Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சவேந்திர சில்வா விவகாரம்: இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

dinesh-55.jpg

சவேந்திர சில்வா விவகாரம்: இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு

இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள தடை குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்க இலங்கைக்கான அமெரிக்க தூதுவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தூதரை இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சுக்கு வருமாறு தான் அழைப்பு விடுத்துள்ளதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இராணுவத்தளபதி மற்றும் பாதுகாப்பு படைகளின் பதில் பிரதானி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவினால் சுற்றுலா தடை விதிக்கப்பட்டமையை அரசாங்கம் என்ற வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே இவ்விடயம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்பது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம் வெளிப்படுத்தவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக அமெரிக்கா பயணத்தடையை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்க திணைக்கம் இவ்விடயம் தொடர்பான அறிவித்தலை நேற்று முன்தினம் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சவேந்திர-சில்வா-விவகாரம்/

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் பயணத் தடை : வெளிவிவகார அமைச்சுக்கு சென்றார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்

இலங்கையின் இராணுவதளபதி சவேந்திரசில்வாவிற்கு எதிரான பயண தடை குறித்த தனது அதிருப்தியை தெரிவிப்பதற்காக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் இலங்கை வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க தூதுவரை இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன சந்திப்பார் எனவும் பயணதடை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிடுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளமை இந்த விடயத்திற்கு இலங்கை வழங்குகின்ற முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/75724

 

Shavendra-Silva-USA-Banned.jpg

அமெ­ரிக்கா முறை­யான பேச்­சுக்­களை அர­சாங்­கத்­துடன் மேற்கொள்ளவில்லை: இரா­ணுவத் தள­பதி விவ­காரம் தொடர்பில் அமைச்சர் கெஹ­லிய விசனம்

(இராஜதுறை ஹஷான்)

யுத்தக் குற்றச்சாட்டுக்கள்தொடர்பில் கிடைக்கப் பெற்றநம்பிக்கையான ஆவணங்களைக் கொண்டே இராணுவத் தளபதிக்கு அமெரிக்காவுக்குள் நுழையதடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா குறிப்பிடுவதுஇராஜதந்திர ரீதியான செயற்பாடல்ல. இவ்விடயம் தொடர்பில் அமெரிக்கா முறையான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை என்று அரசாங்க பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இராணுவதளபதிசவேந்திர சில்வாவிற்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில் கருத்துரைக்கையிலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா இராணுவதளபதிக்கு அந்நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு தடை விதித்துள்ளமையானது இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட தீர்மானமல்லஇவ்வாறானநிலையில் இரு நாடுகளும் இராஜதந்திரமட்டத்திலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும். ஆனால் அமெரிக்காஇவ்விடயம் குறித்து எவ்வித பேச்சுவார்த்தைகளையும் அரசாங்கத்துடன்முன்னெடுக்கவில்லை.

யுத்தக்குற்றசாட்டுக்கள்தொடர்பில்கிடைக்கப் பெற்றநம்பிக்கையான தகவல்களை அடிப்படையாகக் கொண்டேபயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்கா குறிப்பிடுகின்றது. அவ்வாறாயின் அந்த ஆவணங்கள் தொடர்பில்அரசாங்கத்துடன் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என்றார்.

இவ்விடயம் குறித்து இராஜாங்க அமைச்சர் மஹிந்தயாப்பா அபேவர்தன கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தத்தை வெற்றிக் கொண்டவர்களுக்கு எதிராகசெயற்படுவது இலங்கை நாட்டை  அவதிப்பதாகவேகருத முடியும்.

பல்வேறு தேவைகளை கருத்திற்கொண்டு ஒரு தலைப்பட்சமாக செயற்பட முடியாது.நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் நிறைவுபெறவில்லை என்பதற்கு இராணுவ தபளதிக்கு விதிக்கப்பட்டுள்ள அமெரிக்கபயணதடை ஒருசாட்சி. இவ்வாறான நெருக்கடியினை வெற்றி கொள்ள பலமாக அரசாங்கம் பொதுத்தேர்தலை தொடர்ந்து தோற்றம் பெற வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/75771

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.