Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் கொரோனாவால் மற்றுமொருவர் உயிரிழப்பு!

Featured Replies

Tamilnadu-Corona-Situation.jpg

தமிழகம், விழுப்புரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இன்று ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அங்கு உயிரிழப்பு எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லி மாநாட்டில் இருந்து விழுப்புரம் திரும்பிய 9 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இவர்களில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் இன்று (சனிக்கிழமை) காலை இறந்தார். அவர் விழுப்புரம் வண்டிமேடு சிங்காரத்தோப்புப் பகுதியைச் சேர்ந்தவர் என்துடன் பாடசாலை ஒன்றின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

இதேவேளை, தமிழ்நாட்டில் மொத்தமாக 411 பேர் கொரோனா வைரஸால் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழகத்தில்-கொரோனாவால்-ம/

 

தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு கொரோனா தொற்று: மொத்தம் 411 ஆக உயர்வு!

Coronavirus-affected-another-102-persons-in-Tamilnadu.jpg

தமிழகத்தில் கொரோனா வைரஸால் இன்று 102 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு மொத்த எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் டுவிற்றர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகின்ற நிலையில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்ற போது அதில் தமிழகத்தில் இருந்துசென்ற 1500 பேர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கூட்டத்தில் கலந்துகொண்ட 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, டெல்லியில் இருந்து வந்தவர்களில் நேற்று 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளத நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 102 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு 411 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-மேலும்-102-பேரு/

 

தமிழகத்தில் 2ஆம் கட்டத்தில்தான் கொரோனா வைரஸ் பரவல் உள்ளது பீலா ராஜேஷ்

மாநில-சுகாதாரத்துறை-செயலாளர்-பீலா-ராஜேஷ்.jpg

தமிழ்நாட்டில், நேற்று(வெள்ளிக்கிழமை) 102 பேருக்கு கொரோனா உறுதிச்செய்யப்பட்டருப்பதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 411ஆக அதிகரித்திருப்பதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தீவிர நுரையீரல் தொற்று உள்ளவர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாக கூறியுள்ள சுகாதாரத்துறை, இதுவரையில் கொரோனா பாதிப்பு தமிழ்நாட்டில் சமுதாய தொற்றாக மாறவில்லை என உறுதிபடக் கூறியுள்ளது.

http://athavannews.com/தமிழகத்தில்-2ஆம்-கட்டத்த/

  • தொடங்கியவர்

தமிழகத்திற்கு 510 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு!

Tamilnadu.jpg

கொரோனா தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு 510 கோடி ரூபாய் உட்பட 28 மாநிலங்களுக்கு மத்திய அரசு 11 ஆயிரத்து 92 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று வேகமாகப் பரவிவரும் நிலையில் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரமாக பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், மாநில அரசுகளுக்கு உதவ பேரிடர் அபாய மேலாண்மை நிதியின் கீழ் மத்திய அரசு இந்த நிதியை வழங்கியுள்ளது.

இந்த நிதியானது கொரோனா நோய்த்தடுப்பு மையங்களை அமைத்தல், கூடுதலாக ஆய்வகங்களை அமைத்தல், மருத்துவ உபகரணங்களை வாங்குதல், அரசு மருத்துவமனைகளின் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை, கொரோனா நோய்த்தடுப்பு, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஏப்ரல் இரண்டாம் திகதிவரை மொத்தம் 62 கோடியே 30 இலட்சம் ரூபாய் நன்கொடையாகக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நன்கொடை அளித்த நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழநிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/தமிழகத்திற்கு-510-கோடியை-ஒத/

  • கருத்துக்கள உறவுகள்

நாளுக்கு நாள் பலி அதிகரிப்பு; தமிழகத்தில் பதுங்கி பாய்கிறதா? கொரோனா: வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு

 

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் வைரஸ் தாக்குதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மதுரையை சேர்ந்த கான்ட்ராக்டர் ஒருவர்  கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் நபராக பலியானார். இதையடுத்து நேற்று மேலும் 2 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 61 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 61 வயது முதியவர் டெல்லி மத மாநாட்டிற்கு சென்ற திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் விவரம்:

1.  மதுரையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் உயிரிழந்தார்..! (25/03/2020)

2. விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது ஆண் உயிரிழந்தார் (04-/04/2020)

3. தேனியில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் உயிரிழந்தார்(04-/04/2020)

4. சென்னையில் சிகிச்சை பெற்று வந்த கீழக்கரையை சேர்ந்த 71 வயது முதியவர் உயிரிழந்தார் (02-/04/2020)

5. சென்னையில் சிகிச்சை பெற்று 61 வயது ஆண் உயிரிழந்தார் (05-/04/2020)

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=576831

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.