Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொடைக்குத் தடை: அரசே செய்யும் அரசியலா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொடைக்குத் தடை: அரசே செய்யும் அரசியலா?

spacer.png

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி, பிரமுகர்கள் ஆகியோர் ஊரடங்கு உத்தரவை மீறும் வகையில் தனியாக உதவி பொருள் வழங்க அனுமதி இல்லை எனவும், இதை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் எனப் பலரும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சியான திமுக சார்பில் தூய்மை தொழிலாளர்கள், வெளிமாநிலத்தவர்கள், ஏழை எளியோர், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. திமுக போட்டியிட்டுத் தோற்ற இடங்களில் கூட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. திமுக, பாஜக, அமமுக என பல்வேறு கட்சிகளும் வழங்கி வருகின்றன.

 

இந்நிலையில் அண்மையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் சார்பில் ஏப்ரல் 11ஆம் தேதி அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. “தும்மல், இருமல் போன்ற அறிகுறிகள் இல்லாமலேயே வைரஸ் தொற்று இருக்க வாய்ப்புள்ளதால் சமூக தொண்டு நிறுவனங்கள் நேரடியாகப் பொதுமக்களை அணுகி உணவுப் பொருட்களை வழங்க வேண்டாம். பொதுமக்களை நேரடியாக அணுகி நிவாரணம் வழங்குவது 144 தடை உத்தரவு விதியினை மீறும் செயலாகும். விதி மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆட்சியர் வழங்கிய செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுபோன்று பல மாவட்ட ஆட்சியர்களும் வெளியிட்டனர்.

 

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 12) தமிழக அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதில், “கொரோனா தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சில மாவட்டங்களில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள், மக்களுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு , சமைத்த உணவையும், பொருட்களையும் விநியோகம் செய்வதாக ஊடகங்கள் மூலமாகத் தெரியவருகிறது.

கொரோனா நோய்த் தொற்று நடவடிக்கைகளுக்கு உதவி செய்ய விரும்பும் நபர்களும், பல்வேறு அமைப்புகளும் வழங்க விரும்பும் நிதியை, முதல்வர் நிவாரண நிதிக்கும், பொருட்களாக வழங்க விரும்பினால், அதைச் சென்னை மாநகரத்தில் மாநகர ஆணையரிடமும், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும் வழங்க ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

 

பெறப்படும் இத்தகைய பொருட்களை, சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கண்காணிப்பில் முதியோர்களுக்கும், ஆதரவற்றோர்களுக்கும், சமூக சமையல் கூடங்களில் சமைத்து உணவு வழங்கவும், தேவைப்படும் ஏழைக் குடும்பங்களுக்குப் பொருட்களாக வழங்கவும், உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில நபர்களும் சில அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்குப் புறம்பாக, பல்வேறு இடங்களில் உணவுப் பொருட்களையும் அல்லது அத்தியாவசிய சமையல் பொருட்களையும் நேரடியாக வழங்குவது, 144 தடை உத்தரவை மீறும் செயலாகும்.

இதுபோன்ற கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளால், நோய்த் தொற்று பரவ இச்செயல்கள் வழிவகுக்கும். எனவே, இத்தகைய தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பிற அமைப்புகளைச் சார்ந்த அனைவரும், ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் பொருட்களை நேரடியாக மக்களுக்கு வழங்கி, நோய்த் தொற்றுக்கு வழிவகுப்பதைத் தவிர்க்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அவ்வாறு உதவி செய்ய விரும்பினால், பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களிடமோ மாநகராட்சி ஆணையரிடமோ, நகராட்சி ஆணையரிடமோ, பேரூராட்சியாக இருந்தால் செயல் அலுவலரிடமோ அல்லது ஊராட்சி ஒன்றியங்களில் வட்டார வளர்ச்சி அலுவலரிடமோ வழங்கலாம். அவர்கள் அதை ஏழை எளிய மக்களுக்கு சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள்.

