Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நடவடிக்கைகள்

தமிழகத்தில் 57 பேருக்கு கொரோனா.. 50 பேர் டெல்லி வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 57 பேரில் 50 பேர் டெல்லியில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டது தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் 124 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களுள் நேற்று ஒரே நாளில் மட்டும் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில் 1,131 பேர் டெல்லியில் நிஜாமுதீனில் நடந்த வழிபாட்டு கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு திரும்பினர். அவர்களுள் 615 பேரை கண்டுபிடித்துவிட்டோம். இன்னும 516 பேரை இன்னும் கண்டறிய முடியவில்லை. தமிழகத்திலிருந்து அந்த டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களாகவே முன்வந்து தெரிவித்தால் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஏதுவாக இருக்கும். சமூகப் பரவலையும் தடுக்கலாம் என்றார்.

இந்த டெல்லி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தெலுங்கானாவிலிருந்து 6 பேரும், ஜம்முவிலிருந்து ஒருவரும் கொரோனா பாதிப்பால் இறந்துவிட்டனர். அது மட்டுமல்லாமல் டெல்லியில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 24 பேருக்கும், தெலுங்கானாவில் 6 பேருக்கும், அந்தமானில் 10 பேருக்கும் காஷ்மீரில் ஒருவருக்கும், தமிழகத்தில் 50 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த மத கூட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். மொத்தம் 2100 வெளிநாட்டினர் கலந்து கொண்டுள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. சமூக விலகலை புறந்தள்ளிவிட்டு 100-க்கும் மேற்பட்டோர் இந்த 100 ஆண்டுகால பழமையான மசூதியில் கடந்த மார்ச் 8-ஆம் தேதி முதல் தங்கியுள்ளனர்.

எனினும் கடந்த 22-ஆம் தேதி பிரதமர் ஊரடங்கு உத்தரவை அறிவித்தவுடன் டெல்லியில் நடக்கவிருந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மசூதி நிர்வாகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டதால் அந்த மசூதியில் தங்கியிருந்த 1,548 பேரை வெளியேற்றிவிட்டதாகவும் கொரோனா அறிகுறி இருந்த 441 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/50-coronavirus-cases-from-tamilnadu-participated-in-delhi-evet-381424.html

 

வாணியம்பாடி அடுத்த பசீராபாத்தில், இருந்து டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களின் வீடுகளுக்கு கொரோனா காய்ச்சல் பாதிப்பு குறித்து கணக்கெடுக்க சென்ற சுகாதார பணியாளர்களை சிறைப்பிடித்து ரகளை செய்த இளைஞர் ஒருவரை போலீசார் சிறப்பு கவனிப்புடன் விசாரணைக்காக இழுத்து சென்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியில் இருந்து தப்லீக் ஜமாத் மாநாட்டிற்காக டெல்லிக்கு சென்று வந்தவர்கள் 8 பேரை தனிமைப்படுத்தியுள்ள மாவட்ட சுகாதாரதுறை, சம்பந்தப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை கண்டறிய 150 பணியாளர்களை கொண்ட 75 இருவர் குழு அமைக்கப்பட்டு, வீடு வீடாக கணக்கெடுப்பு பணி வாணியம்பாடி பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள வீடுகளில் இருப்பவர்களின் விவரம், வெளியூர் மற்றும் வெளினாடு சென்று வந்த விபரம், சளி, இருமல் காய்ச்சல், என பாதிக்கப்பட்டவர்கள் யாரேனும் உள்ளார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பில் கேள்விகள் கேட்கப்பட்டன.</p>
<p>இந்நிலையில், வாணியம்பாடி பஷீராபாத் பகுதிக்கு கணக்கெடுப்புக்கு சென்ற சுகாதார பணியாளர்களை அப்பகுதியில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்தி அவர்களிடம் இருந்து கணக்கெடுப்பு சீட்டை பறித்து கிழித்துப் போட்டு அவர்களுடைய ஐடி கார்டு களையும் பறித்துக் கொண்டு சிறை பிடித்ததாக கூறப்படுகின்றது.

தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறையினரையும் அப்பகுதியினர் சிறை பிடித்துக் கொண்டு வம்பு செய்ததால், தகவலறிந்து சென்ற வாணியம்பாடி காவல்துறையினர் கணக்கெடுப்பு பணியாளர்கள் மற்றும் வருவாய் துறையினரை மீட்டனர்.

அது மட்டுமல்லாமல் சுகாதார பணியாளர்களிடம் வம்பு செய்து விட்டு வீட்டுக்குள் சென்று ஒழிந்து கொண்ட இளைஞர் ஒருவரை விசாரணைக்கு அழைத்த போது, அவர் வீட்டுக்குள் இருந்து கொண்டு போலீசுடன் செல்ல மறுத்தார்.

போலீசார் முறையாக பேசி அழைத்தும் வராமல் அடம்பிடித்த அந்த இளைஞர், வீட்டில் இருந்தவர்களின் கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்ட நிலையில் அவரை இழுத்து பார்த்த போலீசார் ஒரு கட்டத்தில் ஆவேசம் ஆனார்கள்..!

போலீஸ்காரர் ஒருவர், அடம்பிடித்த இளைஞரின் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்ததால், அந்த இளைஞர் வீதிக்கு வந்தார். அவரை அதிரடியாக போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். அவரை போலவே மேலும் ஒரு இளைஞரையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

சுகாதார பணியாளர்கள் தங்கள் நலனுக்காக வந்துள்ளார்கள் என்பது கூட தெரியாமல் எதிர்ப்பது, போராடுவது என அனைத்தும் கொரோனா பரவலை அதிகப்படுத்துமே தவிர கொரோனா வைரஸின், சமூக பரவலை தடுக்க உதவாது என்று சுட்டிக்காட்டும் காவல்துறையினர், முன் எச்சரிக்கை கணக்கெடுப்பிற்கு தொடட்புடையவர்கள் ஒத்துழைக்க வேண்டும். மீறி வம்பு செய்தால் கைது செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்துள்ளனர். 

 

https://www.polimernews.com/dnews/105722/ஒத்துழைக்க-மறுத்து-எல்லைமீறினால்-இது-தான்-நடக்கும்..!நம்ம-போலீஸ்-கெத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.