Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி கல்லாறு கிராமத்தில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க இராணுவதின் உதவியை கோரும் கிராம பெண்கள்

Featured Replies

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கல்லாறு கிராமத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க காவல்துறை வேண்டாம் இராணுவமே வேண்டும் என கல்லாறு கிராம பெண்கள் விடுத்த கோரிக்கையினை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது.பொது மக்களின் இக் கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட இராணுவம் உடனடியாக தாங்கள் குறித்த இடத்தில் இராணுவ சோதனை சாவடி ஒன்றை அமைக்க இணக்கம் தெரிவித்தனர். இதன் பின்னரே பொது மக்கள் அவ்விடத்திலிருந்து கலைந்து சென்றனர்.

2-1-e1578660918886.png

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுப்படும் உழவு இயந்திரங்கள், டிப்பர்கள் அதிக வேகத்துடனான போக்குவரத்தால் குழந்தைகள் பொது மக்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இவ்வீதியால் அனுப்புவது என்பதே மிகப்பெரும் ஆபத்தான விடயமாக மாறியுள்ளது. எனவே கடந்த ஐந்து வருடங்களாக இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது.

5.png

இதனால் நாங்கள் பல நெருக்கடிகளை சந்தித்துள்ளோம் சந்தித்தும் வருகின்றோம். சட்டவிரோத மணல் அகழ்வால் ஏனைய சட்டவிரோத செயற்பாடுகளான கஞ்சா, கசிப்பு என்பனவும் அதிகரித்துள்ளது. எனத் தெரிவித்த மக்கள், கடந்த காலங்களில் மாதக் கணக்கில் மழை பெய்தாலும் சில குடும்பங்களை தவிர ஏனையவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதில்லை ஆனால் தற்போது இரண்டு நாள் பெய்த மழைக்கே நாம் அனைவரும் பாடசாலைக்கு சென்று தங்குகின்றோம்.

வெள்ளம் இரண்டு அடிக்கு மேல் தேங்கி நின்றதற்கு காரணம் இந்த சட்டவிரோத மணல் அகழ்வே. எனவே இந்த சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்காது விட்டால் எதிர்காலத்தில் கல்லாறு என்ற கிராமமே இல்லாமல் போய்விடும்.ஆகவே கல்லாறு கிராமத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வை தடுத்து நிறுத்த காவல்துறை தேவையில்லை இராணுவமே தேவை. இராணுவத்தினர் இந்த பிள்ளையார் கோவிலடியில் ஒரு சோதனை நிலையத்தை அமைத்து இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.இன்று கல்லாறு கிராமத்தில் பெண்கள் ஒன்று கூடி ஆலய முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். தங்களின் கிராமத்தில் இரவு பகலாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறது. இதனால் தங்களின் கிராமம் மிகப்பெரும் ஆபத்திற்குள் சிக்குண்டுள்ளது என தெரிவித்தனர்.

http://www.samakalam.com/செய்திகள்/கிளிநொச்சி-கல்லாறு-கிராம/

 

சட்டவிரோத மண் அகழ்வு குறித்து மஸ்தானிற்கு தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் கடிதம்

masthan.jpg

மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மண் அகழ்வை நிறுத்துவது தொடர்பாக இதுவரை எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் நேற்று, (வெள்ளிக்கிழமை) வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம்பெறுவதை தடுக்குமாறு கோரி கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி மன்னாரில் கண்டன போராட்டம் நடத்தி அரசாங்க அதிபருக்கு மகஜர் சமர்ப்பித்திருந்தோம்.

ஆனால் அரசாங்க அதிபர் இதுவரை எதுவித நடவடிக்கைகளும் மேற்கொண்டதாக தெரியவில்லை. எமக்கும்  எந்ததொரு பதிலையும் வழங்கவில்லை. எனவே அவரும் மறைமுகமாக ஆதரிக்கிறாரா எனும் ஐயம் எழுகின்றது?

இதேவேளை கிளிநொச்சி, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்கள் இந்த சட்டவிரோத மண் அகழ்வை இடை நிறுத்தியுள்ளனர்.

அதேபோன்று மன்னார் மாவட்டத்திலும் இடைநிறுத்த வேண்டும் என தங்களிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தில் பல இடங்களில் குடியிருக்க முடியாத நிலை ஏற்படுவதுடன் இயற்கை அனர்த்தத்தையும் எதிர்கொள்ள நேரிடலாம்.

ஆகவே உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கின்றோம்’ என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://athavannews.com/சட்டவிரோத-மண்-அகழ்வு-குற/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.