Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி பதவி ஒழிப்பு நெடுகிலும் ஒரு பகிடிப் பேச்சு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி பதவி ஒழிப்பு நெடுகிலும் ஒரு பகிடிப் பேச்சு

[14 - May - 2007]

இலங்கை 29 வருடகாலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையின் கீழ் இருந்து வருகிறது. அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அந்த ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டும் அல்லது காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் பேசிக் கொண்டேயிருக்கின்றன. ஆனால், ஒருபோதுமே அது தொடர்பில் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கட்சிகள் மானசீகமாக முன்வந்ததில்லை. கடந்தவாரம் கூட பாராளுமன்றத்தில் சபை முதல்வரான சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக அறிவித்து அதற்கு பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார். தேர்தல் விஞ்ஞாபனங்களில் மக்களுக்கு உறுதியளிக்கப்படும் செயற் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒரு திகதி எல்லையைக் கட்டாயமாக்கக் கோரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் தனிநபர் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சில்வா, `எதிர்க் கட்சியிடமிருந்து ஆதரவு கிடைத்தால் எந்தநேரத்திலும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கு எமது அரசாங்கம் தயாராக இருக்கிறது. ஆதரவளிக்கத் தயாரா, இல்லையா என்பது குறித்து ஐ.தே.க. உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை விடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையைக் கொண்ட அரசியலமைப்பை முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன கொண்டுவந்தபோது, ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக இருந்த திருமதி ஷ்ரீமாவோ பண்டாரநாயக்க அதைக் கடுமையாக எதிர்த்தார். ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிக்க வேண்டுமென்பதே சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. வெஸ்ட்மினிஸ்டர் முறையிலான பாராளுமன்ற ஆட்சிமுறையின் மீது திருமதி பண்டாரநாயக்கவிற்கும் அவரது கட்சிக்கும் இருந்த பற்றுதல்தான் அதற்குக் காரணம் என்று கூறிவிடமுடியாது. ஒழித்துக்கட்ட வேண்டுமென்று நினைத்த அதே ஜனாதிபதி பதவியில் அமர்வதற்காக 1988 டிசம்பர் தேர்தலில் திருமதி பண்டாரநாயக்க போட்டியிட்டு ரணசிங்க பிரேமதாசவிடம் தோல்வி கண்டார். உலகின் முதல் பெண் பிரதமர் என்று பெயரெடுத்த அவரால் பிரேமதாசவிடம் கண்ட தோல்வியை வாழ்வின் இறுதிவரை ஜீரணிக்க முடியவில்லை.

பின்னர் ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில்தான் ஜனாதிபதிப் பதவியை ஒழித்துக்கட்ட வேண்டுமென்ற கோரிக்கை முன்னரைவிடக் கூடுதலான அளவில் வலுப்பெற ஆரம்பித்தது. ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்துவதற்கு ஜெயவர்தனாவுக்கு உறுதுணையாக இருந்தவர்களில் சிலர் கூட பிரேமதாச மீதான வெறுப்புணர்வு காரணமாக இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக உரத்துக் குரல் கொடுத்தனர். 1994 இல் திருமதி குமாரதுங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதாக திகதி குறிப்பிட்டு மக்களுக்கு வாக்குறுதி அளித்தே தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். 11 வருடங்களாக ஜனாதிபதி பதவியின் மட்டுமீறிய அதிகாரங்களையும் வரப்பிரசாதங்களையும் திருமதி குமாரதுங்க அனுபவித்தாரே தவிர, அந்த ஆட்சிமுறையை ஒழிக்கவில்லை. மேலும், ஒரு வருட காலத்துக்கு தன்னால் ஜனாதிபதியாக அதிகாரத்தில் இருக்க முடியவில்லையே என்ற கவலையுடன்தான் அவர் 2005 பிற்பகுதியில் கதிரையிலிருந்து இறங்கினார்.

