Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிங்கள பேரினவாதிகளின் மனப்பான்மையும் சர்வதேச சமூகமும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பேரினவாதிகளின் மனப்பான்மையும் சர்வதேச சமூகமும்

-புரட்சி (தாயகம்)-

'தென்னிலங்கையில் இருக்கின்ற சமாதானப் புலிகள், 'ஊடகப் புலிகள்", 'இடதுசாரிப் புலிகள்" - 'இவர்களை அடையாளங்காணுங்கள்", 'அவர்களை அழியுங்கள்", 'சிங்கள தேசத்தைக் காப்பாற்றுங்கள்" - அண்மைக்காலங்களிலே தென்னிலங்கையில் ஒட்டப்பட்ட பிரசுரங்களில் காணப்பட்ட வாசகங்கள்.

மகிந்த ராஜபாக்ச அரசானது பதவிக்கு வந்த காலம் முதல் தனது தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளையும் தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. தென்னிலங்கை தற்போது முழக்கும் கோசமான 'சிங்கள தேசத்தை காப்பாற்றுங்கள்" என்ற இந்த வாசகமானது கம்போடியாவின் சர்வாதிகாரியாக விளங்கிய பொல்பொட் இனால் பயன்படுத்தப்பட்ட 'தேசத்தை காப்பாற்றுங்கள்" என்ற கம்போடிய மக்களை படுகொலை செய்வதற்கான கோட்பாட்டினை ஒத்தது என்று 14 ஏப்ரலில் வெளிவந்த நியூஸ் வீக் சஞ்சிகையின் விசேட செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் கடந்த 15 மாதங்களிலே சிறிலங்கா ஜனநாயக சோசலிஸ குடியரசு அரசினால் கொல்லப்பட்ட மக்களின் தொகையானது சிலி நாட்டில் இடம்பெற்ற 'மோசமான போர்" என்று வர்ணிக்கப்பட்ட பினோசேயின் 17 வருட காலப்பகுதியில் கொல்லப்பட்ட மக்களின் தொகையினை விட அதிகமாகும் என்றும் மேலும் அவர் தெரிவிக்கின்றார்.

சிலி நாட்டின் உண்மைக்கும் சமரசத்திற்குமான அமைப்பின் புள்ளிவிபரப்படி 17 வருடகால பினோசேயின் மோசமான போர்க்காலப்பகுதியில் கொல்லப்பட்டவர்கள் 2,279 ஆகும். ஆனால் நோர்வே- ஐஸ்லாந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் அறிக்கையின் படி ராஜபக்ச அரசானது கடந்த 2005 வருட இறுதிப்பகுதியில் பதவியேற்றதில் இருந்து 4,000 அதிகமான உயிர்களைக் காவுகொண்டுவிட்டது. அத்துடன் நாளுக்கு நாள் இந்தத் தொகையானது அதிகரித்துக்கொண்டும் செல்கின்றது.

மட்டக்களப்பு- திருகோணமலை மாவட்டங்களிலே தற்போது சிறிலங்கா படை நடவடிக்கைகளாலும் விமானக் குண்டுவீச்சுக்களாலும் இடம்பெயர்ந்துள்ள 153,000 அதிகமான இடம்பெயர்ந்த மக்கள் போதிய உணவு, குடிநீர் மற்றும் ஏனைய அத்தியாவசிய அடிப்படை வசதிகள் இன்றி அல்லல்படுவதாகவும் இவர்களுக்கு உடனடியாக உதவும்படியும் மட்டு-திருகோணமலை மறை மாவட்ட கத்தோலிக்க திருச்சபை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை சர்வதேச சமூகத்திற்கு அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.

