Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாளை நள்­ளி­ர­வுடன் கலைகிறது பாரா­ளு­மன்றம்!

Featured Replies

எட்டாவது பாராளுமன்ற கூட்டத்தொடர் நாளை நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் நான்கரை ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு முடியும்.

அத்துடன் இந்த விடயத்தில் காணப்படுகின்ற ஒழுங்குமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்~ ஏற்கனவே சம்பந்தப்பட்ட தரப்பினரான தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில் நாளை நள்ளிரவு பாராளுமன்றைக் கலைக்கும் உத்தியோக ப+ர்வமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

இதேவேளை, பாராளுமன்றத்தினை கலைக்கும் வர்த்தமானி அறிவிக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 11முதல் 17ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்று கூறப்படுவதோடு தேர்தல் பெரும்பாலும் 25ஆம் திகதியே நடத்தப்படுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளதாக தெரியவருகின்றது.

2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி புதிய ஜனாதிபதி தெரிவாகியிருந்த நிலையில் எட்டாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் ஓகஸ்ட் 17ஆம் திகதி நடைபெற்றிருந்தது.

19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதிக்கு காணப்படும் அதிகாரிகளில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னதாக பாராளுமன்றத்தினை ஜனாதிபதியால் கலைக்க முடியாத நிலை காணப்படுகின்றது.

இதன்காரணமாக 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் 26இல் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின்போது ஜனாதிபதியின் பாராளுமன்றத்தினை கலைக்கும் அறிவிப்பு அரசியலமைப்புக்கு முரணானது என்ற நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் முரண்பாடுகளுடன் ஆட்சி தொடர்ந்திருந்தது.

எனினும் கடந்த நவம்பர் 16ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றதையடுத்து சிறுபான்மை அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தினைப் பெற்றிருந்தது. இதன்காரணமாக முக்கியமான தீர்மானங்களை சட்டவாக்க கட்டமைப்பில் மேற்கொள்வதற்கு முடியாத நிலைமை நீடித்து வந்திருந்த நிலையில் பொதுத்தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்ற கோரிக்கை அனைத்து அரசியல் மட்டத்திலிருந்தும் மேலெழுந்திருந்தது.

இவ்வாறான பின்னணியிலேயே நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்த கையோடு ஜனாதிபதி பாராளுமன்றத்தினை கலைக்கும் அறிவிப்பினை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, நாளை பாராளுமன்றம் கலைக்கப்படும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படும் பட்சத்தில் அதிலிருந்து 52நாட்களுக்குள் பொதுத்தேர்தலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுக்களின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 10 முதல் 15 வரையில் காணப்படுமாயின் தேர்தலுக்கான செலவு 550கோடி போதுமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர் இதுவரையில் பாராளுமன்றம் தேர்தல் செலவுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இதுவரையில் 156அரசியல் கட்சிகள் புதிதாக பதிவுகளை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை செய்துள்ளதாக கூறிய தேர்தல்கள் ஆணையாளர் இவற்றில் 100கட்சிகள் வரையில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் அதுதொடர்பில் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ரட்ணஜீவன் கூல் தனிப்பட்ட பயணமாக வெளிநாடொன்றுக்கு சென்றுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களிலேயே நாடு திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.virakesari.lk/article/76808

  • தொடங்கியவர்

தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இன்று (01.03.2020) முற்பகல் வரலாற்று முக்கியத்துவமிக்க கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றுள்ளார்.

அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்கர் வரக்காகொட ஸ்ரீ ஞானரத்தன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி,தேரரின் நலன் விசாரித்தறிந்துள்ளார்.

அஸ்கிரிய மகாநாயக்க தேரர் பிரித் பாராயணம் செய்து  ஜனாதிபதியை ஆசிர்வதித்துள்ளார்.

ஜனாதிபதி அஸ்கிரிய ஸ்ரீ சந்ராநந்த பௌத்த வித்தியாலயத்தில் ரங்கிரி தம்புலு மகா விகாரையின் விகாரதிபதி, கண்டி அஸ்கிரி மகாவிகாரையின் சிரேஷ்ட காரக்க சங்கசபிக்க, கலாநிதி கொடகம மங்கள நாயக்க தேரரை சந்தித்தார்.

அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வெண்டருவே உபாலி நாயக்க தேரர் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் இணைந்துகொண்டுள்ளார்.

இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.
 

https://www.virakesari.lk/article/76837

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படும்

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படும்

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்துக்கு அமைய, நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.இந்நிலையில் 2015 ஓகஸ்ட் 16ஆம் திகதி நடந்த பொதுத் தேர்தலை அடுத்து, 2015 செப்ரெம்பர் 1ஆம் திகதி தற்போதைய நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு இடம்பெற்றிருந்தது. இதற்கமைய இன்றுடன் நான்கரை ஆண்டுகள் நிறைவடைவதால், ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடவுள்ளார்.

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானி அறிவிப்பு இன்று நள்ளிரவு வெளியிடப்படும் என மேலும் தெரிவித்தார்.(15)

 

http://www.samakalam.com/செய்திகள்/நாடாளுமன்றத்தைக்-கலைக்க/

  • கருத்துக்கள உறவுகள்
44 minutes ago, கிருபன் said:

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக, அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

B78-CDD3-B-4-A7-F-4-EF4-95-EF-BD2-E0-FE3

  • தொடங்கியவர்

 

image_14f1ac0fc3.jpg

 

பாராளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானியில் கையெழுத்திட்டர் ஜனாதிபதி! |

இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார்.

அதன்படி குறித்த வர்த்தமானியானது அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு இன்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டால் பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/76922
       

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.