Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலத்தை இழுத்தடிப்பதற்கு புதிய உத்தி கட்டவிழ்கிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தை இழுத்தடிப்பதற்கு

புதிய உத்தி கட்டவிழ்கிறது

நாட்டின் தேசிய இனப்பிரச்சினை விவகாரத்துக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்கான வழி வகைகளை மேற்கொள்ளாமல் இழுத்தடித்து. அதேசமயம் சர்வதேச சமூ கத்தையும் சமாளித்து ஏமாற்றுவதற்கு தென்னிலங்கை அரசு கள் காலத்துக்குக் காலம் பல்வேறு தந்திரோபாயங்களை யும் எத்தனங்களையும் மேற்கொண்டு வந்திருக்கின்றன.

அதுவும்இ போரியல் வழியில் தமிழர்களை அடக்கிஇ இரா ணுவச் செயற்பாட்டின் மூலம் தான் விரும்பும் மேலாதிக்கத் திட்டத்தைத் தீர்வாகத் தமிழர் மீது திணிப்பதற்கு கங்கணம் கட்டிஇ துடியாய்த் துடிக்கும் மஹிந்தரின் அரசோ இந்த ஏமாற் றுத் தந்திரோபாயத்தில் வெகு சாமர்த்தியமாக சாணக் கியமாக காய்களை நகர்த்த முயல்கிறது.

இனப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு என்ற அழுத் தம் சர்வதேச சமூகத்திடம் இருந்து வரும்போதெல்லாம் அதனைச் சமாளிக்க கொழும்பு அரசுகள் முதலில் மேற் கொள்ளும் நடவடிக்கை சர்வகட்சி மாநாட்டையோஇ வட்ட மேசை சந்திப்பையோஇ அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவையோ அல்லது அது போன்ற பிறிதோர் அமைப் பையோ ஸ்தாபிப்பதுதான். இலங்கை இனப்பிரச்சினை மிக மோசமான போராக உருவெடுத்த இந்த முப்பது ஆண்டு காலத்தில் கொழும்பில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்திருந்த தென்னிலங்கைத் தலைவர்கள் எல்லோரும் மேற்கொண்ட தந்திரம் இதுதான். முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்த்தனாஇ ஆர்.பிரேமதாஸாஇ சந்திரிகா குமாரதுங்க முதல் இன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரை கையாண்ட உத்தி இதுவே.

தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைத் தேடுகின்றோம் என்ற பெயரில் இந்த வட்டமேசை மாநாடுகளும்இ சர்வ கட்சிக் கலந்துரையாடல்களும்இ அனைத்துக் கட்சிப் பிரதி நிதிகள் கூட்டமும் காலத்தைக் கபளீகரம் செய்துகொண்டு போகஇ அரசுத் தலைவர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தை மறு புறத்தில் வெற்றிகரமாகக் கொண்டிழுத்து விடுவார்கள்.

இருட்டறைக்குள் இல்லாத கறுப்புப் பூனையைத் தேடியலையும் குருடன் போல இந்த சர்வகட்சிக் கூட்டங் கள் கூடிப் பேசிப் பயனின்றிக் கலைவதுதான் மிச்சம்.

தாம் ஆட்சிக்கு வந்தால் தென்னிலங்கையில் பல தரப் பினருடனும் கலந்துரையாடல் நடத்திஇ இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தென்னிலங்கையின் இணக்கப்பாட்டை மூன்று மாதத்துக்குள் எட்டுவேன் என்று தமது "மஹிந்த சிந் தனை' தேர்தல் விஞ்ஞாபனம் மூலம் தேசத்துக்கு வாக்கு றுதி வழங்கியே அதிகாரத்துக்கு வந்தார் மஹிந்தர். ஆனால் இப்போது பதினெட்டு மாதங்களாகிவிட்டன. இன்னும் ஓர் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. அப்படி தெற்கில் எட்டப்படக் கூடிய இணக்கப்பாடும் தமிழர்களின் பரிசீலனைக்கு எடுக்கப்படக்கூடிய அடிப்படைத் தகுதிகளைக் கொண்டிராத வகையில்தான் அமையும் என்பதும் தெளி வாகிவிட்டது.

இந்தப் பல கட்சிகளின் கூட்டம் அல்லது வட்டமேசை மாநாடு என்ற தந்திரம் முன்னைய ஆட்சியாளர்களால் மீண் டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட உத்தி என்பதால்இ அதே தந்திரோபாயத்தை மீண்டும் மேற்கொண்டுஇ காலத்தை இழுத்தடிக்கும் திட்டத்தை தொடர்ந்து வெற்றிகரமாக நகர்த்திச் செல்லமுடியாத இக்கட்டு உண்டு என்பதை உணர்ந்து கொண்ட மஹிந்தர் காலத்தை இழுத்தடித்து சர்வ தேச சமூகத்தை ஏமாற்ற இப்போது வேறு தந்திரங்களையும் பயன்படுத்த விழைகிறார்.

