Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஓர் இனத்திற்குச் சுதந்திரம் இன்னோர் இனத்திற்கு கண்ணீர்

Featured Replies

இலங்கையின் 72 ஆவது சுதந்திரதினம் இன்றாகும். இதை நாம் கூறும் போது இலங் கையின் சுதந்திர தினமா அல்லது சிங்கள இனத்தின் சுதந்திர தினமா என்ற கேள்வி எழுகிறது. 
இந்தக்கேள்விக்கான பதிலை தமிழ் மக்கள் கூறுவதாக இருந்தால் கூறுவர்.
 
இந்தப்பதில் கண்டு யாரேனும் விளிப்பார்க ளாயின் சுதந்திரம் இலங்கைக்கானது என் றால் அந்தச்சுதந்திரம் எங்களுக்கு மட்டும் இல்லாமல் போனது ஏன் என்ற கேள்வி அடுத்த தொடராக எழும்.
 
ஆக இலங்கைக்குச் சுதந்திரம் வழங்குவ தாக நினைத்த பிரிட்டிஸார் அதனை சிங்கள தரப்பிடம் கையளிக்க; அவர்கள் இலங்கை பெளத்த சிங்கள நாடு என கூற இலங்கைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் ஓர் இனத்திற்காகிப் போயிற்று.
 
இதன் காரணமாக கடந்த 72 ஆண்டுக ளாக தமிழ் மக்கள் தங்கள் உரிமைக்காகப் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். 
உரிமைக்காக போராடுவது என்பதற்கு அப்பால் ஆட்சி அதிகாரத்தை தம்வசம் வைத்துக்கொண்டு தமிழ் மக்களை பேரினவாத ஆட்சியாளர்கள் படுத்தும் துன்பம் சொல்லிமாளாது.
 
ஆம் 72ஆவது சுதந்திர தின நிகழ்வுக்காக ஆட்சி அதிகாரத்தின் கீழ் சிங்கக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதே சமயம் காணாமல் போன தங்கள் உறவுகளுக்காக கண்ணீர் விடுகின்ற தமிழர்களின் அவலத்தை யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பது மட்டுமன்றி காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்து விட்டனர் என்று நாக்கூசாமல் கூறுகின்ற அளவில் தமிழினத்தை மிகச் சிறுமைத்தனமாக நடத்துகின்ற அரச நாகரிகம் இந்த உலகில் எங்கும் இல்லாதது. 
 
காணாமல் போனவர்கள் இறந்து விட்டார் கள் என்றால் அவர்கள் எப்படி இறந்தார்கள்? அவர்களை கொன்றது யார்? கொன்ற பின் அவர்களின் உடல்களுக்கு
என்ன நடந்தது? என்ற ஏகப்பட்ட கேள்விகள் அடுக்கடுக்காய் எழும்.
 
ஏனெனில் காணாமல் போனவர்கள் என் போர் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் அதிலும் சாட்சியத்தோடு ஒப்படைக்கப்பட்ட வர்கள்.
அவ்வாறாயின் அவர்கள் காணாமல் போனவர்கள் என்று கூறுவதை விட படை யினரிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள்,  சரணடை ந்தவர்கள் என்று கூறுவதே பொருத்தமுடை யதாகும்.  
 
ஆக படையினரிடம் ஒப்படைக்கப்பட்டவர் கள் மற்றும் சரணடைந்தவர்களுக்கான பாது காப்பை உறுதி செய்வது படையினரின் கடமை யாகும். ஆனால் இங்கு காணாமல் போன வர்கள் இறந்துவிட்டார்கள் என்பது பதிலாக இருக்கிறது எனின், தமிழ் மக்களின் உயிர் களுக்கு சிங்கள ஆட்சியாளர்களும் படைத் தரப்பினரும் கொடுக்கின்ற பெறுமதி என்ன வாக இருக்கிறது என்பது புரிதற்குரியது. 
 
காணாமல் போனவர்கள் உயிரிழந்து விட் டார்கள் என்பதை சர்வசாதாரணமாக  கூறு கின்ற மனநிலை இருக்கின்ற சிங்கள ஆட் சியாளர்கள், இதே கதி தமது இனத்திற்கு ஏற்பட்டிருந்தால் அதனை ஏற்றுக் கொள் வார்களா என்று ஒரு கணம் தங்களை கேட் டுக் கொள்ள வேண்டும். 
 
அதாவது வழங்கப்பட்ட சுதந்திரம் ஒரு இனம் இன்னொரு இனத்தை சங்காரம் செய் வதற்காக பயன்படுத்தப்பட்டால் அதைச் சுதந் திரம் என்று கூறுவது ஒருபோதும் ஏற்புடை யதல்ல என்பதே உண்மை.’ 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.