Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளன: அனைத்துலக மன்னிப்புச் சபை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமடைந்துள்ளன: அனைத்துலக மன்னிப்புச் சபை

மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர் என்று அனைத்துலக மன்னிப்புச் சபை குற்றம் சாட்டியுள்ளது.

நேற்று புதன்கிழமை பிரித்தானியாவில் நடைபெற்ற அனைத்துலக மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கை வெளியீட்டின் போது அதன் பொதுச் செயலாளர் இரீனி ஹான் ஊடகவியலாளர்களிடம் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

மனித உரிமைகளின் நிலையானது இலங்கையில் மிகவும் மோசமடைந்து வருகின்றது. இந்த வன்முறைகளில் சிறிலங்கா அரசு, கருணா குழு, விடுதலைப் புலிகள் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.

மிகவும் சக்தி வாய்ந்த அரசும், ஆயுதக்குழுக்களும் திட்டமிட்ட வகையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதுடன் அச்ச நிலையையும், ஆபத்தான உலகத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

பிரிவினைகள், அவநம்பிக்கைகளால் அச்சநிலை தோன்றியுள்ளது. 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற மறக்கப்பட்ட மோதல்களான செச்சென்ய, கொலம்பியா, இலங்கை, மத்திய கிழக்கு போன்ற மோதல்களில் இடம்பெற்ற பெரும் மனித உரிமை மீறல்களை எதிர்கொண்டதில் அனைத்துலக சமூகம் செயற்திறன் அற்றுள்ளது.

சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற மோதல்களின் போது பொதுமக்கள் இரு தரப்பாலும் தாக்கப்பட்ட போதும், நீதிக்கு புறம்பான படுகொலைகள், சிறார் படைச்சேர்ப்பு, கடத்தல்கள், பலவந்தமாக காணாமல் போகச் செய்தல், ஏனைய மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள் என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன.

மீண்டும் ஆரம்பித்த மோதல்களால் வடக்கு - கிழக்கில் 215,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 10,000 மக்கள் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த மக்களுக்கு சில வேலை வாய்ப்பு சந்தர்ப்பங்களே கிடைக்கின்றன. அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற வசதிகளும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளது.

ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் வாழும் முகாம்களுக்கு நிதி வசதிகள் தாராளமாக கிடைப்பதுடன், ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலையிலும் உள்ளது. ஆனால் போரினால் இடம்பெயர்ந்து வாழும் மக்களின் முகாம்களில் மின்சாரம், போக்குவரத்து, வடிகால் அமைப்பு வசதிகள் போன்றன போதியளவில் இல்லை.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை மக்களும் மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகின்றனர். குறுகிய நோக்கங்களுக்காக அரசுகள் சட்ட ஒழுங்குகளை மீறுவதுடன், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபடுகின்றன. இதன் மூலம் இனவாதம், மதப்பாகுபாடு, இனப்பாகுபாடு, சமூகப்பாகுபாடு என்பன தோற்றுவிக்கப்படுவதுடன் மோதல்களுக்கும் வழிவகுக்கின்றன.

அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், ஈராகில் நடைபெறும் போர், மனித உரிமை மீறல்கள் என்பன அனைத்துலக சமூகத்தில் பிரிவினையை தோற்றுவித்துள்ளது. இது மோதல்களை தவிர்த்து பொதுமக்களை பாதுகாப்பதை மேலும் சிக்கலாக்கி உள்ளது என்றார் அவர்.

-புதினம்

சிறீலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மீறப்படுகிறது - அவுஸ்திரேலியா குற்றச்சாட்டு

சிறீலங்காவில் படுகொலைகளும், கடத்தல்களும், கட்டாய ஆட்சேர்ப்பும் நாளாந்தம் அதிகரித்து வருவதாகவும், அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தை எவரும் மதித்து நடக்கவில்லை எனவும், அவுஸ்திரேலியா குற்றம் சாட்டியுள்ளது.

அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்களை தமது அரசு மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போரில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்தி, சமாதானப் பேச்சுக்கான முயற்சிகளை ஆரம்பிக்குமாறும், அவுஸ்திரேலிய அரசு அழைப்பு விடுத்துள்ளது.

http://www.pathivu.com/

இவ்வருடம் சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிக அதிகரிப்பு - அனைத்துலக மன்னிப்பு சபை

சிறீலங்காவில் மனித உரிமை மீறல்கள் மிக மோசமான கட்டத்தை அடைந்துள்ளதாக, அனைத்துலக மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை ஒரு “மறக்கப்பட்ட இனப் பிரச்சனையாக” மாறி வருவதாகவும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மனித உரிமை மீறல்கள் அதிகரித்து விட்டதாகவும் இந்த அறிக்கை கூறுகின்றது.

சிறீலங்காவில் ஆட்சி புரிந்துவரும் வலிமை மிக்க அரசும், ஆயுதக் குழுக்களும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு, முரண்பட்ட பயங்கர நிலையைத் தோற்றுவித்து வருவதாக, அனைத்துலக மன்னிப்பு சபையின் பொதுச் செயலாளர் ஐறின் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

அனைத்துலக மன்னிப்பு சபையின் ஆண்டறிக்கை வெளியீடு லண்டனில் நேற்று இடம்பெற்றபோது அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததுடன், படுகொலைகள், கடத்தல்கள், காணாமல்ப் போதல்கள், சிறுவர் ஆட்சேர்ப்பு போன்ற மனித உரிமை மீறல்கள் கடந்த ஆண்டைவிட பல மடங்கு அதிகிரித்து விட்டதைச் சுட்டிக்காட்டினார்.

