Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நாடு செல்லும் பாதை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாடு செல்லும் பாதை?

[26 - May - 2007]

* "உத்தியோகபூர்வமானவை எனஅறிவித்து கூட்டிக் குறைத்து வெளியிடப்படும் புள்ளி விபரங்களின் நம்பகத் தன்மையின் உண்மையான அளவு கோல் பொதுமக்களே'

இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது? அபிவிருத்திப் பாதையிலா? அல்லது அழிவுப் பாதையிலா? என்று ஒருவர் கேள்வி எழுப்பினால் நிச்சயம் இரண்டாவது பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது என்ற பதிலைத் தயக்கம் இன்றி கூறிவிட முடியும். ஏனெனில், இன்று நடைபெற்றுவரும் அன்றாட நிகழ்வுகள் ஒவ்வொன்றும் அவ் அவலப் பாதையை வெளிச்சமிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட வருடாந்த புள்ளிவிபரத்தில் 7.4 சதவீத பொருளாதாரம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக எடுத்துக் காட்டியது. அது மட்டுமன்றி விரைவில், இந்த வளர்ச்சியானது 8 சதவீதத்தை அடைந்துவிடும் எனவும் எதிர்வு கூறப்பட்டது. இப்புள்ளி விபரத்தை ஜனாதிபதி முதல் அரசாங்க சார்பினர் வரை அடிக்கடி எடுத்தாண்டு இலங்கை அபிவிருத்திப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி வருகின்றனர். மத்திய வங்கியின் இப்புள்ளி விபர அறிக்கை இப்போது ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்ட புத்தக வடிவில் வந்துவிட்டது. மேற்கூறிய 7.4 வீத வளர்ச்சி வீதம் நாட்டின் வடக்கு, கிழக்கை உள்ளடக்காது வரையப்பட்ட கணக்கு என்ற விடயம் இரண்டு நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்ரால் போட்டுடைக்கப்பட்டது.

மத்திய வங்கி அறிக்கை பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அரசாங்கப் பிரதம கொறடாவான அமைச்சர் புள்ளி விபரங்களைத் தயாரித்தவர்களிடம் தான் இதற்கான உரிய பதிலைப் பெற வேண்டும் எனக் கூறிக்கொண்டார். அத்துடன், நாட்டின் பணவீக்கம் அதிகரித்துவிட்டது என்றும் அதற்கு உதாரணம் அமெரிக்க டொலரின் பெறுமதி நூற்றிப் பன்னிரண்டு ரூபாவை எட்டிவிட்டது என்பதையும் சுட்டிக் காட்டியபோது, அதுபற்றி அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷிடம் தான் கேட்க வேண்டும் என அதே முக்கிய அமைச்சர் கூறிக் கொண்டார். இதனை ஒரு பொறுப்புள்ள அரசாங்கத்தின் பதிலாகக் கொள்ள முடியுமா? ஆனால், இதிலிருந்து தெரியக்கூடியது யாதெனில் மத்திய வங்கி அறிக்கையின் புள்ளி விபரங்களும் சரி அதனைப் பற்றிக் கொண்டு நிற்கும் அரசாங்கமும் சரி இந்நாட்டு மக்களுக்குப் பொறுப்புக் கூறக் கூடிய நிலையில் இல்லை என்பதேயாகும்.

எவரும் புள்ளி விபரங்களை கூட்டியும் குறைத்தும் நீட்டியும் நிமிர்த்தியும் கூறலாம். அதனை உத்தியோகபூர்வமானது என்றும் கூறிக் கொள்ளலாம். ஆனால், அத்தகைய புள்ளி விபரங்கள் ஏகப் பெருவாரியான நாட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் பிரதிபலித்து நிற்கின்றதா என்பதே முக்கியமான ஒரு அளவு கோலாகும். இத்தகைய, வளர்ச்சிவீதப் புள்ளி விபரங்களை தயாரிக்கும் பெரிய படிப்பாளிகள் மக்கள் மத்திக்கு செல்வதில்லை. புறக்கோட்டை சந்தையில் வந்து மக்களோடு மக்களாக நின்று பொருட்களை வாங்குவதும் இல்லை. ஆனால், மக்களின் வரிப்பணத்திலிருந்து சுளை சுளையாகப் பெரும் சம்பளம் பெற்றுக்கொண்டு குளிரூட்டப்பட்ட உயர் வசதிகளை கொண்ட பணிமனைகளில் இருந்தவாறே இப்புள்ளி விபரங்களைத் தயாரிக்கின்றனர் என்பது வேறு கதை.

