Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''உலகப்பொருளாதாரம் மீட்சியடையாமல் இலங்கைப் பொருளாதாரத்திற்கு மீட்சியில்லை"

Featured Replies

கொவிட் - 19 கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுக்கு மத்தியில் உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்கு மீட்டுக்கொண்டு வருவதற்கு உலக சமூகங்களும், நிதிநிறுவனங்களும் ஐக்கியப்பட வேண்டுமென்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகருமான அஜித் நிவாட் கப்ரால் கூறியிருக்கிறார்.

இலங்கை போன்ற வளர்முக நாடுகள் கொவிட் - 19 தொற்றுநோயின் விளைவாக வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதாரத்தில் மந்தமான வளர்ச்சி மற்றும் கடன் பிரச்சினைகளை எதிர்நோக்கக்கூடும். தமது எல்லைகளுக்கு அப்பால் தோன்றிய சூழ்நிலைகளினால் உருவாக்கப்பட்ட பொருளாதார நிலைவரமொன்றுக்கு இலங்கை முகங்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

எனவே உலகப் பொருளாதாரத்தைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து, தீர்வொன்றை வழங்க உலக சமூகம் ஒன்றிணைய வேண்டும்.

நாட்டில் கொவிட் - 19 பரவலுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மத்தியில் வணிக மற்றும் தொழிற்துறையைக் காப்பாற்றுவதற்கும், பொருளாதாரத்தை நிலையுறுதியாக வைத்திருப்பதற்கும் இலங்கை முயற்சிகளை மேற்கொள்ளும் என்று கப்ரால் சீனாவின் உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான சின்ஹவிற்குக் கூறியிருக்கிறார்.

இலங்கைக்கு அந்நியச்செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளாக உல்லாசப்பயணத்துறை மற்றும் ஆடை உற்பத்தித்துறை என்பன விளங்குகின்றன. வெளிநாட்டுக் கேள்வியில் தங்கியிருக்கும் இவ்விரு துறைகளும் கொவிட் - 19 மேற்குலகில் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தினால் குன்றிப்போயுள்ளன.

உலக நிலைவரம் சீராகாமல் எவ்வளவு பெரிய தொகையில் ஊக்குவிக்குக் கொடுப்பனவுகளை வழங்கினாலும் இலங்கையினால் இத்துறைகளுக்குப் புத்துயிர் அளிக்கமுடியாது என்றும் கப்ரால் கூறியிருக்கிறார்.

எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடைந்திருப்பது இலங்கையின் எண்ணெய் இறக்குமதிக்கு இலாபகரமானதாக இருப்பிலும் கூட, மேற்காசியாவில் இலங்கையர்கள் தொழில்வாய்ப்புக்களை இழக்கக்கூடும். வெளிநாட்டில் தொழில்புரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் அந்நிய செலாவணியில் வீழ்ச்சியேற்படும் பட்சத்தில் எண்ணெய் விலை குறைவினால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை.

இரண்டாவது உலக மகாயுத்தத்திற்குப் பின்னர் பொருளாதார மீட்சியையும், புனர்நிர்மாணத்தையும் ஊக்குவிப்பதற்காக அமைக்கப்பட்ட பிரிட்டன் வூட்ஸ் ஏற்பாட்டை ஒத்த சர்வதேச நடவடிக்கையொன்றைத் தற்போதைய நெருக்கடி வேண்டிநிற்கிறது.

இந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதற்கு உலகலாவிய கொள்கைகளை வகுக்குமாறு நாம் ஜி - 20, சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற அமைப்புக்களிடம் வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமரின் ஆலோசகர் சின்ஹவாவிற்குத் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/79032

 

  • தொடங்கியவர்

கோவிட்-19: சீறீலங்காவும் எதிர்காலமும்

எப்போதும் ஒரு நாட்டிலான கோவிட்-19 வைரஸ் தொற்றின் போது முதலில் நாட்டிற்கு வெளியில் இருந்து வந்தவர்களே நோய்த் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்படுவார்கள். பின்னர் அவர்களுடன் ஏதோவிதத்தில் தொடர்புபட்டவர்கள் நோய்த் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்படுவர்.

இவர்களை கடந்து நோய்த் தொற்று இடம்பெறுகிறதா? என்பது தொடர்ந்தும் அதீத கவனத்தில் கொள்ளப்படும். பொதுவாக மூன்றாம் நாலாம் வாரங்களில், அவ்வாறான தொற்றுடையவர்கள் சமூகத்தில் இருந்து அடையாளம் காணப்படுவது சாத்தியமாகும். அதன் பின்னர் அது எவ்வளவு தூரம் அந்நாட்டின் மக்களிடையே பரவ ஆரம்பித்துள்ளது என்பதை, அறிந்து கொள்ள எங்கெல்லாம் நோய்த்தொற்று அதிகம் அடையாளம் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் அதிக சோதனைகளை செய்வதினூடாக சாத்தியமாகும்.

