Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின் மீண்டும் ஒரு தாக்குதலுக்கான திட்டம் இருந்துள்ளது: விசாரணைகளில் உறுதியென்கிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Featured Replies

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுதாக்குதல் குறித்து, பலர் கைது செய்யப்பட் டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன  முக்கிய விடயமொன்றை வெளியிட்டுள்ளார்.

jaliaya.jpg

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத குண்டுத் தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/80311

  • தொடங்கியவர்

சட்டத்தரணி ஹிஜாஸ் உள்ளிட்டோரின் கைது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்

(எம்.எப்.எம்.பஸீர்)

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், வெறும் தொலைபேசி தொடர்புகளை மையபப்டுத்திய விடயங்களுக்காக மட்டுமோ அல்லது, அவரது சட்டத்தரணி தொழில் ரீதியிலான தொடர்புகளுக்காகவோ கைது செய்யப்படவில்லை எனவும், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் குறித்த உறுதியான நியாமான ஆதாரங்களின் கீழான சந்தேகத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன கூறினார்.

அரச தகவல் திணைக்களத்தில் விஷேட செய்தியாளர் சந்திப்பொன்றினை நடாத்தியே அவர் இதனைத் தெரிவித்தார்.

சமூகவலைத் தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் சட்டத்தரணி ஹிஜாஸின் கைது குறித்தும் ஏனைய சந்தேக நபர்கள் சிலரின் கைது குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை நிராகரிப்பதாக பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது சி.ஐ.டி.யின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் வெதிசிங்கவும் கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய கூறியதாவது,

'உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அண்மையில் சில சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் கைது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. சமூக வலைத் தளங்களில் பரிய எதிர்ப்புக்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெறுமனே தொலைபேசி அழைப்புகளுக்காக கைதுசெய்யப்பட்டதாக விமர்சிக்கப்படுகின்றது. மேலும், கைதில் உள்ளடங்கும் சட்டத்தரணியை, அவர் தனது சேவையாளர் தொடர்பில் வழக்குகளில் ஆஜரானமைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் பரப்படுகின்றன. இந்த விமர்சனங்களை நாம் முற்றாக நிராகரிக்கின்றோம்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எவரையும் வெறுமனே, ஒரு தொலைபேசி அழைப்பு இருந்தது என்பதற்காகவோ, அல்லது தனது சேவை பெறுநர் தொடர்பில் தொழில் ரீதியாக முன்னிலையானமை தொடர்பிலோ கைது செய்யப்படவில்லை.

மிகத் தெளிவான ஆதாரங்களின் கீழேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குண்டுதாரிகளுடன் இணைந்து, அமைப்புக்களை ஏற்படுத்தி அதன் ஊடாக முன்னெடுத்த நடவடிக்கைகள் குறித்தும் எமது விசாரணைகளில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

வெறுமனே தொலைபேசி அழைப்புக்களை மட்டும் நாம் பார்க்கவில்லை. தொலைபேசி அழைப்புக்களுக்கு மேலதிகமாக, அவர்கள் சென்று வந்த இடங்கள் உள்ளிட்டவை அறிவியல் தடயங்கள் ஊடாக கண்டறியப்பட்டு, நியாயமான சந்தேகத்தின் பேரிலேயே கைதுகள் இடம்பெற்றுள்ளன ' என்றார்.

https://www.virakesari.lk/article/80321

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா வழியாலையும் முசுலீமுகளை அடக்கி சிங்கள வாக்கை அமோகமாக எடுக்க நினைக்கிறார்கள்....

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ampanai said:

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத குண்டுத் தாக்குதலை போன்று மேலும் ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்ததாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

தேர்தல் காலங்களில் இவர்களுக்கு: நாட்டில் குண்டுகள் வெடிக்கவேணும் புலிகளின் ஆயுதங்கள் கண்டு பிடிக்கவேணும், புலிப்பயங்கர வாதிகள் கூட வேணும், நாட்டில் ஒரு பயப்பீதி உருவாக்க வேணும்.   இப்போ கொரோனாவும்இப்போ  சேர்ந்து  பணமழை கொட்டுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.