போர்க் குற்றங்கள் அதிகரித்து, பொதுமக்கள் தாக்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஐறின் கான், வடக்கு கிழக்கில் இரண்டு இலட்சத்து 15 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்திருப்பதாகவும், 10 ஆயிரம் பேர் வரையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறினார்.

இவ்வாறு இடம்பெயர்ந்த மக்கள் வேலையில்லாப் பிரச்சனை, சுகாதாரச் சிக்கல்கள், கல்வி வாய்ப்பு என்பவற்றால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஐறின் கான் தெரிவித்திருக்கின்றார்.

அரசுகள் அனைத்துலக மனித உரிமைகள் சட்டத்தை மதிக்கத் தவறுவதாகவும், இனவாதத்தை ஊட்டி சமூகங்களைப் பிளவு படுத்துவதுடன், சமூகங்கள் மத்தியில் இன வேற்றுமையை ஆழமாக விதைப்பதாகவும், அனைத்துலக மன்னிப்பு சபை வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களை அண்மைக் காலமாக அனைத்துலக மன்னிப்புச் சபை கடுமையாகச் சாடி வருவதுடன், கடந்த உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியிலும் பாரிய பிரசார நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது.

இதனால் மிகவும் கோபம் அடைந்துள்ள சிறீலங்கா அரசு அனைத்துலக மன்னிப்புச் சபை மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன், இந்த அமைப்பின் பிரதிநிதிகள் இருவர் அண்மையில் லண்டனில் இருந்து சிறீலங்கா செல்லவும் வீசா அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

http://www.pathivu.com/

காணாமல்ப் போனோர் பற்றிய மக்கள் கண்காணிப்புக் குழுவின் முறைப்பாட்டை ஐ-நா ஏற்றுக்கொண்டது

ஐக்கிய நாடுகள் சபையில் காணாமல்;ப் போனவர்கள் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவிற்கு, கொழும்பு மக்கள் கண்காணிப்புக் குழுவினால் அனுப்பி வைக்கப்பட்ட காணாமல்ப் போனோர் தொடர்பான பட்டியல் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

“மக்கள் கண்காணிப்புக் குழுவுக்கு” நூற்றுக் கணக்கான முறைப்பாடுகள் கிடைத்துள்ள போதிலும், காணாமல்ப்போன 11 பேரின் விபரங்கள் முதற்கட்டமாக ஐ-நா அமைப்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தமக்கு கிடைக்கப்பெற்ற இந்த விபரங்களை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் நடத்தப்படும் என, ஐ-நாவின் ஜெனிவா அலுவலக மனித உரிமைகள் ஒருங்கிணைப்பாளர் கிளவ்டியா டி லா பொன்ரே “மக்கள் கண்காணிப்புக் குழுவுக்கு” அறிவித்துள்ளார்.

கொழும்பில் இதுவரை 200 பேர் வரையில் காணாமல்ப் போயிருப்பதுடன், 116 முறைப்பாடுகள் “மக்கள் கண்காணிப்புக் குழுவிடம்” மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அதன் பேச்சாளரும், மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான, நாடாளுமன்ற உறுப்பினம் மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பை தளமாகக் கொண்ட “மக்கள் கண்காணிப்புக் குழுவின்” தலைவராக ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிறீதுங்க ஜயசூரியவும், உறுப்பினர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் கிரியெல்ல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் திகழ்கின்றனர்.

http://www.pathivu.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனித உரிமை நிலமைகள் மோசமடைந்துள்ளது எனக் கூறுகிறது சர்வதேச அபய நிறுவனம்

இலங்கையில் மனித உரிமை நிலைமைகள் மிகவும் மோசமாக வீழ்ச்சியடைந்து வருவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

சட்டத்திற்கு புறம்பான் கொலைகள், சிறுவர்களை படையணிகளில் சேர்ப்பது, ஆட்கடத்தல்கள் உட்பட பல மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இலங்கை அரசாங்கத்திற்கும், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் சூழலில், பொதுமக்கள் இந்த இருதரப்பாலும் தாக்கப்படுகின்றனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

அம்னெஸ்டியின் கருத்துப் படம் ஒன்று 2006 ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை இருதரப்பினரும் கடைபிடிப்பதாகக் கூறினாலும், 2006 ஆம் ஆண்டின் மத்தியில் போர் நிறுத்த ஒப்பந்தம் செயற்பாட்டளவில் கைவிடப்பட்ட நிலை அடைந்துள்ளது எனவும், 2005 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமல்படுத்தப்பட்ட, அவசரகால நிலையை இன்னமும் தொடர்ந்து அங்கு நடைமுறையில் உள்ளது எனவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், அங்கு அதிகரித்து வரும் கொலைகள், ஆட்கடத்தல்களை தடுக்க போதுமான நடவடிக்கையோ அல்லது வழிமுறைகளோ இல்லை என்றும் அந்த அமைப்பின் சார்பில் பேசவல்ல அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அங்கு சர்வதேச மனித உரிமைகள் சமூகத்தின் பிரசன்னம் தேவைப்படுகிறது என்றும் அந்த அறிக்கை கருத்து வெளியிட்டுள்ளது.

- பிபிசி தமிழோசை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.