அவ்வாறு செய்யப்படுமானால், அவ்வாறான இடங்களை முன்கூட்டியே அடையாளம் கண்டு, ஏனைய பகுதிகளில் இருந்து அவற்றை தனிமைப்படுத்துவதினூடாக பரவலான நோய்த்தொற்று பரம்பலைத் தடுத்துவிடமுடியும். இல்லையேல், நோய்த் தொற்று அந்நாட்டின் பல பகுதிகளுக்கும் ஓரிரிவர் மூலம் சென்றுவிட்டாலே, அது பெரும் பரம்பலுக்கு பின்னர் வழிகோலிவிடும். இது தான் இன்று பல நாடுகள் எதிர்கொள்ளும் சவால் நிலையாகும்.

இதையே முதலில் ஒருவர் மூலம், இருவர் அல்லது மூவருக்கு வைரஸ் தொற்று ஏற்ப்பட்டால், அவ்வாறு பரப்ப்படும் நோய்த்தொற்று முதல் மாத முடிவில் 244 பேரையும், அதுவே இரண்டாம் மாத முடிவில் 59604 பேரையும் தொற்றும் வாய்பிருக்கு. இவ்வாறான பரம்பல் அதிகரிப்பை அதீத கவனத்தில் கொண்டியங்கும் அரசுகள், அந்த பரம்பல் வேகத்தை கட்டுக்குள் வைத்து நகர முடியும். ஆனால் தனது மூன்றாவது வாரத்தில் உள்ள சிறீலங்கா, தற்போதே சமூகப் பரம்பலை அதிகரித்த எண்ணிக்கையில் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ள நிலையில், அது பரந்த சோதனைகளை செய்ய வேண்டும் என இத்துறைசார் வல்லுனர்கள் சிறீலங்கா அரசை வலியுறுத்துகின்றனர்.

ஆனால் சிறீலங்கா அம்முன்னெடுப்பை இதுவரை செய்யவில்லை எனவும் விசனம் தெரிவிக்கின்றனர்.

கீழே உள்ள வரைபின் (நன்றி: டெய்லி மிரர்) மூலம், ஏனைய நாடுகள் சீறீலங்காவிற்கு தரும் பாடம் என்ன என்பதை அவர்கள் கோடிட்டுக் காட்டுகின்றனர். இதில் குறிப்பிட்டுள்ள ஏனைய நாடுகளான அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, இங்கிலாந்து என்பன தமது எட்டாவது வாரத்தின் பல்வேறு நாட்களிலும், தென்கொரியா தனது 9ஆவது வாரத்திலும், தற்போது உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது மூன்றாவது வாரத்திற்குள் பயணிக்கும் சிறீலங்காவின் பயணம், கொவிட்-19 விடயத்தில் எவ்வாறு அமையப்போகிறது என்பதே, வருகின்ற நாட்கள் வாரங்கள் சொல்லப்போகும் செய்தியாகும். வெறும் ஊரடங்கு மாத்திரம் சாதித்துவிடுமா? இல்லையேல், அதையும் கடந்து வல்லுனர்கள் வலியுறுத்துவது போல் பல நடவடிக்கைகள் சமகாலத்தில் முன்னெடுக்கப்பட்டேயாக வேண்டுமா? சமூகப்பரம்பல் ஏற்கனவே வெளிப்பட்டுள்ள நிலையில், அவ்அவ்ப்போது ஊரடங்கை தளர்த்தி, மக்களை வெளியில் கொண்டு வந்து, நெருக்கமாக கூடலுக்கு அனுமதித்து, நோய்த் தொற்று பரம்பலுக்கு வழியமைத்துவிட்டு, பின்னர் அடைத்துவிடுவது சரியான முறைமையா? என்பதெல்லாம் வரும் வாரங்கள் வெளிப்படும் விடயங்கள் என்றாலும், அவ்விடயங்கள் கூட வெளிப்படைத்தன்மையுடன் அணுகப்படுமா? என்பதும் பெரும் கேள்வியே?

இரு வல்லுனர்களின் கருத்து வருமாறு:
“If we do not expand testing and identify those with the virus the curfews would be useless” - Prof. H. W. Dissanayake
“If we do not actively detect Covid-19 infected, the iceberg would become a volcano” - Prof. Harendra de Silva

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.
 
 
(முகநூல்) 

கையேந்தி பிழைப்பு நடத்திக்கொண்டு மகாபொய்வாம்ச வீராப்பு கதைக்கும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரம் மேலும் மேலும் கடனில் மூழ்கும் சூழ்நிலையை கோவிட் 19 வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. குள்ளநரி ரணில் இந்தச் சிக்கல்களில் இருந்து தப்பிய அதிஷ்டக்காரனாக உள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.