தென் அமெரிக்க சர்வாதிகாரிகள் போன்று சிறிலங்கா அரசாங்கமும் தனது நடவடிக்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களுக்கு எதிராக போர் ஒன்றை தொடுத்துள்ளது. அண்மைக்காலத்தில் ஒன்பது ஊடகப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் என்று ஊடகங்களுக்கான விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதச் தடைச்சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக வெளியுலகத்துடன் எந்த தொடர்புகளும் இல்லாது தடுத்து வைக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியதாவது, 'சர்வதேச அடிப்படை மனித உரிமைகள், சட்டங்கள் மற்றும் நடைமுறைகள் தொடர்பான விடயங்களை கருத்தில் கொள்கையில் சிறிலங்கா அரசினால் மீள அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாத தடைச்சட்டமானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது" என்று தெரிவித்துள்ளது. அத்துடன் இச்சட்டமானது தமது அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கும் இடையூறுகளை விளைவிப்பதற்குமே பயன்படுத்தப்படுகின்றது. மேலும் எவ்வித தண்டனைகளுக்கும் தாம் உள்ளாகாமல் இச்சட்டத்தை சிறிலங்கா படையினரும் அரசும் எழுந்தமானமாக யாருக்கும் எதிராகப் பயன்படுத்த முடியும் என்பதும் மனித உரிமைகளை மேம்படுத்துவது என்பது தொடர்பில் பாரதூரமான நெருக்கடிகளையும் இடர்பாடுகளையும் தோற்றுவித்துள்ளது என்பது சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட பல்வேறு மனித உரிமை அமைப்புக்களின் பிரதான கரிசனையாக உள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டமானது 'ஊடகங்களையும் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் குரல்களையும் அடக்குவதற்கே பயன்படுத்தப்படுகின்றது" என்ற சர்வதேச ஊடகங்களிற்கான சம்மேளனத்தின் குற்றச்சாட்டிற்கு சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மையம் பின்வருமாறு பதிலளித்துள்ளது.

'நாங்கள் எதிர்;காலத்திலும் கைது நடவடிக்கைகளை தொடர்வோம். ஒருவரது பதவியோ தகுதியோ அவரைக் கைது செய்யும் எமது நடவடிக்கைக்கு பொருட்டாக இருக்கமாட்டாது. அத்துடன் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்றால் அவர் சிங்களவரா, தமிழரா அல்லது முஸ்லீமா என்றும் பார்க்கமாட்டோம். இவ்வாறான கைதுகளை கண்டித்து போராட்டம் நடத்துவோரும் நாட்டின் பாதுகாப்பை பேணும் நடவடிக்கைக்கைக்கு இடையூறுகளை விளைவிப்பவர்களாகவே கருதப்படுவார்கள்."

விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான மூன்று வெற்றிகரமான விமானத்தாக்குதல்கள் காரணமாக சிங்கள தேசத்திற்கு பௌதீக ரீதியாக ஏற்பட்ட தாக்கத்தினை விட பொருளாதார ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் ஏற்பட்ட நெருக்கடிகள் பல மடங்கு அதிகமாகும்.

சிறிலங்காவின் மத்திய வங்கியும் திறைசேரியும் நாட்டின் பொருளாதாரம் மிகவும் நல்ல முறையில் இருப்பதாக அடிக்கடி கூறி பல்வேறு புள்ளிவிபரங்களை வெளியிட்டு வந்தபோதிலும் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக சீரழிந்;து கொண்டு செல்வதை பல்வேறு பொருளியல் வல்லுனர்கள் தமது ஆய்வுகளின் மூலம் மிகவும் விலாவாரியாக தெரிவித்துவருகின்றார்கள்.

சிறிலங்காவின் பணவீக்கமானது தற்போது 17 வீதமாக அதிகரித்து காணப்படுகின்றது. இது உலகில் காணப்படுகின்ற ஏனைய பெரும்பான்மையான நாடுகளுடன் ஒப்பிடும்போது எந்தக்காலத்திலும் எந்த நாட்டினதும் பணவீக்கத்துடன் ஒப்பிடும் போது மிக மிக அதிகமாகும். அத்துடன் கடன் தொகையின் விகிதாசாரமானது மொத்த உள்நாட்டுத் தேசிய உற்பத்தியில் 93 வீதம் என்ற மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது. ஆனால் சிறிலங்கா அரசோ அல்லது நிதியமைச்சராகவும் சிறிலங்காவின் ஜனாதிபதியாகவும் விளங்கும் ராஜபக்சவோ இது தொடர்பாக பெரிதாக அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் பொருளாதார நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மகிந்தவினால் கண்டுபிடிக்கப்பட்ட மிகச் சுலபமான தீர்வு கோடிக்கணக்காக புதிய ரூபாய் நோட்டுக்களை அச்சடித்தலாகும். இதன் விளைவு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இச்செயற்பாடு தொடருமானால் இனிவரும் காலங்களில் சந்தைக்கு செல்லும் போது ஆபிரிக்க நாடுகளில் இடம்பெற்றது போன்று ஏதாவது பொருட்களை வாங்குவதானால் உடுப்புப் பெட்டிகளில்தான் பணத்தினை கொண்டுசெல்லவேண்டியிருக்கும

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.