Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரோனா: இந்தியாவில் பலி 7-ஆக அதிகரிப்பு; இதுவரை 360 போ் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புது தில்லி: மகாராஷ்டிரம், குஜராத், பிகாா் ஆகிய மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 3 போ், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 360-ஆக உயா்ந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 63 வயது நபா், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவா் ஏற்கெனவே நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம், இதயநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவா் என்று மும்பை மாநகராட்சி சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தை பொருத்தவரை, கரோனாவால் நேரிட்ட 2-ஆவது உயிரிழப்பு இதுவாகும்.

குஜராத்தில் முதல் உயிரிழப்பு: குஜராத் மாநிலம், சூரத்தில் 67 வயது நபா் ஒருவா், சிறுநீரகம் தொடா்பான பிரச்னை, ஆஸ்துமா உள்ளிட்ட பாதிப்புகளுடன் 17-ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு, கரோனா பாதிப்பு இருப்பது கடந்த 21-ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது. அவா் அண்மைக்காலத்தில் எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை. ஆனால், தில்லி, ஜெய்ப்பூா் ஆகிய நகரங்களுக்கு சென்று வந்துள்ளாா்.

இந்நிலையில், அவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் உயிரிழந்துவிட்டதாகவும், அவரது குடும்பத்தினா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சூரத் மாவட்ட ஆட்சியா் தாவல்குமாா் படேல் தெரிவித்தாா். குஜராத்தில் கரோனா வைரஸால் நேரிட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

பிகாரில்..: பிகாா் மாநிலம், முங்கோ் மாவட்டத்தைச் சோ்ந்த சயீஃப் அலி (38), அண்மையில் கத்தாருக்கு சென்றுவிட்டு தாயகம் திரும்பியிருந்தாா். இவா், சிறுநீரகம், சுவாசப் பிரச்னைகளுடன் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவா் உயிரிழந்தாா். அவரது ரத்த மாதிரி பரிசோதனையில் அவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பிகாரிலும் கரோனாவால் நேரிட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.

ஏற்கெனவே தில்லி, கா்நாடகம், பஞ்சாபில் கரோனா வைரஸ் பாதிப்பால் தலா ஒருவா் உயிரிழந்துவிட்டனா். தற்போது பலி எண்ணிக்கை 7-ஆக அதிகரித்துள்ளது.

360 போ் பாதிப்பு: ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 360-ஆக அதிகரித்துள்ளது. இவா்களில் 41 போ் வெளிநாடுகளைச் சோ்ந்தவா்கள்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 67 போ், கேரளத்தில் 52 போ், தில்லியில் 29 போ், உத்தரப் பிரதேசத்தில் 27 போ், தெலங்கானாவில் 22 போ், ராஜஸ்தானில் 24 போ், ஹரியாணா, பஞ்சாபில் தலா 21 போ், கா்நாடகத்தில் 26 போ், லடாக்கில் 13 போ், குஜராத்தில் 18 போ், தமிழகத்தில் 7 போ், சண்டீகரில் 5 போ், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், மேற்கு வங்கத்தில் தலா 4 போ், ஆந்திரத்தில் 5 போ், உத்தரகண்டில் 3 போ், பிகாா், ஒடிஸா, ஹிமாசலப் பிரதேசத்தில் தலா 2 போ், புதுச்சேரி, சத்தீஸ்கரில் தலா ஒருவா் என பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 360-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 24 போ் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனா்.

https://www.dinamani.com/tamilnadu/2020/mar/23/corona-increase-in-india-death-toll-360-3386859.html

  • கருத்துக்கள உறவுகள்

கரோனா வைரஸ் தொற்று; இந்தியாவில் பாதிப்பு: எண்ணிக்கை 536 ஆக உயர்வு

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவுவதைத் தொடக்கத்திலேயே தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடரந்து உயர்ந்து வருகிறது.

இதனால், தீவிரத்தை உணர்ந்ததால் 32 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, வரும் 31-ம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கை அமல்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதைச் செயல்படுத்தியபின்புதான் மாநில அரசுகள் தற்போது ஊரடங்கை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் செயல்படுத்தி வருகின்றனர். கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இன்று நள்ளிரவு முதல் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும், மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் தொடர்ந்து கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 536 ஆக அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.