உண்மையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டிருப்பின் அதன் பலாபலன்கள் மக்களைச் சென்றடைய வேண்டும். மாதாமாதம் எரிபொருட்களின் விலைகளையும் மின்சாரம், போக்குவரத்துக் கட்டணங்களையும் உயர்த்தி பொருட்களின் விலைகளைப் பல மடங்குகளாக்குவது தான் 7.4 வீதப் பொருளாதார வளர்ச்சியின் இலட்சணம். யுத்தத்திற்கான செலவை கேள்வி நியாயமின்றி உயர்த்தி ஆயுதக் கொள்வனவுக்காக கோடிக் கணக்கில் செலவிட்டுக் கொண்டிருந்தால் அந்தச் சுமை முழுவதையும் மக்களே சுமந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்து வருகின்றார்கள்.

இதுவரை அமைச்சர்களின் எண்ணிக்கை 114 ஆகியுள்ளது. இன்னும் யாராவது அரசின் பக்கம் போக விரும்பினால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இந்த அமைச்சர் கூளாம் எவற்றை சாதனையாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு அமைச்சரும் ரூபா ஒரு இலட்சம் முதல் ஒன்றரை இலட்சத்தை அவரவர் பதவிக்கு ஏற்ப சம்பளமாகப் பெறுகின்றனர். இதனைவிட வாகனங்கள், பாதுகாப்பு மற்றும் பரிவாரங்களுக்கான செலவுகள் யாவும் நாட்டு மக்களின் கணக்கிலேயே எழுதப்பட்டு வருகின்றன. இத்தனை அமைச்சர்களில் நாற்பது பேருக்கு மட்டும் தான் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உண்டு. ஏனைய எழுபத்தி நான்கு அமைச்சர்களின் வாசஸ்தல வாடகையாக மாதாமாதம் ரூபா ஒரு இலட்சம் மேலதிகமாக வழங்கப்படுகின்றது. இவை யாவும் மகிந்த சிந்தனை காரணமான பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடு தானா? ஒவ்வொரு சாதாரண மனிதரும் ஒரு கிலோ மாவை 45 ரூபாவிற்கும் நானூறு கிராம் பாணை 25 ரூபாவிற்கும் ஒரு கிலோ அரிசியை 50 ரூபாவிற்கும் வாங்கி அரைப் பட்டினியுடன் வாழ்ந்து வருகின்றனர்.

வர்த்தக நுகர்வோர் அமைச்சர் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பாய்ந்து சென்றவர்களில் ஒருவர். அவர் எதிர்த்தரப்பில் இருக்கும் போது வாழ்க்கைச் செலவின் அதிகரிப்புக்கு புள்ளி விபரம் கொடுத்து அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கை பற்றி விளாசித் தள்ளியவர். ஆனால், அமைச்சர் பதவி பெற்றுக் கொண்டபின் அவரது சுருதியும் தொனியும் மாறிக் கொண்டது. விலை உயர்வுக்கு புறக்கோட்டை வியாபாரிகள் தான் காரணம் என்று கூறியதுடன் விலை உயர்வுகள் தவிர்க்க முடியாதவை என்றும் கூறத் தொடங்கினார். பொருட்களின் விலைகளைக் குறைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதாக அரசாங்க ஊடகங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டன. ஆனால், யாவும் வெறும் கண்துடைப்பாகிக் கொண்டதைத்தான் காணமுடிந்தது.

பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் மக்களின் மோசமடைந்து வரும் வாழ்க்கைச் செலவீனங்களும் நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறதே ஒழிய அபிவிருத்திப் பாதைக்கு அல்ல. 2007 ஆம் ஆண்டிற்கான யுத்தச் செலவீனம் 139 பில்லியன் ரூபாவாகும். இத் தீர்மானிக்கப்பட்ட செலவீனத்திற்கு மேலாகவே மிக்-29 ரக விமானங்களும் ஏனைய நவீன ஆயுதங்களும் கொள்வனவு செய்யப்பட உள்ளன. ஏற்கனவே, 17 சதவீதமாக உள்ள பணவீக்கம் விரைவில் இருபது சதவீதமாக உயர்ந்து கொள்ளப்போகிறது. நாணயத் தாள்களை அச்சிடுவதால் சரிந்து செல்லும் பொருளாதாரத்தைத் தாங்கி நிற்க முடியாது. வெளிநாட்டுக் கடன் தொகை தேசிய நிகர உற்பத்தியில் 93 சதவீதமாக உள்ளது. இக்கடனுக்குச் செலுத்தும் வட்டியானது அரச வருமானத்தில் 30 சதவீதமாக இருந்து வருகின்றது.

