Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தை மழுங்கடிக்கும் வகையிலே அரசாங்கம் செயற்படுகிறது -சுமந்திரன் குற்றசாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடாளுமன்றத்தை மழுங்கடிக்கும் வகையிலே அரசாங்கம் செயற்படுகிறது -சுமந்திரன் குற்றசாட்டு

ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றம் இன்றிய ஆட்சியை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றமே ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாகும்.எனினும் நாடாளுமன்றம் இன்றி தனது சர்வாதிகார ஆட்சியையே ஜனாதிபதி முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நாடாளுமன்றம் செயற்படாமலிருக்கவும் முடியாது. ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றமே முக்கியமானதாகும். எனவேதான் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். அதன்பின்னர் பொது சுகாதார நிலைப்பாட்டினைப் பெற்று மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான நிலைமை ஏற்படும்போதும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கூட்ட முடியும். அத்தோடு இந்தச் சந்தர்ப்பத்தில் முக்கியமான விடயம் தேர்தலை நடத்த முடியாது என்பதாகும்.அரசியலமைப்பின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் புதிய நாடாளுமன்றம் கூட வேண்டும். அதற்கமையவே மார்ச் மாதம் 2ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதிக்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இந்தப் பொறுப்பினை அரசாங்கம் தேர்தல்கள் ஆணைக்குழு மீது சுமத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த குறிப்பிட்ட காலப்பகுதிக்கு இடையில் நாட்டில் ஏதேனும் நெருக்கடி நிலைமைகள் ஏற்பட்டால் நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று ஜனாதிபதியால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும். காரணம் இவ்வாறான சந்தர்ப்பத்தில் தேர்தலை நடத்துவது ஆபத்தானது என்பது அனைவரும் அறிந்ததொன்றாகும்.ஆனால், மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நாடாளுமன்றம் செயற்படாமலிருக்கவும் முடியாது. ஜனநாயக நாட்டில் நாடாளுமன்றமே முக்கியமானதாகும். எனவேதான் வர்த்தமானி அறிவித்தலை மீளப்பெற்று நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு ஏற்கனவே நாம் வலியுறுத்தியிருந்தோம். அதன்பின்னர் பொது சுகாதார நிலைப்பாட்டினைப் பெற்று மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும்.

எனினும் நாடாளுமன்றம் இன்றி தனது சர்வாதிகார ஆட்சியையே ஜனாதிபதி முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றம் இன்றிய ஆட்சியை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றமே ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாகும்.அவ்வாறாக கட்டமைப்பு இல்லையென்றால் இந்த தேசிய நெருக்கடியான நிலைமையில் நாடாளுமன்றத்தைக் கூட்டாமல் இருப்பதற்கான காரணம் என்ன என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.இவ்விடயம் தொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த அவர், “நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டால் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என தெரிவித்துள்ளார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/நாடாளுமன்றத்தை-மழுங்கடி/

2 hours ago, கிருபன் said:

எனினும் நாடாளுமன்றம் இன்றி தனது சர்வாதிகார ஆட்சியையே ஜனாதிபதி முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றம் இன்றிய ஆட்சியை அனுமதிக்க முடியாது.

இராணுவ ஆட்சி வந்தாலும் இதே வெற்று அணுகுமுறை தான்....

அறிக்கை விடுவதும்... 
இடைக்கிடை பத்திரிக்கையாளர்களை சந்திப்பதும்.......

9 hours ago, கிருபன் said:

ஜனநாயக நாடொன்றில் நாடாளுமன்றம் இன்றிய ஆட்சியை அனுமதிக்க முடியாது. நாடாளுமன்றமே ஜனநாயகத்திற்கு அத்தியாவசியமானதாகும்.எனினும் நாடாளுமன்றம் இன்றி தனது சர்வாதிகார ஆட்சியையே ஜனாதிபதி முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்.மூன்று மாதங்களுக்கும் அதிகமாக நாடாளுமன்றம் செயற்படாமலிருக்கவும் முடியாது.

சுமந்திரன் யாருக்காக இப்போது குரல் கொடுக்கிறார்?

வட-கிழக்கு மாகாணங்களுக்கு அரச நிவாரணங்கள் உரிய முறையில் உரிய அளவில் சென்றடையவில்லை. அதற்கு குரல் கொடுக்காத சுமந்திரன் இப்போது யாருக்காக குரல் கொடுக்கிறார்?

