Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குமார் பொன்னம்பலம் முதல்௪௪தொடரும் படுகொலைகள் சூத்திரதாரிகள் யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குமார் பொன்னம்பலம் பற்றி தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வாறு கூறுகிறது.

அவர் இலங்கையின் பிரபலகுற்றவியல் வழக்கறிஞர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக வாதடியவர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்களின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட 98வீதமான வழக்குகளில் எதிரிகளுக்காக தோன்றி வாதடியவர். கிருஷாந்தி கொலை வழக்கு மற்றும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் படுகொலை வழக்கு உட்பட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வழக்குகளில் தோன்றி வாதாடியவர்.

மனித உரிமைகளை மீறிவந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவரின் செயல்கள் சவாலாக இருந்தது. அரசு தலைவராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் தான்தோன்றித்தனமான தமிழ் மக்களுக்கெதிரான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அர்வுகளில் தமிழ் மக்களின் பிரதிநிதியாக தோன்றி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்தினார். அவைதான் அவரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்தது என தமிழர் மனித உரிமை மையம் குறிப்பிடுகிறது.

மனித உரிமை மையத்தின் அறிக்கையின் படி சந்திரிக்காவிற்கு ஒரு சவாலாக குமார் பொன்னம்பலம் இருந்தார். அதுதான் அவரின் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிட்டது என்ற சந்தேகம் கிளப்பட்டிருந்தது.

சரி குமார் பொன்னம்பலம் அன்றைய அரசுதலைவர் சந்திரிக்காவுக்கு எவ்வாறு சவாலாக இருந்தார்இ அந்த சவால்களை முறியடிக்க சந்திரிக்கா தீட்டிய சதிதிட்டங்கள் என்ன என்பதை பார்ப்போம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையத்தினால் வருடாந்தம் ஜெனிவாவில் நடத்தப்படும் உலகநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மனித உரிமை அமர்வில் இலங்கையில் இருக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதியாக குமார் பொன்னம்பலம் கலந்து கொண்டவர். இதன் போது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை ஆதாரங்களுடன் சமர்ப்பித்தவர்.

1997 மார்ச் மாதம் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்ற போது கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டு அவரின் பிரயாணப்பை ஆவணங்களை பரிசீலித்தல் என்ற பெயரில் நீண்டநேரம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். இராணுவத்தினரே இந்த விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் சமர்ப்பிப்பதற்கு என தயாரித்து சென்ற அறிக்கையை எடுத்து சென்று பின்னர் திருப்பி கொடுத்தனர்.

யாழ்ப்பாணத்தில் 600க்கு மேற்பட்ட பொதுமக்களை கடத்திச்சென்று படுகொலை செய்ததுஇ 10இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களை தங்கள் இருப்பிடங்களிலிருந்து விரட்டி இடப்பெயர்வை ஏற்படுத்தியமை உட்பட தமிழ் மக்களுக்கு எதிராக 1996ல்சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் விபரமாக அறிக்கை இடப்பட்டிருந்தது. இதை அறிந்த கொண்ட சந்திரிக்கா குமார் பொன்னம்பலத்தை ஜெனிவா செல்லவிடாது தடுக்கும் நோக்கில் இராணுவத்தினரை அனுப்பி கெடுபிடிகளை ஏற்படுத்தினார்.

ஆனாலும் குமார் பொன்னம்பலம் 53வது ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை அமர்வில் திட்டமிட்டபடி கலந்து கொண்டார்.

நானே தலைமைதாங்கி தமிழர்களை கொலை செய்வேன் என சந்திரிக்கா கூறியிருந்தது பற்றி முன்னர் பார்த்தோம். அதே போன்று தமிழர்கள் வந்தேறுகுடிகள் என்றும் தென்னாபிரிக்கா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியும் பெரும் சர்ச்சையையும் தமிழ் மக்களின் எதிர்ப்பையும் உருவாக்கியிருந்தது.

Pசநளனைநவெ ஊhயனெசமைய முரஅயசயவரபெய hயன ளயனை : "வுhநல யசந றயவெiபெ ய ளநியசயவந ளவயவந - வாந அiழெசவைல வுயஅடைள றாழ யசந ழெவ வாந ழசபைiயெட hயடிவையவெள ழக வாந உழரவெசல".

தென்னாபிரிக்க தொலைக்காட்சிக்கு சந்திரிக்கா வழங்கிய பேட்டியில்

அவர்கள் தனிநாடு கோருகிறார்கள். சிறுபான்மையாக இருக்கின்ற தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீககுடிகள் அல்ல. அவர்கள் வந்தேறுகுடிகள் என தெரிவித்திருந்தார்.

இந்த பேட்டி தொடர்பாக குமார் பொன்னம்பலம் கடும் கண்டனம் தெரிவித்தார்.

குமார் பொன்னம்பலம் சொர்ணவாகினி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் வந்தேறு குடிகள் என கூறிய சந்திரிக்காவை கண்டித்த அவர் ஐரோப்பியர்கள் வரும்வரை தமிழர்களின் ஆட்சியே இங்கு இருந்தது. விடுதலைப்புலிகள் தமது தாயகத்தை மீட்டெடுப்பதற்காக ஆயுதப்போராட்டத்தை நடத்துகிறார்கள். அந்த ஆயுதப்போராட்டத்தை ஆதரிக்கும் அதேவேளை நான் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என்றும் குமார் பொன்னம்பலம் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

சொர்ணவாகினி தொலைக்காட்சியில் குமார் பொன்னம்பலம் வழங்கிய பேட்டியை தொடர்ந்து அவரை பழிவாங்க வேண்டும் என சந்திரிக்கா மூர்க்கத்தனமாக திட்டமிட்டார்.

சிங்கள இனவாத பத்திரிகையான திவயின 1998 நவம்பர் 18ம் திகதி இதழில் குமார் பொன்னம்பலம் புலிகளின் தீவிர ஆதரவாளர் அவரை கொழும்பில் இருக்க அனுமதிக்க கூடாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் 2(1) (ர்) பிரிவின் கீழ் அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் ஏன் இதுவரை கைது செய்யப்படவில்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் கொட்டகதெனியாவிடம் கேள்வியும் எழுப்பியிருந்தது.

சொர்ணவாகினி தொலைக்காட்சி பேட்டி தொடர்பாகவும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளன் என கூறியது தொடர்பாகவும் 1999 ஜனவரி 13ம் திகதியும் 20ம் திகதியும் ஸ்ரீலங்கா பொலிஸார் குமார் பொன்னம்பலத்திடம் விசாரணைகளை நடத்தி வாக்குமூலத்தையும் பெற்றனர்.

அந்த விசாரணைகளின் போது பொலிஸார் சிங்களத்திலும் ஆங்கிலத்திலுமே குமார் பொன்னம்பலத்திடம் கேள்விகளை கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்த குமார் பொன்னம்பலம் தனது தாய்மொழியான தமிழில் மட்டுமே வாக்குமூலம் தருவேன். தமிழ் இந்த நாட்டின் தேசிய மொழி. தமிழில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் மட்டுமே கையொப்பம் இடுவேன் என அவர் திடமாக கூறினார். அதன் பின்னர் மொழிபெயர்பாளரான முஸ்லீம் நபர் ஒருவரை கொண்டு குமார் பொன்னம்பலத்திடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டது.

குமார் பொன்னம்பலம் மீது பாதுகாப்பு அமைச்சு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிட்டுக்கொண்டிருந்தனர

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.