Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

அன்னை மடிதொட்டு

தந்தை கரம்தொட்டு

மாமன்உறவைத்தொட்டு

மாமியின்பாசம் தொட்டதால்

அன்பே உனைத்தொட்டு

இன்பம் எனைத்தொட்டு

மழலைகள் வாழ்வைத்தொட்டு

சொர்கம் எனைத்தொட்ட

வேளை

சோதனை நமைத்தொட்டு

இறப்புக்கள் வாழ்வைத்தொட்டு

பிரிவுகள் எனைத்தொட்டதால்

இதயம்வலியைத்தொட்டு

கண்கள் நீரைத் தொட்டு

கவிதைசோகம்தொட்டு

தவிப்புகள்எனைத் தொட்டு

துடிக்கின்றேன் உன்னால்

இதுதான் விதியா?

Edited by கஜந்தி

விதியா என்று தெரியல கஜந்தி... ஆனால் எம் கை மீறிய சங்கதிகள் எல்லாம் விதியால தான் என்று ஆறுதல் பட என்றாலும் இப்படி விதி என்று ஒன்று உண்டு என்பதால் பல சமயங்களில் 'Take it easy' என்று மனசு ஆறுதல் பட்டுக்கொள்ளுது....

விதிப்படிதான் உலகில் எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

பூமி சுழல்வதும் விதிப்படியே.

நீர் ஆவியாகி மழை பெய்து கடலிலே சேர்வது ஒரு விதியாகும்.

அப்பிள் பழம் கீழ்நோக்கி விழுவதும் ஒரு விதி.

கணணியில் மென்பொருட்கள் இயம்ஹ்குவதும் விதிகளுக்கு உட்பட்டே.

அதேபோல்தான் மனித வாழ்வும். பிறப்பு வாழ்வு இறப்பு எல்லாமே சில விதிகளுக்குட்பட்டதுதான்.

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

நல்ல கவி அக்கா

விதியை நொந்து பயனில்லை அதில் இருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும்.........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லீசானின் விளக்கம் நல்லா இருக்கு விதியைப்பற்றி....கவிதை சோகமா இருக்கே...என்ன நடந்தது?

  • தொடங்கியவர்

விதிப்படிதான் உலகில் எல்லாமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

பூமி சுழல்வதும் விதிப்படியே.

நீர் ஆவியாகி மழை பெய்து கடலிலே சேர்வது ஒரு விதியாகும்.

அப்பிள் பழம் கீழ்நோக்கி விழுவதும் ஒரு விதி.

கணணியில் மென்பொருட்கள் இயம்ஹ்குவதும் விதிகளுக்கு உட்பட்டே.

அதேபோல்தான் மனித வாழ்வும். பிறப்பு வாழ்வு இறப்பு எல்லாமே சில விதிகளுக்குட்பட்டதுதான்.

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

லிசான் விதி இருக்கா இல்லையா எனக்கு தெரியவில்லை அனால் இந்த விதி ஒரு

சில பெண்களின் வாழ்கையில் மோசமாக விளையாடியுள்ளது இதற்கு பெற்றேர்கள்

சிலர்காரணம் அவர்கள் செய்த தப்பை விதியென சொல்லி தப்புகின்றனர் இதனால்

சிலர் சிந்திக்காது செய்யும் விடையம் கூட விதியாக மாறுகின்றது இப்போ எது விதி ிதி

லிசான் விதி இருக்கா இல்லையா எனக்கு தெரியவில்லை அனால் இந்த விதி ஒரு

சில பெண்களின் வாழ்கையில் மோசமாக விளையாடியுள்ளது இதற்கு பெற்றேர்கள்

சிலர்காரணம் அவர்கள் செய்த தப்பை விதியென சொல்லி தப்புகின்றனர் இதனால்

சிலர் சிந்திக்காது செய்யும் விடையம் கூட விதியாக மாறுகின்றது இப்போ எது விதி ிதி

நான் மேலே சொன்ன விதிக்கும், நீங்கள் இப்போது சொன்ன விதிக்கும் (தலைவிதி) வெறுபாடு உண்டு.

நடந்து முடிந்தவை சாதகமாக இருந்தால் அதிஷ்டம் என்கிறோம்.

பாதகமாக முடிந்தவை எல்லாம் தலைவிதி என்கிறோம்.

