Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் இலகுரக விமானங்களை அழிக்க அதிசக்திவாய்ந்த மிக்-29 ரக விமானங்கள் தேவையா? அரசாங்கம் இந்தியாவுடனா யுத்தம் செய்யப்போகின்றது? - ஐ.தே.க.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் இலகுரக விமானங்களை அழிக்க அதிசக்திவாய்ந்த மிக்-29 ரக விமானங்கள் தேவையா? அரசாங்கம் இந்தியாவுடனா யுத்தம் செய்யப்போகின்றது? - ஐ.தே.க.

அதி சக்திவாய்ந்த மிக்-29 ரக விமானங் கள் நான்கை கொள்வனவு செய்வதற்கு அர சாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது. விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை அழிப்பதற்கு இவ்வாறான அதிசக்தி வாய்ந்த விமானங்கள் தேவையா? ஒரு விமானம் 160 கோடி ரூபா செலவில் கொள்வனவு செய்யப்படவுள்ளது.இவ்வாறான அதி சக்திவாய்ந்த விமானங்களை கொண்டு அரசாங்கம் இந்தியாவுடனா யுத்தம் செய்யப்போகிறது? இந்தியாவுடன் யுத்தம் செய்வதற்கு இவ்வாறான விமானங்கள் போதுமானதல்ல என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்னாயக்க தெவித்தார். அரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் மேற்கொண்ட மிக்-27 ரக விமானக் கொள்வனவில் 600 மில்லியன் ரூபா ஊழல் இடம் (தொடர்ச்சி) பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மிக்-29 ரக விமான கொள்வனவிலும் பாரிய நிதி மோசடி இடம் பெறும் அபாயமுள்ளது. இவ்வாறு மக்களின் பணத்தை கரைத்துக் குடிக்கும் அரசாங்கத்தை தொடர்ந்து பதவியில் வைத்திருப்பதா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய காலம் வந்து விட்டது என்று அவர் கூறினார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் கூறியதாவது: அரசாங்கம் மிக் ரக விமானங்களை கொள்வனவு செய்வதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் புலிகளின் விமானங்களை அழிப்பதற்கு அதிசக்தி வாய்ந்த விமானங்கள் தேவையா? என்பதே எமது கேள்வியாகும். புலிகளிடம் இலகுரக விமானங்களே இருப்பதாக கூறப்படுகிறது. அவ்விமானங்களை அழிப்பதற்கு மிக்-29 ரக விமானங்கள் தேவையில்லை. அரசாங்கத்தின் செயற்பாடுகளைப் பார்க்கும் போது புலிகளிடம் அதி சக்தி வாய்ந்த விமானங்கள் இருக்கின்றதா ? என்ற சந்தேகம் எழுகின்றது. இது தொடர்பில் அரசாங்கம் மக்களுக்கு உண்மையைக் கூறவேண்டும்.

அதிசக்தி வாய்ந்த விமானங்களை கொள்வனவு செய்து அரசாங்கம் இந்தியாவுடன் சண்டையிடப்போகின்றதா? இந்தியாவுடன் போர் செய்வதற்கு இவ்வாறான விமானங்கள் நான்கு போதுமானதல்ல.

புலிகளின் இலகு ரக விமானங்கள் ஒரு மணித்தியாலத்திற்கு 260 கிலோ மீற்றர் வேகத்திலும் 4000 மீற்றர் உயரத்திலும் பறக்கக்கூடியதாகும். ஆனால் அவற்றை அழிப்பதற்காக அரசாங்கம் கொள்வனவு செய்யவுள்ள மிக்-29 ரக விமானம் மணித்தியாலத்திற்கு 2400 கிலோ மீற்றர் வேகத்திலும்இ 18 ஆயிரம் மீற்றர் உயரத்திலும் பறக்கக்கூடியது. இந்நிலையில் புலிகளின் இலகுரக விமானங்களை அழிப்பதற்கு இவ்வாறான அதி சக்தி வாய்ந்த மற்றும் செலவு கூடிய விமானங்கள் தேவையா? என்ற கேள்வியை அரசாங்கத்திடம் முன்வைக்கின்றோம்.

