Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறையிலுள்ள விடுதலைப் புலிகள் குறித்து அனந்தி தெரிவித்த கருத்துக்கு கருணா விசனம்

Featured Replies

உண்மையான விடுதலைப் புலிகள் சிறைகளில் இல்லை எனவும் முன்னாள் மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சொல்வது உண்மையில்லை எனத் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுதாவளையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அனந்தி சசிதரன் குறிப்பிட்ட தனது கருத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருக்கும்போது போராளிகளை வழிநடத்திய தளபதியாக இருந்த கருணா அம்மான் உல்லாசமாக இருக்கின்றார் என்றும் போராடிய போராளிகள் உள்ளே இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்தக் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் அவரிடம் வினவினர்.

இதற்கு,  அனந்தி சசிதரன் ஒரு போராளியாக இருந்தவர். தற்போது வெளியில் தான் இருக்கின்றார் என்பதைப் புரிந்து கொண்டு பேச வேண்டும்.

கிட்டத்தட்ட 12 ஆயிரம் போராளிகள் இறுதி யுத்தத்தில் சரணடைந்தார்கள். அவர்கள் அனைவரது விடுதலையும் அன்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேசி புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். தற்போது சிறையில் உள்ளவர்கள் அரசியல் கைதிகள்.
உண்மையிலே உண்மையான விடுதலைப் புலிகள் சிறையில் இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கு உதவி செய்தவர்களும் ஆதரவு அளித்தவர்களுமே சிறையில் இருக்கின்றனர். அவர்களையும் படிப்படியாக விடுவிக்க முதற்கட்ட நடவடிக்கைகள் நடைபெற்றிருக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்

https://www.virakesari.lk/article/74653

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதம் ஏந்தி போராடிய வினாஜெகன்மூர்த்தி முரளிதரன் வெளியில் இருக்க. உதவி, ஆதரவு அளித்தவர்கள் சிறையில் இருக்கிறார்களாம். தான் சொல்வது என்னவென்று இந்த அறிவாளிக்கு விளங்கித்தான் சொல்லுதோ?....சரி,  இந்தப்போராளிக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டா விடுதலை செய்யப்பட்டார்? எப்படி இவருக்கு மட்டும் புனர்வாழ்வு இல்லை, சிறை இல்லை, அமைச்சுப்பதவி கொடுத்தார்கள்?.... இதை யாரும் கேட்க தோன்றவில்லையோ? போராட்டத்தை காட்டிக்குடுத்து போராளிகளை கைகழுவி விட்டதுமல்லாமல் காரணம் வேற. காட்டிக் குடுத்து வயிறு வளக்கிறவனெல்லாம் உண்மையான போராளிகளைப்பற்றியும்  போராட்டத்தை பற்றியும்   கதைக்க லாயக்கில்லாதவன்.  உண்மையான  போராளிக்கு  அது அழகுமல்ல.  இது போராட்டத்தில சேராமல் இருந்திருந்தால் எல்லோருக்கும் நன்றாய் அமைந்திருக்கும். என்ன செய்வது தமிழனின் விதி. அதை  அனுபவிக்கிறோம். தலைவரோடு சேர்ந்திருக்கும்போது புகழின் உச்சிக்கு போச்சுது. கம்பன் வீட்டு கைத்தறியும் கவிபாடும்.  அவர் உயிரோடு இருந்தவரை அவரை காட்டிக்குடுத்து சிங்களவனின் செல்லப்பிள்ளையாய் வலம்வந்தது. தலைவர் மறைந்ததும் எஜமானை காப்பாற்ற, தான் செய்தது  சரியென நிறுவ.  முடடாள்த்தனமாய் கதைத்து வாங்கிக்கட்டுது. பன்றியோடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.