Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திண்டுக்கல்லாரின் காலை கடித்த "செருப்பு".. சொந்த பேரனாவே இருந்தாலும் அப்படி செய்திருக்க கூடாதே!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்ச்சை

திண்டுக்கல்லாரின் காலை கடித்த "செருப்பு".. சொந்த பேரனாவே இருந்தாலும் அப்படி செய்திருக்க கூடாதே!

என்னதான் நீண்ட விளக்கத்தினை வழக்கமான யதார்த்த பேச்சுடன் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தந்திருந்தாலும்.. முதுமையை காரணமாக காட்டி சக அமைச்சர் அவருக்கு சப்போர்ட்டுக்கு வந்தாலும்.. எதுவுமே நம் மனசில் ஒட்ட மறுக்கிறது.. அதே நேரம் நடந்த சம்பவம் சட்டென அகலவும் மறுக்கிறது!

நீலகிரியில் விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்திருந்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.. வரும் வழியில் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட அமைச்சரை அழைத்துள்ளனர்.. செருப்பு காலோடு உள்ளே போக முடியாமல் நின்ற அமைச்சர், அங்கு விளையாடி கொண்டிருந்த 2 சிறுவர்களில் ஒருவனை அழைத்து, "வாடா.. வாடா.. இங்கே" என்றார்.

ஏதோ படிப்பு பத்திதான் அமைச்சர் கேட்க போகிறார் என சிறுவர்கள் தயங்கி பயந்து நின்றுள்ளனர்... ஆனால் அங்கிருந்த வனத்துறையினர் சிறுவர்களை அமைச்சர்களிடம் அழைத்து வர செய்துள்ளனர்.. அதில் ஒரு சிறுவனிடம், "செருப்பு பக்கிளை கொஞ்சம் கழற்றிவிடு" என்றார் அமைச்சர்.. பிறகு சிறுவன் கீழே அமர்ந்து அமைச்சரின் செருப்பில் இருந்த பக்கிள்ஸை கழட்டி விட்டுள்ளான்.

என் பேரன் மாதிரி

இதை அங்கிருந்தோர் வீடியோ எடுக்க முயலவும், போலீசார் வீடியோவெல்லாம் எடுக்காதீங்க என்று தடுத்தனர்.. மற்றொரு புறம் குன்னூர் எம்எல்ஏ சாந்திராமு செய்தியாளர்களை படம் எடுக்கவிடாமல் தடுத்தார்... ஆனாலும் விவகாரம் வெடித்து.. நாலாபக்கமும் சிதறி சர்ச்சையானது. அந்த சிறுவன் யானை பாகன் ஒருவரின் மகனாம்.. பழங்குடியினத்தை சேர்ந்தவன் என்பதால் இந்த விஷயம் சீரியஸானது.. பேசுபொருளக உருவெடுத்துள்ளது!

"பழங்குடியின சிறுவனை அவமதித்து சாதிய வெறியில் தன்னுடைய செருப்பை கழற்ற சொன்னாரா அமைச்சர்?" என்ற சாட்டையடி கேள்வி எழுந்து வருகிறது... விவகாரம் வெடித்த சில மணி நேரத்திலேயே, "அந்த 2 பேரில் ஒருத்தன் என் பேரன் மாதிரியே.. சின்னப்பிள்ளையா இருந்தான்.. அதனாலதான் கூப்பிட்டு செருப்பு பக்கிகளை கழற்றிவிட சொன்னேன்" என்று அமைச்சர் விளக்கம் தந்தார்.

ஆனாலும், சமாளிப்புடன்கூடிய இந்த விளக்கத்தை ஏற்க யாருமே தயாராக இல்லை.. காரணம் தன் வீட்டு பேரன் போல இருந்தாலும், அந்த சிறுவனை கூப்பிட்டு அமைச்சர் செருப்பை கழட்ட சொல்லி இருக்கக்கூடாது.. அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர்கள் என்றாலும், அவர்களிடம் "ஏண்டா ஸ்கூலுக்கு போகாம இங்க வேடிக்கை பார்த்துட்டிருக்கீங்க.." அப்படின்னு அமைச்சர் கேட்டிருந்தால் அவர் இன்னேரம் கோபுர உயரத்துக்கு உயர்ந்திருப்பார்.

