Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அடித்துக்கொள்ளும் பங்காளிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

pg4.jpg

பஞ்சாப் மாநிலமே இப்போது அதிகபட்ச கொதிநிலையில் இருக்கிறது. உறையில் இருந்து உருவப்பட்ட வாளைக் கையில் ஏந்தியபடிஇ முகத்தில் கோபம் கொப்புளிக்க தெருவில் சீக்கியர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக்கொண்டிருந்தால்இ ஏன் அனல் பறக்காது? எங்கு பார்த்தாலும் சாலை மறியல்இ கடை உடைப்புஇ கல்வீச்சு என்று பஞ்சாப் மாநிலமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது.

சீக்கியர்களின் புண்ணிய பூமியான பஞ்சாப்இ திடீரென கலவர பூமியாக அவதாரம் எடுத்திருப்பதற்கு என்னதான் காரணம்?

குர்மித்சிங் ராம் ரஹீம் என்பவரது புகைப்படம்தான் இத்தனை காரியங்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. ‘தேரா சச்சா சவுதா’ என்பது சீக்கிய மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்று. இதன் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ராம் ரஹீம். இவரை எல்லோரும் ப்ரேம்ஜி என்றே மரியாதையாக அழைப்பது வழக்கம். சமீபத்தில் பஞ்சாப் நாளிதழ்கள் சிலவற்றில் பிரும்மாண்டமான விளம்பரம் ஒன்று வெளியானது. அதில் ப்ரேம்ஜிஇ சீக்கிய மதத்தின் பத்தாவது குருவான குருகோவிந்த் சிங்கைப் போலவே உடை அணிந்துகொண்டு அட்டகாசமாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தார்.

இங்குதான் பிரச்னையே ஆரம்பித்தது. அதிர்ச்சி அடைந்த மற்ற பிரிவு சீக்கியர்கள்இ ‘அது எப்படி குரு கோவிந்தைப் போல உடையணியலாம்? இது நமது மதத்தையே அவமானப்படுத்தியது போல’ என்று வெடிக்க ஆரம்பித்துவிட்டனர்இ சீக்கிய மதத்தின் மற்ற பிரிவினர்.

இந்த ஆத்திரம் கொஞ்சம் கொஞ்சமாக விஸ்வரூபமெடுத்துஇ தேரா சச்சா பிரிவினருக்கும்இ மற்ற பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதலாக உருமாறியது. குறிப்பாகஇ சிரோண்மணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டியினர் தேரா சச்சா பிரிவினருக்கு எதிராக ரொம்பவே ஆத்திரமடைந்தனர். பத்திண்டா என்கிற பகுதியில்இ ஏராளமான சீக்கியர்கள் கையில் வாளோடு களத்தில் குதித்தனர். கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டனர். ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டதோடுஇ கடைகளும் வர்த்தக நிறுவனங்களும் சரமாரியாக அடித்து நொறுக்கப்பட்டன; நொறுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

குரு கோவிந்தை அவமானப்படுத்திய ப்ரேம்ஜியைக் கைது செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் உரும ஆரம்பித்தனர். இந்தக் கலவரம் மெல்ல மெல்ல அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. பாட்டியாலா நகரிலுள்ள ஆர்ய சமாஜ் சவுக் பகுதிஇ சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி. அங்கு சீக்கியர்கள் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டுக் கொண்டி ருப்பவர்கள். இந்த அமைப்புகளைச் சேர்ந்த ஏராளமான சீக்கியர்கள் ப்ரேம்ஜியின் செயலுக்கு எதிராகப் பெரிய அளவில் கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அப்போது அவர்கள் ப்ரேம்ஜி மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகக் கடுமையாக கோஷமிட்டனர்.

இதனால் அந்தப் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் பதற்றம் ஏற்பட்டது. ஊர்வலத்தில் சென்றவர்கள் கையில் வாள் மற்றும் தங்களுடைய புராதன ஆயுதங்களோடு சென்றுஇ வழியில் இருக்கின்ற கடைகளை அடைக்குமாறு மிரட்டினர். இதற்கு தேரா சச்சா சவுதா பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்துஇ மூடிய கடைகளை எல்லாம் திறக்குமாறு வலியுறுத்தினர். இதனால் ஊர்வலக்காரர்களுக்கும்இ தேரா சச்சா பிரிவினருக்கும் இடையே கடுமையான மோதல் உருவானது.

இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆவேசமாக அடித்துக் கொண்டனர். அப்போது நடந்த கல்வீச்சுத் தாக்குதலில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததோடுஇ சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ராஜ்புரா என்கிற பகுதியில் இருந்த கடை ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது.

நிலைமை எல்லை மீறிப் போகவேஇ காவல்துறையைக் களம் இறக்கியது மாநில அரசு. ஆனால்இ அவர்கள் மீதும் தாக்குதல் நடக்கவேஇ சம்பந்தப்பட்ட இடங்களில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனாலும் பிரச்னை அடங்கியபாடில்லை. கலவரம் மேலும் மேலும் அதிகரித்த வண்ணமே இருந்தது. லூதியானாஇ அமிர்தசரஸ் ஆகிய இடங்களில் கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.

பக்வாராஇ பாட்டியாலாஇ பதிந்தாஇ மோகா ஆகிய இடங்களில் தேரா பிரிவினரும் மற்ற சீக்கிய அமைப்பினரும் ஒருவரையருவர் எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் பள்ளிஇ கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் உருவான கலவரத் தீ சீக்கியர்கள் வசிக்கின்ற மற்ற மாநிலங்களுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சீக்கியர்கள் ப்ரேம்ஜியின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.

இப்படித் தொடர்ந்து பல மாநிலங்களுக்கும் இந்தக் கலவரம் பரவிக் கொண்டிருப்பதைப் பற்றி டெல்லி மேல்சபையில் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவாலியா பிரச்னை எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல்இ ‘மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு கலவரங்களில் ஈடுபடுவதை அனுமதிக்க முடியாது’ என்று தெரிவித்தார்.

சரிஇ இதற்கெல்லாம் காரணமான ப்ரேம்ஜி என்ன சொல்கிறார்?

“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. பக்தர்கள் எனக்குக் கொடுத்த ஆடைகளைத்தான் அணிந்து கொண்டேன்’’ என்கிறார் கூலாக!

ஆனால் ப்ரேம்ஜியைக் கைது செய்தால் ஒழிய போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கின்றன சீக்கிய அமைப்புகள். ஆனால்இ அவரைக் கைது செய்யும் பட்சத்தில் கலவரத்தின் வீரியம் அதிகரிக்கும் என்பதால்இ கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது மாநில அரசு. இதனை வெளிக்காட்ட முடியாததால் பிரச்னையை காங்கிரஸ் கட்சியின் தலையில் போட்டிருக்கிறது.

“இத்தனை கலவரத்துக்கும் காரணம் காங்கிரஸ் கட்சிதான். சிறிய விவகாரத்தை ஊதிப் பெரிதாக்கிவிட்டிருக்கிறது’

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.