இவற்றின் மத்தியிலே மக்களை திடுக்கிட வைக்கும் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. நாட்டில் கொலைகள், ஆட்கடத்தல்கள், காணாமல் போதல் என்பன இன்று எவரையும் திடுக்கிட வைப்பதில்லை. புனித பௌத்த தர்மம் பற்றிப் பேசப்படும் இந்த நாட்டிலே இவை எல்லாம் நியாயப்படுத்தப்படும் சர்வ சாதாரண விடயங்களாகி அன்றாட வாழ்வுடன் கலக்கப்பட்ட ஒன்றாகிவிட்டது.

ஆனால், பொருளாதார மற்றும் நிர்வாக மட்டங்களிலேயே மேற்கூறிய திடுக்கிடும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கடந்த தை மாதத்தில் பொது நிறுவனங்களுக்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு (COPE) ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் 25 அரச நிறுவனங்களில் இடம்பெற்ற முறையற்ற பணக்கொடுப்பனவுகள், மோசடிகள் என்பன பற்றி சுட்டிக்காட்டப்பட்டது. இதில் 150 பில்லியன் ரூபா இழக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அதே தெரிவுக்குழு மேலும் ஐந்து நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகளைப் பட்டியலிட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் கூறுகிறார். இதில் வேடிக்கை என்னவெனில் இப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அறிக்கை இதுவரை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதுதான்.

இவை ஒருபுறமிருக்க இலஞ்ச மோசடித் திணைக்கள ஆணையாளர் வெளியிட்டுள்ள தகவலில் கடந்த ஐந்து மாதங்களில் 600 முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளன என்று கூறுகிறார். இந்த முறைப்பாடுகள் இலஞ்ச ஊழல் மோசடி சம்பந்தமாக அமைச்சர்கள், அரசியல்வாதிகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் மீதானவைகளாகும். மேலும், பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகம் என்றும் கூறப்பட்டுள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறைப்பாடுகள் 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலஞ்ச ஊழல் மோசடிக்கு எதிரான திணைக்கள ஆணையாளர் கூறுகின்றார்.

இவையாவும் நாடு அபிவிருத்திப் பாதையில் செல்கின்றதை பிரதிபலிக்கின்றதா? அல்லது அழிவுப் பாதையில் பயணிப்பதை எடுத்துக் காட்டுகின்றதா? இவற்றுக்கான அடிப்படைக் காரணம் என்ன? முதலிலே இந்த நாடு யாருக்குச் சொந்தமானது என்பது சிந்தனைக்குரிய கேள்வியாக்கப்பட வேண்டும். வடக்கு முதல் தெற்கு வரை கிழக்கிலிருந்து மேற்கு வரை மலையகம் உள்ளிட்ட இத்தீவு நாடு அதில் வாழும் அனைத்து பல்லின மக்களுடையது என்ற நிலை உருவாக வேண்டும். அதேவேளை, அன்றிலிருந்து இன்று வரை ஆளும் தரப்பிலும் எதிர்த்தரப்பிலும் மாறி மாறி ஆட்சி செய்து வருவோரும் அவர்களுக்கு ஆசி வழங்கி வரும் உயர் மத பீடங்களும் இனமத மொழி பிடித்தலையும் பேரினவாத வெறியர்களும் இந்நாட்டைத் "தமது வளவாகவே" "கருதி வந்துள்ள போக்கு மாற்றியமைக்கப்பட வேண்டும். இந்த மேட்டுக்குடி ஆளும் வர்க்க வளவுச் சிந்தனை தான் ஆளுகிறவர்களையும் எதிர்த்தரப்பிலிருந்து அடுத்த ஆட்சிக்கு வரத் தயாராவோரையும் ஆட்டிப் படைக்கின்றது. மகிந்த சிந்தனை இன்று எதைப் பேசி எதை நடைமுறைப்படுத்துகிறதோ அதே விடயங்களை சற்று வேறான தோற்றத்தில் ரணில் தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிச் சிந்தனையும் நடைமுறைப்படுத்தும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இந்த நாடு இந்த நாட்டின் ஏகப் பெரும்பான்மையினரான மக்களுக்குச் சொந்தமாக்கப்படும் வரை அபிவிருத்திப் பாதையில் இன்றி அழிவுப் பாதையிலேயே கொண்டு செல்லப்படும் என்ற நிலையே நீடித்துச் செல்கிறது.

தினக்குரல்

அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி என்பார்கள்..

மகிந்த காச சேர்க்கிறதிலயும் தமிழனை அழிக்கிறதிலயும் குறியாக இருக்கிறதால..நாடு அபிவிருத்தி அடையமா..அழியமா எண்டு என்ன கேள்வி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.