் யுத்தத்தை நிறுத்த முடியாதா எனக் கேட்கின்றனர். வேறு சிலர் இந்த யுத்தம் இனவாத யுத்தத்திற்கு வழிவகுக்குமே என வினவுகின்றனர். இவ்வாறு கேள்வி கேட்போர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும் முடியாவிட்டால் அடக்குவதற்கும் அதேநேரம் தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்குமான யுத்தமாகும்.

பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு எதிர்த் தாக்குதல்களை அரசாங்கம் நடத்தவில்லை. அத்தோடு எங்கு தாக்குதல்களை மேற்கொள்வது, எப்போது மேற்கொள்வது என வியூகம் வகுத்து யுத்தத்தை படையினரே முன்னெடுக்கின்றனர். அதற்கான உதவிகளையே அரசு வழங்குகிறது.

கடந்த காலங்களில் வெற்றிகளைக் கண்ட பயங்கரவாதிகள் இன்று தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றனர்.

இதுபோன்ற பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்தை மேற்கொள்ளும்போது அனைவரையும் அணைத்துக் கொண்டு போக முடியாது. சிலரைக் கைவிட வேண்டிய நிலைமையும் உருவாகும்.

இன்று இந்த இடத்தில் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தமைக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும் இலங்கை பாதுகாக்கப்படவும் படையினரின் உயிர்த் தியாகமே காரணமாகும். இல்லாவிட்டால் இலங்கையென்ற நாடே இல்லாது போயிருக்கும்.

பௌத்த தர்ம முறைப்படி குடும்ப வாழ்க்கையை, எமது சமுதாயத்தை கட்டிக் காத்தோம். வெள்ளையர்களின் வருகையின் பின்னரே முதியோர் இல்லங்கள் உருவாகின. எனவே, படையினரின் தாய்மாரை பாதுகாக்கும் இத்திட்டமானது அவர்களை முதியோர் நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் திட்டமாக மாறிவிடாது கண்காணிக்க வேண்டும். அவ்வாறில்லையேல் எமது பௌத்த சமூக அமைப்பு சீர்குலைந்துவிடும்.

நாட்டுக்காக உயிர் நீத்த படையினரின் தாய்மாருக்கு வங்கிப் புத்தகத்தை வழங்குவது மட்டும் போதாது. அதற்கு மேலே சென்று நிரந்தரமான உதவி வழங்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும். யுத்த காலத்தில் இன்று வறுமையில் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த வீரர்களே போராடுகின்றனர். அவர்களை பாதுகாக்க வேண்டியது எமது கடமையாகும்.

பயங்கரவாதக் குழுவுக்கு பலத்தை வழங்காது அவர்களை அடக்கி ஜனநாயக வழிக்கு கொண்டு வர முயற்சிப்போம். இல்லாவிட்டால் வேறுவிதத்தில் அதனை ஒடுக்குவோம். இதற்காக ஒன்றிணைவோமென்றும் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

இந்நிகழ்வில் யுத்தத்தில் உயிர் நீத்த 104 படையினரின் தாய்மாருக்கு தலா 12,000 ரூபா வீதம் வைப்பிலிடப்பட்ட வங்கிப் புத்தகங்களும் இலச்சினையும் உலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டன.

தினக்குரல்

"உலகில் எந்த நாடு எம்மை எதிர்த்தாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரும்..."

அட தூ!

மற்றையவர்களின் தலையில் மலசலம் கழிக்கும் அமெரிக்காவின் ஜோர்ஜ் புஸ் கூட விடாத இப்படியான ஒரு வீராவேசமான அறிக்கையை நம்மட உதவாக்கரை ரட்ணசிறி விக்கிரமாதித்தன் விட்டுள்ளான். எம்மாம் வீரமடா! வாசிக்கவே புக்கரிக்கிது! ஆனந்தக் கண்ணீர் வருகிது! தட்டச்சு செய்யுபோது கை நடுகிங்கிது! சிறீ லங்கா நாட்டில் இவ்வளவு பெரிய வீரர்களா? நம்பவே முடியவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நாட்டிற்கு வெளிநாடுகள் உதவி செய்யலாம். ஆனால், எமது உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடக்கூடாது. உதவி செய்யுங்கள் உள்நாட்டுப் பிரச்சினைகளில் தலையிடாதீர்கள். :rolleyes::huh::lol: :angry:

Edited by சித்தன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.