Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை.

Featured Replies

க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை.

இலங்கையில் இறுதியாக நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 51 வீதமான மாணவர்கள் சித்தியடையவில்லை என்று சிறிலங்காவின் கல்விப் பொதுப் பரீட்சைகள் ஆணையாளர் அனுரா எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

2,98,358 பாடசாலை மாணவர்கள் உட்பட 5,25,000 மாணவர்கள் இந்த பரீட்சையில் தோற்றி இருந்தனர். இதில் 48.7 வீதமான மாணவர்கள் கல்விப் பொதுத் தராதர உயர்தரத்திற்கு தெரிவாகி உள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றியவர்களில் 21,813 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதில் 4,128 பேர் கொழும்பு மாவட்டம், 3,564 பேர் மத்திய மாகாணம், 3,404 பேர் தென் மாகாணம், 2,668 பேர் சப்ரகமுவ மாகாணம், 2,277 பேர் ஊவா மாகாணம், 2,056 பேர் வடமத்திய மாகாணம், 2,039 பேர் வடமேற்கு மாகாணம், 773 பேர் கிழக்கு மாகாணம், 704 பேர் வடமாகாணம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.

கொழும்பில் உள்ள 9 பாடசாலைகளில் இருந்து ஒரு மாணவனும் சித்தியடையவில்லை. இதே போலவே கோமகமவில் உள்ள 3 பாடசாலைகள், ஜெயவர்த்தனபுரவில் உள்ள 3 பாடசாலைகள், காலியில் உள்ள 12 பாடசாலைகள், அம்பலாங்கொடையில் உள்ள 7 பாடசாலைகள், இரத்தினபுரியில் உள்ள 13 பாடசாலைகள், நாட்டில் உள்ள 40 பிரிவீனா (புத்த மத குருக்களுக்கான) கல்வி நிலையங்கள் ஆகியவற்றில் இருந்தும் ஒரு மாணவனும் சிதியடையவில்லை.

அரசு, கல்விக்கு அதிகளவு நிதியை ஒதுக்கும் போதும் இது துரதிர்ஸ்டவசமானது. பாடப்புத்தகங்கள், ஆய்வுகூடங்கள், ஏனைய பொருட்கள் என பல வசதிகள் இருந்தும் மாணவர்களின் தரம் உயரவில்லை.

ஆங்கிலம் மிகவும் பின்தங்கியதாகவே உள்ளது. ஆங்கில பாடம் எடுத்த 258,975 மாணவர்களில் 63.18 வீதமானவர்கள் சித்தியடையவில்லை. கணிதத்துறையில் 259,263 மாணவர்களில் 57.37 மாணவர்களும், விஞ்ஞானத்தில் தோற்றிய 258,948 மாணவர்களில் 51.65 விகிதமான மாணவர்களும் சித்தியடையவில்லை.

கணிதத்துறையில் உள்ள புவியியல் தொடர்பான வினாக்களுக்கு 90 வீதமான மாணவர்கள் பதிலளக்கவில்லை. காரணம் ஆசிரியர்களுக்கும், கல்வி அதிகாரிகளுக்கும் புவியியல் தெரியாது. கல்விக் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களுக்கு புவியியல் தெரியாது எனவே அவர்களுக்கு அதனை கற்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.

இது தொடர்பான அறிக்கை கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்தவினால் இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

-Puthinam-

Edited by யாழ்வினோ

பரீட்சைக்கு தோற்றியவர்களில் 21,813 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதில் 4,128 பேர் கொழும்பு மாவட்டம், 3,564 பேர் மத்திய மாகாணம், 3,404 பேர் தென் மாகாணம், 2,668 பேர் சப்ரகமுவ மாகாணம், 2,277 பேர் ஊவா மாகாணம், 2,056 பேர் வடமத்திய மாகாணம், 2,039 பேர் வடமேற்கு மாகாணம், 773 பேர் கிழக்கு மாகாணம், 704 பேர் வடமாகாணம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.

படிப்பதற்கு பல வசதிகளையும், சூழ்நிலையையும் கொண்ட தென்பகுதியுடன் ஒப்பிடும்போது படிப்பதற்கானா அடிப்படை வசதிகளற்ற தமிழீழத்தின் நிலமை எவ்வளவோ மேல் போல் இருக்கின்றதே?

தமிழீழ மாணவர்களிற்கு பாராட்டுக்கள்!

  • தொடங்கியவர்

பரீட்சைக்கு தோற்றியவர்களில் 21,813 மாணவர்கள் ஒரு பாடத்திலும் சித்தியடையவில்லை. இதில் 4,128 பேர் கொழும்பு மாவட்டம், 3,564 பேர் மத்திய மாகாணம், 3,404 பேர் தென் மாகாணம், 2,668 பேர் சப்ரகமுவ மாகாணம், 2,277 பேர் ஊவா மாகாணம், 2,056 பேர் வடமத்திய மாகாணம், 2,039 பேர் வடமேற்கு மாகாணம், 773 பேர் கிழக்கு மாகாணம், 704 பேர் வடமாகாணம் ஆகியவற்றை சேர்ந்தவர்கள்.

Edited by யாழ்வினோ

51 வீதம் என்பது மிகப் பெரிய தொகை.

அரசாங்கம் போரில் கூடுதலான கவனம் செலுத்துகிறது.

இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயலாக இருக்கலாம். அனைவரும் படித்து வேறு உத்தியோத்துக்குச் சென்றுவிட்டால் படையணிகளில் யார் இணைவது? :P .அதே நேரம் வடக்குக்கழக்கில் சித்தியடைந்தோர் விகிதத்தை அதிகரிப்பதன் ழூலம் புலிகளில் இணைவோர் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கமாகவிருக்கலாம். :rolleyes:

ஒரு பாடத்திலையும் சித்தி அடையவில்லை என்பதை இன்றுதான் கேள்விப்படுகிறேன், தவறு நேர்ந்திருக்குமோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.