ஒருவேளை தன் வீட்டு பேரனாக இருந்தால் அமைச்சர் இப்படி சொல்லியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான்.. அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதைபோல், "அவருக்கு 70 வயசாயிடுச்சு.. அதனால குனிய முடியல" என்ற விளக்கத்தை ஓரளவு ஏற்க முடிந்தாலும், அதற்கும் சிறுவனை அழைத்ததற்கும் சம்மந்தம் இல்லை என்றுதான் தோன்றுகிறது. முதுமை பிரச்சனை என்றே வைத்து கொண்டாலும், இந்த காரணம் அமைச்சருடன் இருந்தவர்களுக்கும் கண்டிப்பாக தெரிந்திருக்கவே செய்யும்! அதனால் அவர்கள் கூடி இந்த விஷயத்தில் உதவி செய்திருக்க முடியும்! அல்லது அமைச்சர் கூப்பிட்டதும் சிறுவனை வர வேண்டாம் என்று உடனே தடுத்தி நிறுத்தியிருந்திருக்க முடியும்.

சிக்கல்தான்

அட எதுக்கு இவ்ளோ.. ஒரு ஸ்டூலை கொண்டு வரச் சொல்லி அதில் காலை தூக்கி வைத்து கூட செருப்பை கழட்டியிருக்கலாம்.. அது சாத்தியம்தானே... ஆனால் அப்படிச் செய்யாமல் சட்டென அடுத்தவர் பிள்ளையை அழைத்து செருப்பை கழற்றுடா என்று சொன்னது வருத்தப்பட வைத்துள்ளது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் தேவையில்லாத தலைவலிகளில் அதிமுக சிக்கி வருகிறது.. ஏற்கனவே அதிமுக டிஎன்பிஎஸ்சி விவகாரம் வெடித்து வரும்போது, இதெல்லாம் மேலும் மேலும் சிக்கலை தான் தந்து வருகிறது.

மறைந்த ஜெயலலிதாகூட தன்னுடைய பொது வாழ்வில் பொது மக்கள் யாரையும், குறிப்பாக சிறுவர்களை செருப்பு, ஷூ கழற்ற சொன்னதே கிடையாது.. அவர்களுக்கு சாப்பாடு போடுவதிலும், படிக்க வைப்பதிலும், விளையாட்டுகளில் சிறந்து விளங்க ஊக்குவிப்பதிலும்தான் அவர் அதிக கவனம் செலுத்துவார். இப்படியெல்லாம் ஒரு போதும் அவர் நடந்து கொண்டதே இல்லை. இதே திண்டுக்கல்லாரின் பெற்ற பிள்ளைகள் மற்றவர்களுக்கு செருப்பை கழட்டி விட முன்வருவார்களா என்று மக்கள் கோபத்துடன் கேட்கின்றனர்.

பொதுவாக திண்டுக்கல்லார் மனசில் எதுவும் வைத்துக் கொண்டு பேச மாட்டார்.. வெள்ளந்தியாக பேசிவிடுவார்.. உள்நோக்கம் துளியும் இருக்காது.. அவரது இயல்வே அப்படித்தான்... ஆனாலும் என்னவோ இந்த விஷயத்தை மட்டும் அப்படி நம்மால் பார்க்கவே முடியவில்லை.. அந்த காட்சியை பார்க்கும்போது மனசு வலிக்கிறது.. அதை விட அந்த இடத்தில் கூடியிருந்த அத்தனை பேரும் சிரித்தபடி வேடிக்கை பார்த்ததை, லேசாக எடுத்து கொள்ளவே முடியவில்லை.. மிகப் பெரிய வேதனை இது!