கூட்டமைப்புக்குள் சனநாயகம் துளியும் கிடையாது. சம்மந்தனுக்கும் சுமந்திரனுக்கும் சனநாயகம் என்றால் அடிப்படையே தெரியாது. இந்நிலையில் சுமந்திரன் யாருடைய சனநாயகத்துக்கு இப்போது குரல் கொடுக்கிறார்?

‘வெறுமைக்கு வியாக்கியானமா?’

மே மாதம் 2ஆம் திகதியன்று என்ன நடக்குமென்பது தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அரசமைப்பின் பிரகாரம் கூட்டுமாறு எதிரணியினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம், அரசமைப்பின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளதென,  அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரையிலும், பொதுத் தேர்தலை நடத்த முடியாது என்றும் அவ்வாறு நடத்துவது நாட்டுக்கும் மக்களுக்கும் ஆபத்தாகிவிடுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பொதுத் தேர்தலையும் பகுதி பகுதியாக நடத்துவதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக, தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மே மாதம் 2ஆம் திகதியுடன் மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. ஆகையால், மே 2ஆம் திகதியன்று என்ன நடக்குமென பலரும் வினவுகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் வியாக்கியானம் கேட்பதற்கு உயர் நீதிமன்றத்தை நாடவேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லையென்பதனாலும் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என்பதனாலும், அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிடாதென, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரியவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, 3 மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

நாடாளுமன்றம் மார்ச் மாதம் 2ஆம் திகதி கலைக்கப்பட்டது. மே மாதம் 2ஆம் திகதியுடன் மூன்று மாதங்கள் நிறைவடைகின்றன. இது தொடர்பிலான கருத்தாடல்கள் இடம்பெறுகின்ற நிலையிலேயே, அமைச்சர் விமல் வீரசன்ச, விளக்கமொன்றை கொடுத்துள்ளார்.

'மே மாதம் 2ஆம் திகதி என்ன நடக்குமென்பதே பலருடைய கேள்வியாகும். அக்கேள்விக்கு அரசாங்கத்திடம் பதில் இல்லை. தேர்தலை பிற்போடவேண்டிய தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை. கொரோனா சவாலை எதிர்கொண்டு முன்னேறிகொண்டிருக்கும் அரசாங்கத்துக்கு, நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றும் பொருட்டல்ல. ஆகையால்தான், கொரோனா வைரஸ் வியாபிக்காமல் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது.

“இதேவேளை, அடுத்தக்கட்ட நடவடிக்கையாக, பல்கலைக்கழகங்களைப் பகுதி பகுதியாகத் திறப்பதற்கான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளையும் திறப்பதற்கான திகதி குறிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றொழிப்பின் வேலைத்திட்டம் வெற்றிப் பாதையில் செல்வதனால்தான், இவ்வாறான முன்னகர்வுகளை முன்னெடுக்க முடிகிறது.

“நாடாளுமன்றம் கலைக்கபட்டு, மூன்று மாதங்கள் கடந்துவிட்டால், அடுத்த கட்டமாக என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பில் அரசமைப்பில் குறிப்பிடப்படவில்லை. அதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்துக்குச் செல்லவேண்டிய தேவையில்லை. அதன் பின்னர், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரங்களின் பிரகாரமும் பிரதமர், காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை பிரகாரமும், எவ்வாறான தீர்மானங்களை எட்டவேண்டுமென்பது தொடர்பில் காபந்து அரசாங்கமே தீர்மானிக்கும். சகலவற்றையும் நல்லதாகவே சிந்திக்கவேண்டும்” என்று அமைச்சர் விமல் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மே மாதம் 2ஆம் திகதிக்குப் பின்னர் வெறுமையாகிவிடும் என்றும் அதற்கு வியாக்கியானம் கேட்கவேண்டி எந்தவொரு தேவையும் அரசாங்கத்துக்கு இல்லை என்றும் தெரிவித்துள்ள அவர், அரசமைப்பின் பிரகாரம், ஜனாதிபதிக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அமைவாக, அடுத்த கட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்றும், சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வறமகக-வயககயனம/175-248645

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.