Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஶ்ரீ லங்கன் முன்னாள் CEO மற்றும் அவரது மனைவியை கைது செய்ய உத்தரவு

Featured Replies

Monday, February 3, 2020 - 3:19pm

ஶ்ரீ லங்கன் முன்னாள் CEO மற்றும் அவரது மனைவியை கைது செய்ய உத்தரவு-AG Instructs to Arrest Sri Lankan Air Lines Former CEO and Wife

ஸ்ரீலங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதான் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு சட்டமா அதிபர் சிஐடி பணிப்பாளருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் எயார்பஸ் நிறுவனம் இடையேயான பரிவர்த்தனையில் நிதி முறைகேடுகள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் குறித்த இருவரையும் சந்தேகநபர்களாக பெயரிட்டு, பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்ட மாஅதிபர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக, சட்ட மாஅதிபரின் இணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை கைது செய்ய கோட்டை நீதவான் நீதிமன்றம் கைது செய்வதற்கான உத்தரவை, CID யிற்கு வழங்கியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற சர்வதேச விசாரணைகளுக்கமைய, எயார்பஸ் நிறுவனம் பல்வேறு நபர்களுக்கு இலஞ்சம் வழங்கியமை அம்பலமானதோடு, இது தொடர்பில் அந்நிறுவனத்திற்கு 4 பில்லியன் டொலர் அபராதம் விதித்து பிரான்ஸ் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதன் மூலம், இலங்கை, ஜப்பான், ரஷ்யா, சீனா, நேபாளம், மலேசியா, தாய்வான், இந்தோனேஷியா உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த பல நூற்றுக் கணக்கான மூன்றாம் தரப்பு தரகர்கள் மூலம் இலஞ்சத்தை வழங்கி, தமது விமானங்களையும் செய்மதிகளையும் கொள்வனவு செய்வதற்கு எயார்பஸ் நிறுவனம் முறையற்ற வகையில் ஏற்பாடு செய்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

இதில், ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறைவேற்று அதிகாரியின் மனைவியின் பெயருக்கு, புரூணை பெற்றோலிய நிறுவனத்தின் மூலம் 2 மில்லியன் டொலர் பணம் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடாத்துமாறு நேற்றையதினம் (02) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

http://www.thinakaran.lk/2020/02/03/குற்றம்/47844/ஶ்ரீ-லங்கன்-முன்னாள்-ceo-மற்றும்-அவரது-மனைவியை-கைது-செய்ய-உத்தரவு

  • தொடங்கியவர்

கணவன் - மனைவி இருவருக்கும் விளக்கமறியல்

ஶ்ரீ லங்கன் விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர்கள் இன்று (06) காலை சரணடைந்தனர்.

அதனையடுத்து, கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க ஆகியோரிடம் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவுசெய்தனர்.

பின்னர், கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு விமானங்களை கொள்வனவு செய்த போது, இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இவர்கள் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளனர்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கணவன-மனவ-இரவரககம-வளககமறயல/175-245120

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.