 

இந்த அறிவுரைகளை மீறி யாரேனும் செயல்பட்டால், அரசின் ஊரடங்கு உத்தரவை மீறியதாகக் கருதி, அவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கையை எடுக்க மாவட்ட ஆட்சித் தலைவர்களும், காவல் துறை அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த உத்தரவு, ஆதரவற்றோர், ஏழை எளிய மக்கள், மனநலம் பாதித்தவர்கள், வீடு இல்லாதோர் ஆகியோருக்கு உதவி செய்து வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் திமுக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

spacer.png

 

 

இதுகுறித்து, திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், 2016ல் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டவரும், நலம் அறக்கட்டளையின் நிறுவனருமான கிள்ளை ரவீந்திரன் நம்மிடம் கூறுகையில், சீர்காழி நகராட்சி பகுதிகளில் இருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு சானிட்டைசர், மாஸ்க் ஆகியவை அடங்கிய கிட் வழங்கினோம். ஆனால், அதிகாரிகள் இவற்றை வழங்க அனுமதி மறுத்தனர். இவற்றை வழங்க வேண்டும் என்றால் ஆணையரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றனர். தமிழகம் முழுவதும் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஏழை எளிய மக்களுக்கு உதவிகளைச் செய்து வருகிறோம். ஆனால் இதற்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை. அரசும் போதுமான உதவிகளைச் செய்வதில்லை. அரசு வழங்கும் 1000 ரூபாயை வைத்து எத்தனை நாளுக்குச் சமாளிக்க முடியும். தமிழகத்தில் 90 சதவிகித பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் 60 சதவிகிதம் பேருக்குக் கூட இவை சென்று சேரவில்லை. எங்கள் பகுதியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் இருக்கிறது. இதில் 90 பேருக்குத்தான் ரேஷன் கார்டு இருக்கிறது. 400 பேரிடம் ரேஷன் கார்டுகள் இல்லை. அவர்களுக்கு எப்படி அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். அவர்கள் எங்குச் செல்வார்கள். திமுக உதவும் இடங்களில் சில அதிகாரிகள், ஒத்துழைப்பு அளிக்காமல் இதுபோன்று கூறுகிறார்கள்

அரசாங்கத்தால் அனைவருக்கும் உதவ முடியாத நிலை இருப்பதால் தான் எங்களைப் போன்றவர்கள் தாமாக முன்வந்து உதவிகளைச் செய்து வருகிறோம். இதை அரசு ஊக்குவிக்க வேண்டுமே தவிர, அரசியல் காரணம் காட்டி தடுக்கக் கூடாது” என்று தெரிவித்தார்.

அதேசமயத்தில், அதிமுகவினர் பலரும் களத்தில் இறங்கி உதவிகளைச் செய்துவருவதாக அதிமுக வட்டாரத்தில் கூறுகின்றனர். எது எவ்வாறாயினும் அரசு விதிக்கும் தடை மற்றும் இதுபோன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுவது ஏழை எளிய மக்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/public/2020/04/12/69/volunteers-NGOS-political-parties-can-be-banned-from-delivering-goods

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2020 at 18:49, கிருபன் said:

எங்கள் பகுதியில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 500 குடும்பங்கள் இருக்கிறது. இதில் 90 பேருக்குத்தான் ரேஷன் கார்டு இருக்கிறது. 400 பேரிடம் ரேஷன் கார்டுகள் இல்லை. அவர்களுக்கு எப்படி அரசு அறிவித்த நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். அவர்கள் எங்குச் செல்வார்கள். திமுக உதவும் இடங்களில் சில அதிகாரிகள், ஒத்துழைப்பு அளிக்காமல் இதுபோன்று கூறுகிறார்கள்

கொரோனா நோயை சாட்டாக வைத்து கட்சி பரப்புரை செய்வதற்கு இது நேரமில்லை.
இந்த 500 பேரும் எங்கிருந்தோ திடீர் என்று வரவில்லை. குறிப்பிட்ட இருளர் பிரச்சினை நோய் வருவதற்குமுன்னரும் இதே நிலையில்தான் இருந்தது அப்போது மாறி மாறி திமுகவும் அதிமுகவும் ஆட்சியில் இருந்தபோதும் இவர்களுக்கு எதுவுமே செய்யாதது தெரிந்த விடையம் தான். தனது பகுதியில் இருந்த இருளர் சமூகத்தின் பிரச்சினையை கிள்ளை ரவீந்திரனுக்கு இப்போதுதான் தெரிகிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.