Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமணம் ரத்தால் ஸ்ரீகாந்த் காதலி வந்தனா சோகம்: நேரில் சந்திக்க கண்ணீருடன் காத்துகிடக்கிறார்

Featured Replies

ரோஜாக் கூட்டம் பார்த்திபன் கனவு, உயிர், பம்பரக்கண்ணாலே உள்பட பல தமிழ்படங்களில் கதாநாய கனாக நடித்தவர் ஸ்ரீகாந்த். இவருக்கும் தொழில் அதிபர் சாரங்கபாணியின் மகள் வந்தனா என்பவருக்கும் வருகிற ஜுன் 18-ந்தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டிருந்தது.

அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வந்தது. திருமண பத்திரிகை அச்சிடும் பணியÛயும் தொடங்கினர். திருமண பட்டாடைகள், நகை கள் போன்றவற்றை தேர்வு செய்யும் பணியும் துவங்கி யிருந்தது.

இந்த நிலையில் வந்தனா அவரது தந்தை சாரங்கபாணி, அண்ணன் ஹர்ஷவர்த்தன் ஆகியோர் மீது ரூ18 கோடி கடன் மோசடி புகார் தொடர் பான திடுக்கிடும் தகவல் வெளியானது.

மணமகள் வந்தனா உள்ளிட்டோர் மீது கனரா வங்கி சார்பில் புகார் செய் யப்பட்டுள்ளது. இதை சி.பி.ஐ. விசாரித்து வருகிது. விசாரணையில் மூவரும் ஊட்டியில் நடத்திவரும் பள்ளி கூடம் மற்றும் தொழிற் சாலைகளின் போலி ஆவணங்களை கொடுத்து கனரா வங்கியில் இருந்து ரூ.18 கோடி கடன் பெற்று மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

வந்தனாவின் அண்ணன் ஹர்ஷவர்த்தன் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. போலி ஆவணம் தயாரித்து வாடகை வீட்டை விற்றதாகவும் புகார்கள் உள்ளது.

இந்த தகவல்கள் வெளி வர தொடங்கியதும் நடிகர் ஸ்ரீகாந்த்- வந்தனா திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டது பெண் வீட்டார் "உண்மைகளை மறைத்து ஏமாற்றி விட்டதாகவும் தனது மகனின் எதிர்கால வாழ்வில் அக்கறை உள்ளது எனவும் ஸ்ரீகாந்த் தந்தை தெரிவித்தார்.

மணமகள் மீது மோசடி புகார் உள்ளதால் ஸ்ரீகாந்த் - வந்தனா திருமணம் ரத்தாகும் என அவரது குடும்ப நண்பர் தெரிவித்தார்.

இதற்கிடையே மோசடி புகார்கள் ஏதும் தன் மீது இல்லை என்று மணப் பெண் வந்தனா பகிரங்கமாக அறிவித்தார். அவர் மாலை மலர் நிருபரிடம் கூறியதாவது:-

என் பெயரில் ஒரு ரூபாய் கூட எந்த வங்கியிலும் கடன் இல்லை. வழக்கு இல்லை. என்னுடைய கையெழுத்து எதிலும் இல்லை. வந்தனா நல்ல பொண்ணு. என்னை நம்பி ரூ.18 கோடி யார் கொடுப்பார். கடன் இருந்தால் ஸ்ரீகாந்த் உடன் எப்படி திருமணம் செய்து கொள்வேன்.

என்னிடம் யாருமே விளக்கம் கேட்கவில்லை. அண்ணன் குடும்பம் தனியாக உள்ளது. சொல்ல போனால் அவருக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை அண்ண னின் கடனுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவரை குடும்பத்துடன் தொடர்பு படுத்தாதீர்கள் நிச்சய தார்த்தத்திற்கு ஹர்ஷவர்த்தன் வரவில்லை. அதில் நான் அப்பா, அம்மா, மட்டுமே இருந் தோம்.

தேவையில்லாமல் அண்ணனிடம் தொடர்பு படுத்தி, திருமணத்தை கெடுக்க நினைக்கிறார்கள். ஊட்டி காலேஜில் படிப்பு தொடர்பாக வேலை பார்க்கிறேன்.

எல்லாமே நல்ல படியா நடந்து கிட்டிருந்தது. செய்திகள் வந்த பின்னர் குழப்பங்கள் இருக்கு 2 நாட்கள் ஸ்ரீகாந்தை தொடர்பு கொள்ள முடிய வில்லை. என்னுடைய வாழ்க்கையே போய்விட்டது. இனிமேல் பேசி சரி செய்ய வேண்டும்.

ஏன் ஸ்ரீகாந்திடம் பொய் சொல்லி திருமணம் செய்ய வேண்டும் 2 வருடம் பிரண்ட்ஸ் ஆக உள்ளோம் பொய் சொல்ல அவசியம் இல்லை. அண்ணன் பற்றி எனக்கு தெரியாது. நான் சின்ன பொண்ணு. என் வாழ்க்கையை கெடுத்து விட்டார்கள். திருமணத்துக்கு எல்லா வேலையும் நடந்து விட்ட நிலையில் உள் நோக்கத்தோடு தவரான தகவலை பரப்பி உள்ளனர்.

வழக்குகள் எதற்கும் எனக்கும் தொடர்பில்லை. நான் ஸ்ரீகாந்தின் எந்த படத் திற்கும் பைனான்ஸ் பண்ண வில்லை. எங்கள் திருமணத்தை நிறுத்த மாட்டார்கள் என நம்புகிறேன். எல்லோரது ஒத்துழைப்பும் இருந்தால் உண்மை அவர்களுக்கு புரியும்.

இவ்வாறு வந்தனா கண்ணீர்மல்க கூறினார்.

விடுப்பு : Viduppu.com

20 May 2007

-------------------------------------

:angry: :angry: :angry:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.