நடந்து முடிந்தவை மட்டுமே தலைவிதி. அது ஏற்கனவே தீர்மானிக்கப்படுவதுமில்லை.

எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்குமென்றால், நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லையே.

எதுவுமே செய்யாதிருந்து அதனால் பாதிக்கப்பட்டால் அதயும் தலைவிதி என்போம்.

முயற்சி, நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம். முயற்சி செய்தும் தோல்வியடைந்தால், அதற்கு ஏதாவது காரணமிருக்கும். அதை அறிந்து மீண்டும் முயற்சிப்பதைவிட்டு தலைவிதி என்று ஆறுதல் தேடுவது கோழைத்தனம்.

  • தொடங்கியவர்

விதியா என்று தெரியல கஜந்தி... ஆனால் எம் கை மீறிய சங்கதிகள் எல்லாம் விதியால தான் என்று ஆறுதல் பட என்றாலும் இப்படி விதி என்று ஒன்று உண்டு என்பதால் பல சமயங்களில் 'Take it easy' என்று மனசு ஆறுதல் பட்டுக்கொள்ளுது....

விதியென நானும் நினைக்கவில்லை இதற்கு பெயரும் தெரியவில்லை

அதனால் தான் எல்லோரும் சொல்லும் விதியை எழுதினேன்

Take it easy'இப்படி சொல்வது எல்லோர்ராலும் முடியாது கவி

  • தொடங்கியவர்

நல்ல கவி அக்கா

விதியை நொந்து பயனில்லை அதில் இருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும்.........

ஒரு சில பெண்களின் சொல்லாத கதையை எனக்குள் இருந்த வலிகளுடன்

சேர்த்து பதிவு செய்தேன் வெளிநாட்டு வாழ்கையில் அவர்கள் தொலைத்த

சந்தோஷகள் இன்று குழந்தைகளுக்காக வாழும் இயந்திர வாழ்கை விதி

என்ற பெயரால் சிதைத்து நிக்கின்றது

  • கருத்துக்கள உறவுகள்

விதியென்று ஒன்றுமில்லை, இயலாமையினால் எங்களால் பாவிக்கப்படும் பதம் தான் விதி.

சதி என்று ஒன்றுண்டு அதையும் மதியினால் வென்றிடலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்க கவிதையும் என் மனதை தொட்டுவிட்டுப் போனது.

  • தொடங்கியவர்

நடந்து முடிந்தவை சாதகமாக இருந்தால் அதிஷ்டம் என்கிறோம்.

பாதகமாக முடிந்தவை எல்லாம் தலைவிதி என்கிறோம்.

நடந்து முடிந்தவை மட்டுமே தலைவிதி. அது ஏற்கனவே தீர்மானிக்கப்படுவதுமில்லை.

எல்லாம் தலைவிதிப்படிதான் நடக்குமென்றால், நாம் எதுவுமே செய்யவேண்டியதில்லையே.

எதுவுமே செய்யாதிருந்து அதனால் பாதிக்கப்பட்டால் அதயும் தலைவிதி என்போம்.

முயற்சி, நம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம். முயற்சி செய்தும் தோல்வியடைந்தால், அதற்கு ஏதாவது காரணமிருக்கும். அதை அறிந்து மீண்டும் முயற்சிப்பதைவிட்டு தலைவிதி என்று ஆறுதல் தேடுவது கோழைத்தனம்.

தலைவதி என்று ஆறுதல் தேடுவது கோழைத்தனம் இதனை நானும்

ஏற்றுக்கொள்கின்றேன். தலைவிதிஎன்பது எம்மவர்கள் செய்யும் சில தப்புக்களின்

அடையாலம் எப்போதும் .நீங்கள் தீர்மானிக்கப்படுவதுமில்லைஎ

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரி கஜந்தி அவர்களே!

நீங்கள் அனுபவரீதியாக ஏதோ பாதிக்கப்பட்டமாதிரி எனக்குத் தோன்றுகிறது, உங்களுக்கு ஆறுதல் கூறவேண்டிய கடப்பாடு எங்களுக்கும் உள்ளதல்லவா?

மனதைத் தளர விடாதீர்கள், விதியென்று மனதைப்போட்டு குழப்பாதீர்கள்.

உங்கள் கவிதை என் மனதையும் கொஞ்சம் பாதித்துவிட்டது.

பாராட்டுக்கள்.

