Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புஷ் பிளேயர் கூட்டு இழைத்த வரலாற்றுக் குற்றம் இது!

Featured Replies

புஷ் பிளேயர் கூட்டு இழைத்த வரலாற்றுக் குற்றம் இது!

சும்மாயிருந்த குளவிக் கூட்டுக்குக் கல்லெறிந்து குளவி களின் கொட்டல்களை வாங்கிக் கட்டிக்கொண்ட இக்கட் டுப் போன்ற ஒன்றில் சிக்குப்பட்டுத் தவிக்கின்றார் அமெ ரிக்க ஜனாதிபதி புஷ்.

மனித குலத்துக்குப் பேரழிவைத் தரவல்ல இரசாயன ஆயுதங்களை ஜனாதிபதி சதாம் ஹுசைன் தலைமையி லான ஈராக்கிய நிர்வாகம் தயாரித்து வருவதாக நொண் டிச்சாட்டுக் கூறிக்கொண்டு, ஈராக் மீதான ஆக்கிரமிப்பு யுத் தத்தைத் தமது நேசப்படைகளுடன் சேர்ந்து ஆரம்பித்தார் அமெரிக்க ஜனாதிபதி.

இப்போது "மெல்லவும் முடியாமல்' விழுங்கவும் முடியா மல் தவிப்பது போல், ஈராக்கில் தமது படைகளை தொடர்ந்து நிலைகொள்ளச் செய்யவும் முடியாமலும் அதேசமயம் வெளி யேற்றவும் முடியாமலும் அந்தரிக்கின்றார் புஷ்.

இற்றைக்கு சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஈராக் கைக் கைப்பற்றுவதற்கான இராணுவ நடவடிக்கை வெற் றிகரமாகப் பூர்த்தியாகியிருப்பதாக அவர் அறிவித்தார்.

ஈராக் மீதான படை நடவடிக்கை வெற்றிகரமாகப் பூர்த்தி யடைந்ததைக் குறிக்கும் விதத்தில், "நடவடிக்கை பூர்த்தி' (ட்டிண்ண்டிணிண ச்ஞிஞிணிட்ணீடூடிண்டஞுஞீ) என்ற தமது சரித்திர முக்கியத் துவம் வாய்ந்த உரையை, "ஏபிரஹாம் லிங்கன்' என்ற கப் பல் தளத்தில், "மிஷன் அக்கொம்பிளிஸ்ட்' என்ற பதாகை யின் கீழ் நின்றவாறு அவர் ஆற்றினார்.

அச்சமயம் அதுவரை ஈராக்கில் நடந்த யுத்தத்தில் ஆக 138 அமெரிக்கத் துருப்பினரே கொல்லப்பட்டிருந்தனர்.

வீரபராக்கிரமத் தளபதி போல அன்று "ஏபிரஹாம் லிங் கன்' கப்பல் தளத்திலிருந்து இராணுவ நடவடிக்கை பூர்த்தி பற்றி புஷ் பிரகடனம் செய்து நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன.

ஆனால் இன்னும் ஈராக்கில் இராணுவ நடவடிக்கை பூர்த்தியடையவுமில்லை; அந்த இராணுவ நடவடிக் கையை ஆரம்பிப்பதற்கு அடிப்படையாக புஷ் கூறிய மனித குலத் துக்குப் பேரழிவு தரும் எந்த ஆயுதங்களும் ஈராக்கில் உற்பத்தி செய்யப்பட்டமைக்கான அடையாளம் கூடக் கண்டு பிடிக்கப்படவுமில்லை.

புஷ் அறிவித்தமைக்கு மாறாக நான்கு ஆண்டுகள் கடந் தும் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதி ராக சுதேசிகள் நடத்தும் போராட்டம் தொடர்ந்து வீறு கொண்டு வீரத்துடன் தொடர்ந்து வருகின்றது.

இராணுவ நடவடிக்கை பூர்த்தி என நான்கு ஆண்டு களுக்கு முன்னர் புஷ் அறிவித்தபோது உயிரிழந்த 138 அமெ ரிக்கர்களை விட மேலும் மூவாயிரத்துக்கும் அதிகமான அமெ ரிக்கத் துருப்புகள் இந்த நான்கு ஆண்டுகளில் உயிரி ழந்துவிட்டனர். சுமார் 24 ஆயிரம் அமெரிக்கத் துருப்புகள் படுகாயமடைந்திருக்கின்றனர்.

அமெரிக்க ஆக்கிரமிப்பு, அதுவரை அமைதிப் பூங்காவாகவிருந்த ஈராக்கை தொடர்ந்து யுத்தப் பூகம்பப் பேர திர்வுக்குள் மாட்டிவிட்டிருக்கின்றது. தினசரி பலநூற்றுக் கணக்கான சுதேசிய ஈராக்கியர் படுகொலையாகுமள வுக்கு பெரும் ரணகளத்தை அமெரிக்க ஆக்கிரமிப்பு உரு வாக்கி நிற்கின்றது.

