Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நெதர்லாந்தில் இருந்து வந்த தாயையும் மகளையும் காணவில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தில் இருந்து வந்த தாயையும் மகளையும் காணவில்லை

[Wednesday May 23 2007 08:18:29 AM GMT] [யாழ் வாணன்]

நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த தாயும் மகளும் காணாமல் போயுள்ளதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினமிரவு உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விமான நிலையத்திலிருந்து செத்சிறிபாய பிரதேசத்திற்கு சென்ற இவர்கள் தொடர்பாக பின்னர் தகவல்கள் கிடைக்கவில்லை என உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செத்சிறிபாய பிரதேசத்தில் இறுதியாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் என ஆட்டோ சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

tamilwin.com

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெதர்லாந்தில் இருந்து கொழும்பு வந்த தாயையும் மகளையும் கடத்தினார் கோத்தபாய.

வியாழக்கிழமை, 24 மே 2007 .யோகராஜன்

நெதர்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த தாயும் மகளும் கோத்தபாயவின் வெள்ளை வான் குழுவினரால் கடத்தபட்டு காணாமல் போயுள்ளதாக நவகமுவ பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினமிரவு உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து செத்சிறிபாய பத்தரமுல்லை பிரதேசத்திற்கு சென்ற இவர்கள் தொடர்பாக பின்னர் தகவல்கள் கிடைக்கவில்லை என உறவினர்களால் மேற்கொள்ளப்பட்ட அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் செத்சிறிபாய பத்திரமுல்லை பிரதேசத்தில் இறுதியாக ஆட்டோவில் வந்து இறங்கினார்கள் என ஆட்டோ சாரதி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். லண்டனில் இருந்து சென்ற பொபி என்பவர் கோதபாய குழுவால் கடதப்பட்டமையும் நோர்வேயில் இருந்து சென்ற சவந்தர்றாஜன் இராணுவ புலனாய்வு பிரிவால் கடத்தபட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நிதர்சனம்

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் தமிழர்கள் தேவையில்லாமல் இலங்கை செல்வதையோ, இலங்கை விமான நிலையம் ஊடாக ஓய்வெடுத்துச் செல்வதையோ தவிர்ப்பது இக்காலத்தில் நல்லதாகும்.

உங்கள் உறவுகளைச் சந்திக்க விரும்பினால் இந்தியாவிலோ, சிங்கப்பூர் மலேசியாவிலோ வைச்சுச் சந்திக்கலாம். மற்றும்படி கொழும்பு போய் வருவது என்பது ஒன்று அரசியல் காரணங்களுக்காகவும், மற்றது பணத்திற்காகவும் கடத்தப்படுகின்றனர்.

உங்களின் பாதுகாப்பு உங்களின் கையில் தான் இருக்கின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன தாயும் மகளும் விடுதலை அனுபவத்தை விபரிக்கின்றார் தாயார்

வீரகேசரி நாளேடு

அனுபவத்தை விபரிக்கின்றார் தாயார்நெதர்லாந்திலிருந்து இலங்கை வந்திருந்த தாயும் மகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் காணாமல்போயிருந்த நிலையில், அவர்கள் இருவரும் நேற்றுக்காலை வீடு திரும்பியுள்ளனர்.

கடுவலையைச் சேர்ந்த நெதர்லாந்து பிரஜாவுரிமை பெற்றுள்ள மனோரி சஜிவினி (வயது 28) மற்றும் அவரது மகளான அமர்ந்த சில்வா (வயது 7) ஆகியோரே இவ்வாறு காணாமல் போயிருந்தவர்களாவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்திருந்த தாயும் மகளும், தெரிந்த ஒருவரின் ஆவணமொன்றை கையளிக்கவென செத்சிரிபாயவிக்கு முன்பாகவுள்ள பகுதிக்குச் சென்றவேளையிலேயே காணாமல் போயிருந்ததாக நவகமுவ பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே, நேற்றுக்காலை இவர்கள் இருவரும் ஆட்டோவொன்றின் மூலம் வீடு வந்து சேர்ந்துள்ளனர். மனோரி சஜிவினியின் கனவரும் சிறிய மகனும் நெதர்லாந்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தாம் காணாமல் போனமை தொடர்பாக மனோரி சஜிவினி கருத்துத் தெரிவிக்கையில், ஆட்டோவொன்றை வாடகைக்கு அமர்த்தும் நோக்குடன் பத்தரமுல்லை சோதனைச் சாவடி அருகிலுள்ள பகுதிக்குச் சென்றவேளை, அங்கிருந்த பொலிஸார் எனது கடவுச்சீட்டை பரிசோதித்தனர். பின்னர், விசாரிக்க வேண்டும் எனக்கூறிய பொலிஸார் சிறிது நேரம் என்னையும் மகளையும் அங்கு தடுத்துவைத்தனர்.

பின்னர், பொலிஸ் என்று பொறிக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வானில் என்னையும் மகளையும் ஏற்றிச்சென்றனர். விசாரணை செய்ய வேண்டும் என்றே அழைத்துச்சென்றனர். எங்கு அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியாது. என்னிடம் பல்வேறு வகையில் விசாரணை செய்தனர். நெதர்லாந்தில் உள்ள அநேகமானோர் தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் எனக் கூறினர். விசாரணைகள் முடிந்ததன் பிறகு, தவறுதலாக எம்மை அழைத்து வந்துவிட்டதாகக்கூறி பிட்டகல பிரதேசத்தில் இன்று (நேற்று) இறக்கிவிட்டனர்.

நானும் மகளும் ஆட்டோவொன்றில் வீடு வந்து சேர்ந்தோம். கடந்த வருடமும் நான் தாய் நாட்டுக்கு வந்திருந்தேன். இவ்வாறு பிரச்சினை இருக்கவில்லை. நெதர்லாந்திலிருந்து அடிக்கடி இலங்கை வருவது வழமை என்றார்.

இவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால் வீடு திரும்பியிருக்க மாட்டார்கள்...

இதுதான்பா சொல்லிறது சிறீ லங்காவிற்கு இப்போது தேவையில்லாமல் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று...

ஆனா, நம்மட சனம் கேட்கிறார்களா? லட்சணக்கணக்கில் காசை செலவழித்து சிறீ லங்கா போய் அங்கு வெள்ளைவான் குழுவிடம் மாட்டிக்கொள்கின்றார்கள். தாமாகப் போய் தற்கொலை செய்பவர்களிற்கு என்ன அறிவுரை கூறமுடியும்?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் அவசரமாக கொழும்புக்கு போகனும்.

இப்படி பிடிச்சுக்கொண்டு போனால் என்ன செய்யிறது எண்டுதான் யோசிக்கிறன்.

யோசிக்க வேண்டிய விடயம்...

ஆகலும் அவசரமென்றால் (மரணம் போன்றவை) போகலாம்....

திருமணம் போன்றவை என்றால் இந்தியா செல்லலாம்..

பீப்பீடீப்பி கூலிக்குழு உறுப்பினர்கள் யாருடனாவது நெருங்கிய உறவு இருந்தால் பயமில்லாமல் போகலாம்.

உலகத்தமிழர்களே இந்த விடயத்தில் நாங்கள் எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும். தற்சமயம் இலங்கைத்தீவுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா இப்போதைக்கு போகாதையுங்கோ...நீங்கள் போனால் நாங்கள் யாரை கறுப்பி அக்கா என்று கூப்பிடுகிறது?

இதையும் கொஞ்சம் ஜோசித்துப் பாருங்கோ.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.