கஜந்தி..

நல்ல ஆக்கம் :lol:

விதி யென்பது உண்டு..அதுக்காக எல்லாம் விதிப்படி என்பது மடமை.

பெற்ரோரை குற்றம் சொல்வது தவறு :o

உங்களுக்குப் பிழை எனப்பட்டால் அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்திருக்

லிசான் விதி இருக்கா இல்லையா எனக்கு தெரியவில்லை அனால் இந்த விதி ஒரு

சில பெண்களின் வாழ்கையில் மோசமாக விளையாடியுள்ளது இதற்கு பெற்றேர்கள்

சிலர்காரணம் அவர்கள் செய்த தப்பை விதியென சொல்லி தப்புகின்றனர் இதனால்

சிலர் சிந்திக்காது செய்யும் விடையம் கூட விதியாக மாறுகின்றது இப்போ எது விதி ிதி

கஜந்தி

விதி என்பது நாமக்கு நடக்கும் மனக்கஸ்டமான நிகழ்வுகளை தேர்த்திக் கொள்ள நமாக தேடி எடுத்ததே விதி என்ற சொல். விதியை மதியால் வெல்லலாம்.

பிரியமுடன்

பிரியன்.

:D

விதி என்பது நாமக்கு நடக்கும் மனக்கஸ்டமான நிகழ்வுகளை தேர்த்திக் கொள்ள நமாக தேடி எடுத்ததே விதி என்ற சொல். விதியை மதியால் வெல்லலாம்.

பிரியன்.

நண்பா இதுவரைக்கும் விதியை எத்தனை முறை மதியால் வென்றிருக்கின்றீர்கள்

நாமாக தேடி எடுத்த வெறும் சொல்லில்லை விதி

நாம் எங்கு சென்றாலும் பின்னால் துரத்தும் ஒன்றுதான் விதி

எம்மை மீறி நடக்கும் எதையும் தடுக்க எம்மால் ஏன் இறைவனாலும் முடியாது

அது நடந்தேதான் தீரும் அது தான் விதி

அன்னை மடிதொட்டு

தந்தை கரம்தொட்டு

கவிதை சோகம் புதைந்துள்ளது

சோகங்கள் நிரந்தரமானவை அல்ல வாழ்க்கை கொஞ்சக்காலம் அதில் உங்களுக்கு சந்தோசமானதை மட்டும் தேடிச்செல்லுங்கள் துன்பத்தைவிட்டு தேவையற்ற பிரச்சனைகளை விட்டு தூரச் செல்லுங்கள் உங்களுக்காக உங்களை நேசிக்கிறவர்களுக்காக வாழ்ந்துபாருங்கள் வாழ்க்கையில் சந்தோசம் நிட்சயம் கிடைக்கும்

நண்பா இதுவரைக்கும் விதியை எத்தனை முறை மதியால் வென்றிருக்கின்றீர்கள்

நாமாக தேடி எடுத்த வெறும் சொல்லில்லை விதி

நாம் எங்கு சென்றாலும் பின்னால் துரத்தும் ஒன்றுதான் விதி

எம்மை மீறி நடக்கும் எதையும் தடுக்க எம்மால் ஏன் இறைவனாலும் முடியாது

அது நடந்தேதான் தீரும் அது தான் விதி

மூடநம்பிக்கை.

நான் முன்னே கூறிய பதிலைப் படித்துப் பாருங்கள்.

எல்லாமே விதிப்படி என்றால் நம்பிக்கையுடன் மேற்கொள்ளப்படும் நமது விடுதலைப் போராட்டமும் விதிப்படிதான் நடக்குமா ?

அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றா ?

மூடநம்பிக்கை.

நமது விடுதலைப் போராட்டமும் விதிப்படிதான் நடக்குமா ?

அது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட ஒன்றா ?

விதி முடநம்பிக்கை இல்லை இறப்பு பிறப்பு எந்த நம்பிக்கையில் சேர்த்துள்ளீர்கள் விதியின் படி எது எப்ப எப்படி நடக்கும் என்று செல்லமுடியாது நடக்கின்ற நேரம் நடக்கும் விதியின்படிதான் நடக்கும் என்று வீட்டுக்குள் இருக்கசொல்லவில்லை எமது கடமைகளை நாம் செய்ய தவறமுடியாது விதி என்பது எமது கையை மீறிய செயல் எமது விடுதலை எமது தலைவனின் கையை மீறி செல்லவில்லை

லிசான் உண்மையில் விதி இல்லை என்று சொல்லுகின்றீர்களா ஒருவர் மரணிப்பதை என்னவென்று வொல்லுகின்றீர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்வை மைந்தன் சொன்ன மாதிரி விதியின் மறு பெயர் இயலாமை.