முதலிலே பிரதான கட்சிகளிடையே இனப்பிரச்சி னைத் தீர்வுக்கான கூட்டிணக்கம் என்ற கயிற்றை அவர் அவிழ்த்துவிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற முறையில் தாமும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் என்ற வகையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவும் கூட்டு ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையைப் பெரிய விவகாரமாக முன்நிறுத்தி ஆரவாரம் செய்தார். இந் தத் தடபுடல் ஏற்பாடுகள் எல்லாம் சில மாதங்கள் இழுத்தடிக்க அவருக்கு உதவின. ஆனால்இ பதவி ஆசைக்காக அலையும் ஒன்றரை டசின் ஐ.தே.கவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தம் பக்கம் தாவவைப்பதற்கு இந்தப் பிர தான கட்சிகளிடையேயான இணக்கப்பாடு அவருக்கு உதவஇ தமது ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்தும் அந்த நடவடிக்கைக்காக பிரதான கட்சிகளிடையேயான இணக் கப்பாட்டை அதற்குப் பலி கொடுத்தார் அதிபர் மஹிந்தர்.

ஆகஇ சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்இ பிரதான கட்சி களிடையேயான இணக்கம் என்றெல்லாம் ஜனாதிபதி மஹிந்தர் மேற்கொண்ட தந்திரங்கள் வெறும் கால இழுத் தடிப்பு எத்தனங்களே என்ற சாயம்இ சர்வதேச சமூகத்தின் முன்னால் இப்போது வெளுத்துவிட்டது. குறுகிய அரசியல் நோக்கங்களுடனான இந்த நகர்வுகள் உண்மையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கோஇ இலக்கோ கொண்டவையல்ல என்ற யதார்த்தம் சர்வதேச சமூகத் துக்கு நன்கு புரிந்துவிட்டது என்பதை உணர்ந்து கொண் டுள்ள மஹிந்த அரசு இப்போது புதிய தந்திரோபாய நகர்வு ஒன்றை ஆரம்பித்திருக்கின்றது.

அதுதான்

தேசிய இனப்பிரச்சினையை ஒன்றுபட்டு அணுகுவதற் காக "தேசிய அரசு' ஒன்றை அமைக்கும் முயற்சி என இப் போது தென்னிலங்கை ஊடகங்கள் ஊடாகக் கசியவிடப் பட்டிருக்கும் தகவலாகும்.

அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் கூட்டம்இ பிரதான கட்சிகளிடையேயான நல்லிணக்கம் என்ற விடயங்கள் அறிவிக்கப்பட்ட சமயம்இ இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சி யில் அவை முக்கிய பெரும் நகர்வுகள் என்று எடுத்த எடுப் பிலேயே ஏற்றுக்கொண்டு ஏமாந்த சர்வதேச சமூகம்இ இப் போது "தேசிய அரசு' பற்றிய பேச்சு வெளிப்பட்டதும்இ அமைதித் தீர்வுக்கான புதிய பாதையை அந்த முயற்சி திறந்துவிடும் என்று அதையும் மலைபோல நம்பும் என்பது திண்ணம்.

ஆகஇ காலத்தை இழுத்தடிக்கும் தென்னிலங்கைத் தந்துரோபாயத்தின் மற்றோர் அத்தியாயமாக தேசிய அரசு என்ற எத்தனம் இப்போது கட்டவிழ்கிறது.

இத்தகைய மாயமான்களைக் கவனத்தில் கூட எடுக்கும் மனநிலையில் தமிழர் தரப்பு இல்லை. அதை சர்வதேச சமூகம் நேரத்துடன் புரிந்து கொள்வது நல்லது.

உதயன்

அது தான் வழமையான தீர்வு திட்டங்கள் என்னும் மாயமானைக்காட்டி

வெளி நாடுகளின் நிதி உதவி, ஆயுதவுதவி

பின்னர் தாக்குதல்கள் வெற்றிமாதிரி என்றால் அட்டகாசம் மேலும் வெல்லுவோம்

பயங்கரவாதத்தை அழிப்போம் .....

தோல்வி என்றால் இலங்கைக்கு பயங்காரவாதத்தால் ஆபத்து உதவுங்கள்....

இப்படியே எந்த அரசு வந்தாலும் உலகத்தையும் தமிழ்மக்களையும் எமாற்றி காலத்தை கடத்தி

எந்த அரசு தமிழர்களை கூடுதலாக உரிமையில்லாமல் அழிவுகளை ஏற்படுத்துகிறதோ அது தான் சிங்களவர்களின் வரலாற்று கதானாயகர்களாக கொண்டாடப்படுகிறார்கள்...

பண்டா , சென நாயக்கா, சிறிமா,ஜே ஆர், பிரெமதாசா,ரனில்,மகிந்தா எவர் வந்தாலும் இது தான் யார் மிக கடுமையாக தமிழரை நடத்துகிறார்கள் என்பதில் தான் அவர்களின் போட்டி....

அவர்கள் திருந்தமாட்டார்கள், திருத்தப்படவும் மாட்டார்கள்... நாய் வாலை நிமித்தலாம் ஆனால்......

காலம் திருத்தும் தமிழர்களாலே......

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.