தீவிரமடைந்துள்ள மோதல்களினால் லட்சக்கணக் கான ஈராக்கியர்கள் அநாதைகளாகியுள்ளனர். உள்நாட்டுக் குள் இடம்பெயரும் அகதிகளின் எண்ணிக்கை மாதாந் தம் சுமார் 40 ஆயிரத்தால் அதிகரித்து வருகின்றது.

கடந்த அறுபது ஆண்டு காலத்தில் மத்திய கிழக்கில் ஆகக் கூடுதலான பொதுமக்கள் அகதிகளாக இடம் பெயரும் அவலத்தை ஈராக் மீதான இந்த அமெரிக்க ஆக் கிரமிப்பே உருவாக்கியிருக்கின்றது. சுமார் இரண்டு கோடி 70 லட்சம் மக்களைக் கொண்ட ஈராக்கில் இன்று பதின் மூன்று சதவீதத்தினர் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து ஏதிலிகளாகியுள்ளனர்.

ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால் இவ் வாறு பல லட்சம் அகதிகளின் இடப்பெயர்வுக்குக் காரண மாக அமைந்த அமெரிக்கா, இந்தக் காலகட்டத்தில் இவர் களில் ஆக 692 பேருக்கு மட்டுமே தனது நாட்டில் இட மளித்திருக்கின்றது.

பல்லாயிரம் பேரின் உயிர்களைக் காவுகொண்டு, பல லட்சம் பேரை ஏதிலிகளாக்கி, இடம்பெயரவைத்து, பெரும் மனிதப் பேரழிவை ஏற்படுத்தும் வகையில், மற்றொரு நாடான ஈராக்கின் இறைமையை நிராகரித்து, அமெரிக்கா வும் அதன் நேசஅணிகளும் மேற்கொண்ட இந்தக் கொடூர ஆக்கிரமிப்பு மனித குல வரலாற்றில் மன்னிக்கப்பட முடி யாத பெரும் குற்றமாகும்.

இந்த வல்லாதிக்க ஆக்கிரமிப்பின் சூத்திரதாரிகள் அமெ ரிக்க ஜனாதிபதி புஷ்ஷ?90;், இவ்விடயத்தில் அவரது நேச சக்தியாக நின்று இக்கொடூரத்துக்கு உதவிய பிரிட்டனின் பிரதமர் ரொனி பிளேயரும்தான்.

ஈராக்கியக் கொடூரத்துக்கான இரு பிதாமகர்களில் ஒரு வரான பிரிட்டன் பிரதமர் ரொனி பிளேயர் அடுத்தமாத முடிவுடன் ஆட்சிக்கட்டில் இருந்து விலகி வெளியேறப் போகி றார். அதுபோல ஜனாதிபதி புஷ்ஷின் பதவிக்காலமும் அடுத்த ஆண்டு இறுதியுடன் காலாவதியாகின்றது. அத் துடன் அவரும் வெள்ளை மாளிகையிலிருந்து மூடை முடிச் சுகளைக் கட்டிக்கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்ட வேண்டியதுதான்.

ஈராக் மீது ஆக்கிரமிப்புப் போர் தொடுத்து, மனித சரித்திரத்தில் இமாலய வரலாற்றுத் தவறை இழைத்தவர்கள், அவர்களின் கொடூரத்தால் ஈராக் தொடர்ந்து தவித்து, தின சரி பலநூறு உயிர்களைக் காவுகொடுத்து, வன்முறைப் புய லில் அல்லாடிக் கொண்டிருக்க, தாங்கள் சந்தோஷ மாகப் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு மகிழ்வான நிம்மதி யான ஓய்வுக்குப் போகின்றார்கள்.

இந்த வரலாற்றுத் தவறுக்காக அவர்களுக்கு சர்வ தேசம் வழங்கப்போகும் தண்டனை என்ன? அவர்கள் செய் யப் போகும் பிராயச்சித்தம் என்ன?

உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

இவைகள் இருவரும் தண்டனை பெறுவார்கள் என்று இப்போதைக்கு கூறாவிட்டாலும் இவர்களின் படை நிச்சயமாக வாங்கி கட்டுகிறது,கட்டும் என்பதை நிச்சயமாக கூறலாம்.

இந்த இருவரும் ஜனநாயக நாடுகளின் தலைவர்கள். இவர்களின் ஆட்சிக்காலத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை ஆட்சியில் இருக்கும் கட்சி முடிவுசெய்யும். அதாவது அந்தந்த நாடுகளின் தீர்மானமேயன்றி தனிப்பட்ட ஒருவரின் முடிவாகக் கொள்ளப்பட மாட்டாது. இவர்கள் நாளை ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டாலும் இவ்விரு நாடுகளின் கொள்கைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படப் போவதில்லை.

சாதாரண குடிமகனானபின் சட்டப்படி இவர்களை யாரும் தண்டிக்கவும் முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.