ஆனால் சதியென்பது பொல்லாதது, அதை அறிந்து கொண்டால் மதியால் வெல்ல நிறைய சந்தர்ப்பம் உண்டு.

எல்லாம் நம்பிக்கை வைத்தால் பெரிய விடயமல்ல.

வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயிப்பது நம்பிக்கை, வேகம், விவேகம்.

  • தொடங்கியவர்

சகோதரி கஜந்தி அவர்களே!

நீங்கள் அனுபவரீதியாக ஏதோ பாதிக்கப்பட்டமாதிரி எனக்குத் தோன்றுகிறது, உங்களுக்கு ஆறுதல் கூறவேண்டிய கடப்பாடு எங்களுக்கும் உள்ளதல்லவா?

மனதைத் தளர விடாதீர்கள், விதியென்று மனதைப்போட்டு குழப்பாதீர்கள்.

உங்கள் கவிதை என் மனதையும் கொஞ்சம் பாதித்துவிட்டது.

பாராட்டுக்கள்.

அனுபரீதியாக பதிக்க பட்டது உண்மைதான் ஆனால் இதில் பொதித்த

கருத்து எனது அல்ல விதியை நான் நம்புவதில்லை அதற்காக குழம்பிக்

கொள்வதுமில்லை இந்த படைப்பு உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால்

இளகியமனதுதான் காரணம் அதே மனசுதான் எனக்கும் காரணம் இதை

எழுதுவதற்கு

  • தொடங்கியவர்

கஜந்தி..

நல்ல ஆக்கம் :mellow:

விதி யென்பது உண்டு..அதுக்காக எல்லாம் விதிப்படி என்பது மடமை.

பெற்ரோரை குற்றம் சொல்வது தவறு :huh:

உங்களுக்குப் பிழை எனப்பட்டால் அவர்களுக்கு சுட்டிக்காட்டியிருந்திருக்

  • தொடங்கியவர்

கஜந்தி

விதி என்பது நாமக்கு நடக்கும் மனக்கஸ்டமான நிகழ்வுகளை தேர்த்திக் கொள்ள நமாக தேடி எடுத்ததே விதி என்ற சொல். விதியை மதியால் வெல்லலாம்.

பிரியமுடன்

பிரியன்.

:huh:

உங்கள் கருத்திற்கு நன்றிகள் விதியை மதியால் வெற்றிபெற்றால் மகிழ்ச்சிகள்

  • தொடங்கியவர்

கவிதை சோகம் புதைந்துள்ளது

சோகங்கள் நிரந்தரமானவை அல்ல வாழ்க்கை கொஞ்சக்காலம் அதில் உங்களுக்கு சந்தோசமானதை மட்டும் தேடிச்செல்லுங்கள் துன்பத்தைவிட்டு தேவையற்ற பிரச்சனைகளை விட்டு தூரச் செல்லுங்கள் உங்களுக்காக உங்களை நேசிக்கிறவர்களுக்காக வாழ்ந்துபாருங்கள் வாழ்க்கையில் சந்தோசம் நிட்சயம் கிடைக்கும்

எனக்கு அருமையான உறவுகள் உண்டு என் சோகங்களை

அவர்கள் ஏந்திக்கொள்வதால் நான் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்

உங்கள் கருத்திற்கு என் இதயபூர்வமான நன்றிகள்

வல்வை மைந்தன் சொன்ன மாதிரி விதியின் மறு பெயர் இயலாமை.

ஆனால் சதியென்பது பொல்லாதது, அதை அறிந்து கொண்டால் மதியால் வெல்ல நிறைய சந்தர்ப்பம் உண்டு.

எல்லாம் நம்பிக்கை வைத்தால் பெரிய விடயமல்ல.

வாழ்க்கையில் வெற்றியை நிர்ணயிப்பது நம்பிக்கை, வேகம், விவேகம்.

என் கருத்தும் இது தான் நன்றிகள் ஈழநிலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.