Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசு சகலவழிகளிலும் உதவும் - இலங்கைக்கான  பின்லாந்து தூதுவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Batticalao-Government-Agent-Finland-Ambassador-Meet.jpg

மட்டக்களப்பின் அபிவிருத்திக்கு சகல வழிகளிலும் உதவத் தயார்- பின்லாந்து அரசாங்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகல வழிகளிலும் உதவுவதற்குத் தயாராக உள்ளதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவருக்கும் மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜாவுக்கும் இடையில் மாவட்டச் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, இலங்கைக்கான விஜயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்தான் பல்லின சமூகங்களும் ஒன்றிணைந்து வாழ்கின்றதைப் பார்ப்பதாக பின்லாந்து தூதுவர் தெரிவித்தார்.

மேலும், மாவட்டத்தில் இருக்கின்ற மீன் வளத்தினை நவீன முறையில் அபிவிருத்திசெய்து பெறுமதிவாய்ந்த சந்தையினை உருவாக்கி மீனவர்களுக்கான முழுமையான பயன்பாட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கு பின்லாந்து அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பினை இலங்கை அரசாங்கத்திற்கு ஊடாக செய்துகொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபருடன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பகுதித் தலைமை உத்தியோகத்தர் ஜஸிம் பாகிர், மாவட்ட மீன்பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

http://athavannews.com/மட்டக்களப்பின்-அபிவிருத/

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பின்லாந்து அரசு சகலவழிகளிலும் உதவும் - இலங்கைக்கான  பின்லாந்து தூதுவர்

மட்டக்களப்பு மாவட்டம் எல்லாவகையான வளமும் உள்ள  மாவட்டத்தினை மேலும் பெறுமதிசேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் தெரிவித்தார்.

DSC_0648.JPG

கடல் தொழில் நீரியல் வழங்கல் அமைச்சினால் இலங்கைக்கான பின்லாந்து தூதுவராலயத்தற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் மட்டக்களப்பு; வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தினை அபிவிருத்திசெய்யும் நோக்கில் இலங்கைக்கான பின்லாந்து தூதுவர் ஹரி மெகரீனன் மட்டு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா மாவட்டசெயலகத்தில் சந்தித்து மாவட்டம் தொடர்பான அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்  இவ்வாறு அவர் தெரிவித்தார் 

இலங்கைக்கான பின்லாந்து தூதுவரின் மட்டக்களப்பு விஜயத்தில் தான் முதலாவதாக இம் மாவட்டத்தில் பல்லினசமூகங்களும் ஒன்றிணைந்து வாழுகின்ற  மாவட்டத்தினை நான் பார்க்கிறேன்.  

அத்தோடு மாவட்டத்தில் இருக்கின்ற மீன் வளத்தினை நவீனமுறையில் அபிவிருத்தியினை மேற்கொண்டு பெறுமதிவாய்ந்த சந்தையினை உருவாக்க மீனவர்களுக்கான முளுமையான பயன்பாட்டினையும் பெற்றுக் கொடுப்பதற்கு தனது அரசு முழுமையான ஒத்துழைப்பினையும் அரசாங்கத்திற்கு ஊடாகசெய்து கொடுக்கப்படும்..

DSC_0671.JPG

மட்டக்களப்பு மாவட்டமானது கிழக்கு பகுதியை எடுத்துக் கொண்டால் அழகான நீலநிறமாக காட்சியளிக்கின்ற கடல் மிகுந்த பிரதேசமாகவும் மேற்குப் பகுதியைப் பார்த்தால் அழகிய பசுமைநிறைந்த வயல் வெளிகளை காணக் கூடியதாக இருக்கின்றதுடன் சகலவிதமான பழ வகைகளும் இம் மாவட்டதில் கிடைக்கின்றது. 

எல்லா வகையான வளமும் உள்ள இம் மாவட்டத்தினைமேலும் பெறுமதிசேர்க்க அபிவிருத்தியினை மேற்கொள்வதற்கு பின்லாந்து அரசாங்கம் சகலவழிகளிலும் உதவுவதற்கு ஆயத்தமாக உள்ளதாக  அவர் தரிவித்தார்.

இவ்  கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதிபத்மராஜா, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.சசிகலா புண்ணியமூர்த்தி மற்றும் பகுதி தலைமை உத்தியோகத்தர் ஜஸிம் பாகிர்.; மாவட்டமீன் பிடித் திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்;.
 

https://www.virakesari.lk/article/74720

  • கருத்துக்கள உறவுகள்

இனியென்ன; பிச்சை போடுபவரின் தொகையும் அதிகரிக்கிறது.  ஒரு தென்பகுதி அதிகாரி நியமனம். சுரண்ட நல்ல வாய்ப்பு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.