திருமதி குமாரதுங்கவுக்குப் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவியேற்ற மகிந்த ராஜபக்ஷவும் ஜனாதிபதி பதவி ஒழிப்புக் குறித்து பேசாமல் விடவில்லை. 2005 நவம்பர் தேர்தலுக்காக ஜனதாவிமுக்தி பெரமுனை (ஜே.வி.பி.) யினருடன் செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் தனது முதல் ஆறு வருட பதவிக் காலத்தின் முடிவில் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்று ராஜபக்ஷ உறுதியளித்திருந்தார். அந்த உறுதிமொழி பற்றி அவர் இப்போது ஞாபகத்தில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. ஜனாதிபதிப் பதவியை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அரசியல் கட்சிகளுக்கு பதவி ஆசைகளைக் காட்டி தனது பக்கம் இழுக்கும் வலைகளில்தான் ஜனாதிபதி ராஜபக்ஷ இப்போது ஈடுபட்டிருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கிறது. அவருடன் தேர்தல் காலத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கையைச் செய்து கொண்ட ஜே.வி.பி.யினரும் ஜனாதிபதிப் பதவி ஒழிப்புக் குறித்து அக்கறைப்படுவதில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைப் பொறுத்தவரை, இலங்கையின் ஜனாதிபதியாக வருவதற்காக இரு தேர்தல்களில் போட்டியிட்டு அவர் தோல்வி கண்டார். ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்புக் குறித்து ஒருபோதுமே விக்கிரமசிங்க பேசியதில்லை. அந்தப் பதவி தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டுமென்று ஆசைப்படுபவர்களில் அவர் முக்கியமானவர். தனது உறவுக்காரரான ஜயவர்த்தன இந்த நாட்டுக்கு தந்துவிட்டுச் சென்ற அரியதோர் பொக்கிஷமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை விக்கிரமசிங்க கருதுகிறார்போலும். ஆனால், அப்பதவி அவரை விட்டு தொடர்ச்சியாக நழுவிக் கொண்டிருக்கும் பரிதாபம். ஜனாதிபதி பதவி ஒழிப்புக் குறித்து பாராளுமன்றத்திலும் சரி வெளியிலும் சரி பேசப்படுகின்றவற்றை மக்கள் எந்த அளவுக்கு கரிசனையுடன் நோக்குகிறார்கள் என்பது அடுத்த கேள்வி. கடந்த வாரமும் அந்தப் பதவி ஒழிப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் கேட்கக்கூடியதாக இருந்த பேச்சுக்கள் நாட்டு மக்களை அரசியல்வாதிகள் முட்டாள்கள் என்று நினைத்துச் செயற்படுவதையே உணர்த்தி நிற்கின்றன. உண்மையிலேயே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகளில் எந்தவொன்றுக்குமே விருப்பம் இல்லை. அப்பாவி மக்களின் முதுகில் ஏறி சவாரி செய்வதற்கு மிகவும் பொருத்தமான அந்தப் பதவியை இவர்கள் ஒருபோதும் ஒழிக்கமாட்டார்கள். ஆனால், இடைக்கிடை ஒரு பகிடிப் பேச்சாக ஜனாதிபதி ஒழிப்புக் குறித்து பேசிக்கொண்டேயிருப்பார்கள்.

தினக்குரல்

இப்படி கட்டுரைகள் எழுதி அணில் விக்கிரமாதித்தனின் மனதை நோகடிக்க்கக்கூடாது. அணில் பாவம் ஜனாதிபதி கனவில் மூச்சாக வாழ்கின்றான். வேண்டுமானால், அணிலின் ஆசையும் பூர்த்தி செய்யப்பட்டபின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை கலைக்கப்படலாம். இல்லாவிட்டால், அணிலின் ஆத்துமா சாந்தியடையாது. அது ஆவியாக உலவி சிறீ லங்காவில் மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கும்...

  • கருத்துக்கள உறவுகள்

இவையளுக்கு எதிலதான் பகிடிஇல்லை

இவையள் இதுவரையில கொன்ற புலிகளின் எண்ணிக்கை

மொத்த தமிழினத்தின் தொகையிலும் அதிகம்

ஆனால் இன்னும் யாரைக்கொல்லுறதா அறிக்கைவிடுகினம்

3 மாதத்தில போர் முடியுது என்று சொலலி; 30 வருடமாச்சு

அப்ப இப்பொழுது செய்வதற்கு என்ன பேர்

இரவில வந்து குண்டு போடினம் பேடிப்பயல்கள்

பகல்ல வநது போட ஏலுமே

கடைசிப்பகிடி

நாங்க நூறுதரம் போட்டா அவங்க ரெண்டு தரம் போட்ட என்ன ......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.