Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தொற்று – இந்தியாவில் முதல் உயிரிழப்பு பதிவு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

corona-1-720x450.jpg

கொரோனா தொற்று – இந்தியாவில் முதல் உயிரிழப்பு பதிவு?

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறியுடன் சிகிச்சைப் பெற்றுவந்த கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் ஐதராபாத்தில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (புதன்கிழமை) உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது குறித்து கர்நாடகா அரசு உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், இது குறித்து கர்நாடகா அரசு சார்பில் வெளியான செய்தி குறிப்பில், “சவுதி அரேபியாவில் இருந்து திரும்பிய கர்நாடகா மாநிலம் கல்புர்கியைச் சேர்ந்த முகமது உசைன் சித்திக், 76, என்ற முதியவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது.

ஐதராபாத்தில் சிகிச்சை பெற்று வந்த அவரின் சளி, ரத்த மாதிரிகளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படாத நிலையில், அவர் இன்று உயிரிழந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இறப்பிற்கான காரணம் குறித்து கூறப்படவில்லை.

சீனாவின் வூஹான் மாகாணத்தில் கடந்தாண்டு டிசம்பரில் பரவத்தொடங்கிய உயிர்கொல்லி ‘கொரோனா வைரஸ்’ உலகின் 100 நாடுகளுக்கு பரவியது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலக அளவில் 4,295 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் பரவிய கொரோனாவை தடுக்க மத்திய, மாநில சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50லிருந்து 60ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கேரளாவைச் சேர்ந்த 8 பேர், ராஜஸ்தான் மற்றும் டில்லியில் தலா ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட கர்நாடகாவை சேர்ந்த முதியவர் உயிரிழந்துள்ளார்.

http://athavannews.com/கொரோனா-தொற்று-இந்தியாவி/

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வு – முழு விபரம் வெளியீடு

In இந்தியா     March 12, 2020 10:04 am GMT     0 Comments     1019     by : Dhackshala

1667c3a2f9ac4d4abea1b1ab1ea0b35c_18-720x

இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 73 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 56 பேர் இந்தியர்கள், 17 பேர் வெளிநாட்டினர் என்றும் இது இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி நிலவரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக கேரளத்தில் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இவர்களில் 3 பேர் குணமடைந்துவிட்டனர்.

இதற்கு அடுத்த இடத்தில் ஹரியாணா உள்ளது. இங்கு 14 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே வெளிநாட்டினர்.

டெல்லியில் 6 பேருக்கும் மகாராஷ்டிரம் உத்தரப்பிரதேசத்தில் தலா 11 பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 10 பேருக்கும் கர்நாடகாவில் மூவருக்கும் ராஜஸ்தானில் ஒரு இந்தியர், இரண்டு வெளிநாட்டவர் என மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் மாநிலங்களில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒருவருக்கும் லடாக் யூனியன் பிரதேசத்தில் மூவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்கு ஆயிரத்தையும் தாண்டியுள்ளது.

Untitled-4-373x480.jpg

http://athavannews.com/கொரோனாவால்-பாதிக்கப்பட-3/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.