கடந்த டிசம்பர் மாதம் அரசாங்கம் மிக்-27 ரக விமானங்கள் நான்கை கொள்வனவு செய்தது. இதற்கு 106 கோடியே 35 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் 600 மில்லியன் ரூபா நிதி மோசடி ஏற்பட்டுள்ள தாக அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அரசாங்கம் விரைவில் மிக்-29 ரக விமானங்கள் நான்கை கொள்வனவு செய்யவுள்ளதாக தெரிகிறது. மிக்-29 ரக விமானம் ஒன்றின் விலை 160 கோடி ரூபாவாகும். அப்படியானால் மேற்படி விமானக்கொள்வனவில் பாரிய நிதி மோசடி அபாயம் இருக்கிறது. உண்மையில் புலிகளிடம் இலகுரக விமானங்களை விட சக்திவாய்ந்த விமானங்கள் இருக்கிறதா என்பது குறித்து அரசாங்கம் மக்களுக்கு கூறவேண்டி உள்ளது.

அரசாங்கம் மக்களின் நிதியை மோசடி செய்வதிலேயே குறியாக உள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்வால் மக்கள் தவிக்கின்றனர். ஆனால் அரசாங்கம் அது குறித்து அக்கறையின்றி அரசாங்க செலவுகளை அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே நாட்டின் வளத்தை அழித்துக்கொண்டிருக்கும் ராஜபக்க்ஷ குடும்பத்தை தொடர்ந்தும் பதவியில் வைத்திருப்பதா? இல்லையா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

லக்ஷ்மன் கிரியெல்ல இந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஐக்கிய தேசிய கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில்:

அரசாங்கம் தொடர்ந்து முன் னுக்குப்பின் முரணான கருத்துக்களை தெரிவித்து வருகிறது. மிக்-29 ரக விமானங்கள் அவசியமில்லை என்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் கூறுகின்றது. ஆனால் மிக்-29 ரக விமானங்களை கொள்வனவு செய்ய நீண்டகால திட்டம் உள்ளதாக ஜனாதிபதி செயலகம் கூறுகின்றது. அப்படியானால் யார் உண்மையைக் கூறுவது? என்று அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புகிறோம்.

மக்களுக்கு உண்மை தெரியவேண்டும். உண்மை தகவலை அறியும் உரிமை மக்க ளுக்கு உண்டு.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறுவதற்கு முற்றிலும் எதிரான கருத்தை ஜனாதிபதி செயலகம் கூறுகிறது. பாரிய நிதி மோசடி இடம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கே உண்டு. நிதி பயன்பாடு தொடர்பாக கேள்வி எழுப்பும் அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கு உண்டு. மக்களால் நேரடியாக கேட்க முடியாத கேள்விகளை கேட்பதற்கே மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் இருக்கின்றோம். கேள்வி கேட்க முடியாவிட்டால் நாங்கள் இராஜினாமா செய்து விட்டுபோக வேண்டும். அரசாங்க மட்டத்தில் பாரிய ஊழல்கள் இடம்பெற்ற போதும் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம் செய்யாமல் மௌனமாகவே இருக்கின்றது. ஆனால் எங்கள் ஆட்சிக்காலத்தில் ஜே.வி.பி. லிப்டன் சுற்றுவட்டத்தை வாடகைக்கு எடுத்திருந்தது. நாங்கள் பொறுப்புடனேயே சில தகவல்களை முன்வைக்கின்றோம். புலிகளின் வான் படை அழிக்கப்படவேண்டும் என்பதை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் அவை முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும். பாதுகாப்பு அமைச்சு மேற்கொள்ளவுள்ள விமானக்கொள்வனவுக்காக எந்தவிதமான கேள்விப்பத்திர நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை.

- வீரகேசரி

1500 மில்லியனுக்கு ஆப்பு வைக்கப்போறாங்க அதுதான் நடக்கப்போகிறது

Edited by வானவில்

1500 மின்னியனுக்கு ஆப்பு வைக்கப்போறாங்க அதுதான் நடக்கப்போகிறது

இதில் மகிந்தா பரம்பரைக்கு சில மில்லியன்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.