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/minister-dindigul-srinivasan-asks-tribal-boy-to-remove-his-slipper-issue-376366.html

  • கருத்துக்கள உறவுகள்

திண்டுக்கல் சீனிவாசன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரும் பழங்குடியின சிறுவன்

திண்டுக்கல் சீனிவாசன்படத்தின் காப்புரிமைTWITTER Image captionதிண்டுக்கல் சீனிவாசன்

தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்ற வைத்து அவமானப்படுத்திய தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரால் காலணியை கழற்ற அறிவுறுத்தப்பட்ட பழங்குடியின சிறுவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

tamil.gif

காவல்துறையினர் சிறுவனின் புகாரை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் அமைச்சர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல் தகவல் அறிக்கை எதுவும் இதுவரை பதிவாகவில்லை.

அமைச்சர் சொல்கிறார் என்பதாலும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அருகில் இருந்ததால் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டதாக அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகளுக்கான முகாம் நேற்று துவங்கியது, துவக்க விழாவிற்காக வந்த தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின சிறுவன் கேத்தன் என்பவரை அழைத்து தனது காலில் இருந்த செருப்பை கழற்றிவிட உத்தரவிட்டார். இந்த காணொளி நேற்று முதல் சமூக வலைதளங்களிலும் பத்திரிகைகளிலும் பிரபலமாகத் துவங்கியது.

இதனையடுத்து தனது பேரன் போல கருதி அந்த சிறுவனை செருப்பை கழற்றிவிட கூறியதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்தார்.

"நான் சாதாரண செருப்பு அணியாமல், 'பக்கிள்ஸ்' செருப்பை அணிந்திருந்தேன். அங்கே வயதானவர்களும், மூத்தவர்களும் இருந்தனர். சிறுவர்கள் சிலர் அங்கே விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் என் பேரன் போல ஒருவனை அழைத்து செருப்பின் பக்கிள்களை கழற்றிவிடச் சொன்னேன். அவர் யார் என்று கூட எனக்கு தெரியாது. இதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை," என்று பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்திருந்தார்

இந்நிலையில் அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்ட கேத்தன் என்ற 14 வயது பழங்குடியின சிறுவன் கூடலூர் வட்டத்தில் உள்ள மசினகுடி காவல் நிலையத்தில் நேற்று மாலை புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், ''யானை முகாம் விழாவிற்கு வந்த வனத்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் என்னை ஒருமையில் பேசியதோடு தனது காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றிவிட உத்தரவிட்டார். அமைச்சர் சொல்கிறார் என்பதாலும் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அருகில் இருந்ததால் பயந்துகொண்டு அமைச்சரின் செருப்பை கழற்றிவிட்டேன். என் நண்பனும் அப்போது அமைச்சரின் அருகில் வந்தான்.''

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

''இந்த காட்சிகள் பிரபலமானதையடுத்து எனக்கு அவமானம் ஏற்பட்டது. இதனால் நான் வீட்டிலேயே அழுது கொண்டிருந்தேன். அங்கிருந்த அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் இந்த சம்பவத்தை வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். இதனால் எனக்குப் பெரும் அவமானம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறை அமைச்சர் மீது தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2015ன் கீழ் சட்டப்படி நடவடிக்கை எடுத்து, எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்," எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சிறுவன் கார்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கிறார். உடன் இருந்த சிறுவன் கார்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கிறார்.

தனது தந்தை எட்டு ஆண்டுகளுக்கு முன்னரே உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாகவும், தனது தாய் கூலி வேலைக்குச் சென்று தன்னையும் தனது சகோதரிகளையும் கவனித்துக்கொள்வதாகவும் தனது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுவனின் புகார் மனுவில் உடன் இருந்த சிறுவனும் சாட்சிக் கையொப்பம் இட்டுள்ளார்.

https://www.bbc.com/tamil/india-51410139

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text that says 'செருப்பை கழட்டி விடச் சொன்ன அதிகாரத் திமிரை அந்த செருப்பாலயே அடிடா தம்பி... திண்டுக்கல் சீனிவாசன் செருப்பை கழட்டிவிடச் சொன்ன அதிகாரத் திமிரை அந்த செருப்பாலயே அடிடா தம்பி..'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.