Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊரடங்குச் சட்டத்தை மீளப்பெறாது தொடர வேண்டும் - ஆலோசனை கூறுகிறது அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் : காரணம் இது தான் !

Featured Replies

உலக சுகாதார ஸ்தாபனம் வைரஸ் பரவல் குறித்து கட்டங்கள் பிரித்துள்ளமைக்கு அமைய இலங்கை (iii) a கட்டத்திலிருந்து (iii) b கட்டத்திற்கு அல்லது (iv ) கட்டத்திற்குள் செல்வதற்கான அவதான நிலைக்கு செல்லாமலிருப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளவற்றில் பல நடவடிக்கைகளை இலங்கையும் முன்னெடுத்துள்ளது. எனினும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிக்கையொன்றியை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

அதற்கமைய இலங்கையில் 80 வீதம் சமூக இடைவெளி பேணப்படுகிறது. முழுமையாக ஒரு கிராமத்தை அல்லது நகரத்தை தனிமைப்படுத்தல், மிக அவதான மட்டத்திலுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தி தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்தல், ஏனைய பிரதேசங்களில் தற்காலிகமாக ஊரடங்கு சட்டத்தைப் பிறப்பித்தல் என்ற 3 கட்டங்களில் சமூக இடைவெளி பேணப்படுகிறது.

சமூகத்தில் 80 வீத சமூக இடைவெளியை பேணுவதில் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றோம். அத்தோடு வங்கி சேவை, மருந்து மற்றும் உணவு உள்ளிட்ட சேவைகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்களை மேலும் வலுப்படுத்த வேண்டும். அத்தோடு ஊரடங்கு சட்டத்தை மீறாமலிருப்பதற்கும், மாவட்டங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருளாதார சந்தை, மீன்பிடித்துறைமுகம், மெனிங் சந்தை மற்றும் தேயிலை விற்பனை நிலையம் போன்ற முக்கிய பொது இடங்களில் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும். அத்தோடு ஒவ்வொருவரும் தனிநபர் நலன் தொடர்பில் தொடர்ந்தும் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் முகக்கவசம் தொடர்பில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு முறையாகப் பின்பற்றினால் வைரஸ் பரவலில் அடுத்த கட்டத்திற்குச் செல்வதைத் தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி பொது மக்களுக்கு தெளிவுபடுத்துவர்.

எதிர்காலத்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மனித மற்றும் ஏனைய திறன்களை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அனுமதிப்படும் நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கான விசேட வைத்தியசாலைகள் நிறுவப்பட வேண்டும். இதற்கு சிறந்த இடமாக கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழகத்தை நாம் பரிந்துரைக்கின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கும் அறிவித்துள்ளோம்.

அதே போன்று நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்களோ ஏனைய சுகாதாரத்துறை பணியாளர்களோ தொற்றுக்குள்ளானால் பாரிய மனிதவள குறைபாடு ஏற்படும். எனவே இது குறித்து முன்னரே தீர்வுகள் எடுக்கப்பட வேண்டும். இது வரையில் நீர்கொழும்பு, ஸ்ரீ ஜயவர்தனபுர, களுபோவில , றாகமை உள்ளிட்ட வைத்தியசாலைகளில் சில வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு சில பிரிவுகளும் முற்றாக மூடப்பட்டுள்ளன. இது போன்ற நிலைமை ஏனைய வைத்தியசாலைகளிலும் ஏற்பட்டால் சுகாதாரத்துறை அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்படக் கூடும். எனவே வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளித்தவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களை 15 நிமிடங்களில் கண்டறிவதற்காக ஏனைய நாடுகளில் மேற்கொள்ளப்படும் (ரபிட் டெஸ்ட்) Rapid Test பரிசோதனை முறைமையை இலங்கையிலும் அறிமுகப்படுத்தினால் மிகச் சிறந்ததாக அமையும். இதன் மூலம் சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானவர்களில் உண்மையில் தொற்றுக்குள்ளானவர்களையும் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் இணங்காண முடியும்.

மேலும் சிகிச்சைக்கான மருந்துகள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்குள் க்ளோரோக்வின் (Hydroxy Chlroquine) என்ற மருந்தை பயன்படுத்துவது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்தோடு எனிகன் (AVIGAN) எனப்படும் மருந்து பற்றி சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

 

https://www.virakesari.lk/article/79050
                    </div>

தொடர்ச்சியாக ஊரடங்கைப் பேணுவது பொருத்தமான நடவடிக்கையாக இருந்தாலும் மக்களுக்கு அவசியமான அன்றாட தேவைகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் அது சாத்தியமில்லை என்பதையும், இலங்கையில் அதற்கான கட்டமைப்பு இல்லை என்பதையும் அறியாத அளவுக்கு மூடர்களாக வைத்திய சங்கத்தினர் இருக்க முடியாது.

எனவே பிரதேசவாரியாக ஆவது ஊரடங்கை அவ்வப்போது தளர்த்த வேண்டியது அவசியமாகிறது.

யாழ் மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு அமுலில் இருந்த போதிலும் தமது பிரதேசத்துக்கு உட்பட்ட வங்கிகளுக்கும் மருந்தகங்களுக்கும்  நடந்து / உந்துருளியில் தனித்தனியாகச் செல்ல மக்கள் காலை 9 மணி முதல் 11 மணிவரை மக்கள் உள்ளூர் நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவை வெளியில் சொல்லப்படுவதில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.