Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்கு மீண்டும் அமுல் : நிலைமையை சாதகமாக்கும் வர்த்தகர்கள் – மக்கள் அதிருப்தி!

Featured Replies

நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை தளர்த்தப்பட்டிருந்த ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களிலேயே இன்று(திங்கட்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்தது.

இந்தநிலையிலேயே இன்று நண்பகல் 2 மணி முதல் மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன், மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் நாள் குறித்த அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டிருந்த காலப்பகுதியில் மக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது மன்னார், வவுனியா, மட்டக்களப்பு மற்றும் மலையத்தின் சில பகுதிகளில் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதைய நிலையினை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்தும் சிலர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன், இவ்வாறானவர்கள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்று பரவலை மையப்படுத்தி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், யாழ்ப்பாணம் ஆகிய 6 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கானது மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://athavannews.com/ஊரடங்கு-மீண்டும்-அமுல்-ந/

  • தொடங்கியவர்

மன்னாரில் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட பாதுகாப்பு கடமையில்!

மன்னாரில் இன்று காலை காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தமது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். எனினும் மக்களின் வருகை குறைந்த அளவில் காணப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் மீன் பிடி, விவசாயம் மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்களே அதிகமாக காணப்படுகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக காவல் துறை ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மீன் பிடி, விவசாயம் மற்றும் நாளாந்த கூலித் தொழில் ஈடுபட்டு வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

மேலும் மக்கள் தமது நகைகளை நகை அடகு பிடிக்கும் நிலையங்களுக்குச் சென்று அடகு வைத்து பணத்தை பெற்று பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.

இதே வேளை மன்னார் நகரில் நிரந்தரமாக மரக்கறி வியாபரம் மேற்கொண்டு வருகின்ற மரக்கறி வியாபரிகளுக்கு தம்புள்ளைக்குச் சென்று மரக்கறி வகைகளை பெற்று வருவதற்கான பாஸ் உரிய முறையில் வழங்கப்படவில்லை என்றும், மன்னாரில் மரக்கறி வியாபாரம் செய்யாத ஏனைய வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற வர்த்தகர்கள் பலருக்கு மரக்கறி வியாபாரம் மேற்கொள்ள அனுமதி வழக்ஙப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மரக்கறி வகைகளை கொண்டு வந்து விற்பனைகளை மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மன்னாரில் நிரந்தரமாக மரக்கறி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, மன்னார் புதிய அரச பேரூந்து தரிப்பிட பகுதியில் மரக்கறி வகைகள் கட்டுப்பாட்டு விலையினை விட அதி கூடிய விலைக்கே விற்பனை செய்யப்பட்டதாக நுகர்வோர் விசனம் தெரித்தனர்.

எனினும் இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் மரக்கறி வகைகள் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

குறிப்பாக மன்னார் மாவட்டம் சூழவும் பொலிஸாரும், இராணுவத்தினரும் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார் பிரதான பாலத்தினூடாக மன்னாருக்குள் வருபவர்கள் மற்றும் மன்னாரில் இருந்து வெளி இடங்களுக்குச் செல்பவர்களின் தேசிய அடையாள அட்டையினை இராணுவம் பரிசோதனை செய்த பின்னரே செல்ல அனுமதிக்கின்றனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/140162

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.