Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன?

கொரோனாவை முற்றிலும் ஒழிக்க 2022 வரை சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,98,535- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,612 - ஆகவும் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்தபாடில்லை.

குறிப்பாக இந்தியாவின் சில பகுதிகளில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. சந்தைகளில் கூட்டம் கூடுவது, வெளியில் சுற்றுவது, போராட்டம் நடத்துவது என தினம் தினம் சமூக விலகலே இல்லாத பல சம்பவங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதற்கு வைரஸ் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாதது, மக்களின் அலட்சியம் மற்றும் உணவுக்காக அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் போன்றவையே காரணமாக கூறப்படுகின்றன.

 

இந்நிலையில் 2022-ம் ஆண்டு வரை மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் எனச் சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஹார்வர்டு டி.எச் சான் பொதுச் சுகாதாரப் பள்ளி நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கான முறையான சிகிச்சை மற்றும் மருந்து ஆகியவை இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் சமூக இடைவெளி ஒன்றே வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

2003-ம் ஆண்டு சிறிய அளவில் தொடங்கிய சார்ஸ் வைரஸ் ஒரு இடைவெளிக்குப் பிறகு மிகவும் பெரிதாக வெடித்தது. அதேபோல் கொரோனா வைரஸும் வெடிப்பதற்கு முன் அதை அழிக்கத் தேவையான மருந்துகளைக் கண்டுபிடிப்பது அவசியமானது. இல்லையெனில் பிற வகை கொரோனா வைரஸைப் போல ஒவ்வொரு குளிர்காலத்திலும் இது மீண்டும் வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொரோனாவுக்கான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல விஷயங்களில் இன்னும் தெளிவு கிடைக்கவில்லை. இந்த வைரஸுக்கான நிரந்தர நோய் எதிர்ப்பு சக்தி இல்லாவிட்டால் காய்ச்சல் போன்ற சாதாரண நோய்களைப் போல் இதுவும் அடிக்கடி வர வாய்ப்புள்ளது. சீனா போன்ற நாடுகள் வைரஸிலிருந்து மீண்டு, ஊரடங்கைத் தளர்த்திய பிறகு மீண்டும் இரண்டாவது அலை வீசத்தொடங்கியதே இதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே கொரோனாவை அழிக்கும் மருந்து கண்டுபிடிக்கும் வரை சமூக விலகல் மட்டுமே இந்த வைரஸிலிருந்து மனித குலத்தைக் காக்கும். அதிலும் குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் போன்ற அதிக பாதிப்புகள் உள்ள நாடுகளில் கட்டாயம் இதைக் கடைப்பிடிக்க வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.vikatan.com/news/international/social-distancing-may-need-to-continue-until-2022-researchers-said

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.