Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

க.பொ.த. சாதாரணம் – சரியான முறையில் எதிர்கொள்வோம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

க.பொ.த. சாதாரணம் – சரியான முறையில் எதிர்கொள்வோம்!
=======================================

இலங்கையில் மீண்டும் ஒருமுறை மாணவர்கள் பலருக்கு மகிழ்ச்சியையும் பலருக்கு கவலையையும் தரக்கூடிய சூழ்நிலை இப்போது. கல்விப் பொதுத் தராதரப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

வழமைபோல அனைத்துப் பாடங்களிலும் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களைப் பலரும் பாராட்டித் தள்ளவும், பாடசாலைகள் தமது சாதனைப் பட்டியலை மீண்டும் தூக்கிப் பிடிக்கவும் இன்னொரு சந்தர்ப்பம் வந்துள்ளது. அதேபோல பிரபல பாடசாலைகள் தாம் பொறுக்கியெடுத்து வைத்துக்கொண்ட மாணவர்களின் சிறந்த பெறுபேறுகளை கல்வெட்டுகளில் பொறித்துக்கொள்வார்கள். ஊரெங்கும் தண்டோரா போட்டுச் சொல்வார்கள்.

அதே நேரம் இந்தப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெறாத மாணவர்கள், அதையிட்டு அதிகம் வருந்தத் தேவையில்லை. உயர்கல்விக்குத் தேவையான பெறுபேறு கிடைக்காவிட்டால் மீண்டும் ஒருமுறை கவனமாகப் படித்து அடுத்த வருடம் அந்தப் புள்ளிகளைப் பெற்றுக் கொள்ளலாம். 

உங்களில் சிலரின் பெற்றோர் உங்களிடம் கோபப்படக் கூடும். அது தங்கள் பிள்ளை படித்தும் நல்ல பெறுபேறு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தில்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பெற்றோர் திட்டினால் மனம் கலங்கி விடாதீர்கள். அடுத்தமுறை உங்களை நிரூபித்துக் காட்டுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் ஒப்பிட்டோ, அல்லது நீங்கள் எதிர்பார்த்தபடி சிறந்த பெறுபேறுகள் கிடைக்கவில்லை என்றோ நினைத்து கவலைப்பட்டு விபரீத முடிவு எதனையும் தயவுசெய்து எடுத்துவிடாதீர்கள். எங்கள் ஒவ்வொருவர் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்கிறது என்பதை நம்புங்கள். இந்தப் பரீட்சை உங்கள் பிறப்புக்கான காரணத்தை அளவிடும் கருவியில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

பெற்றோர்களே !
----------------------------------
பெற்றோர்களே உங்கள் பிள்ளை நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறைப் பெறவில்லை என்று கவலைப்படுவதில் ஓரளவு நியாயமிருக்கிறது. ஆனால் அதற்காக பிள்ளையின்மேல் கோபப்படாதீர்கள். சாதாரண தரப் பரீட்சையில் அதிசிறந்த பெறுபேறுகளை எடுக்காத எத்தனையோ மாணவர்கள் உயர்தர பரீட்சையில் மிகச்சிறந்த பெறுபேறுகள் பெற்று தாம் விரும்பிய துறையில் கற்க பல்கலைகழகம் சென்றமை வரலாறு.

கடந்த காலங்களில் கல்வி தொடர்பாக பெற்றோர் திட்டியமையால் சில பிஞ்சுகள் தற்கொலை செய்துகொண்டதை நீங்களும் அறிவீர்கள். உங்கள் கோபம் உங்கள் பிள்ளையை தவறான முடிவெடுக்க வைத்துவிட்டால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்கள் துன்பப்படுவீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் உறவுகள் நண்பர்கள் என்ன சொல்லுவார்கள் என்று நினைத்து மன உளைச்சல்பட வேண்டாம். அவர்களின் பிள்ளைகளின் பெறுபேற்றுடன் ஒப்பிட்டு உங்கள் பிள்ளைகளைத் திட்டவும் வேண்டாம். 

உங்கள் பிள்ளையின் முதலாவது நம்பிக்கைத் தூண்களே நீங்கள்தான். உங்கள் பிள்ளை குறைவான பெறுபேறோ பரீட்சையில் தோல்வியோ அடைந்திருந்தால் நீங்கள்தான் ஆறுதல் சொல்லவேண்டும். அடுத்தமுறை பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியப்படுத்த வேண்டும். இந்தப் பரீட்சை முடிவுகள் மட்டுமே உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று நினைத்து விடவேண்டாம். அவர்கள் கல்வியில் முன்னேற வேறு வழிகளும் இருக்கின்றன. 

இறுதியாக மற்றவர் பிள்ளைகளின் பெறுபேறுகளை அறியத் துடிப்பவர்களுக்கு,

தயவுசெய்து மற்றவர் எவ்வளவு பெற்றுக்கொண்டார்கள் என்பதை அறிய அவதிப்படாதீர்கள். உங்கள் உறவினரின் பிள்ளை நல்ல பெறுபேறு எடுத்தால் அவர்களே உங்களுக்கு அறிவிப்பார்கள். இல்லையெனில் பெறுபேறு குறைவு என்பதைப் புரிந்துகொண்ட அமைதியாக இருங்கள். 

குழந்தைகள் கல்வி தொடர்பாக பெற்றோரால் தண்டிக்கப்பட நீங்கள் காரணமாக இருக்காதீர்கள்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை சாதாரண தரப் பரீட்சையில் நிகழ்ந்துள்ள சில முக்கிய மாற்றங்களை பலரும் குறிப்பிடத்தவறிவிடுகிறார்கள்.

1. F குறியீடு இன்றி  W வழங்கப்படுகிறது. 

2. உயர்தரம் படிக்க சில பாடங்களில் கட்டாயம் சாதாரண சித்தி அல்லது திறமைச் சித்தி இருக்க வேண்டும். அத்தோடு மொத்தம் இத்தனை பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அப்படி அமையாத பட்சத்தில் அதிபர்களின் ஆலோசனையுடன் தாம் விரும்பும் குறித்த பாடப்பரப்பில் உயர்தரம்.. படிக்க அனுமதி கோர முடியும். ஆனால்.. அடுத்து வரும் தேர்வில்.. குறித்த பாடத்திற்கு மட்டும் தோற்றி தேவையான சித்தியை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

முன்பு போல்... மீண்டும் எல்லாப் பாடங்களுக்கும் தோற்றி.. தேவையான பெறுபேற்றை பெற வேண்டும் என்ற நியதி இப்போது கட்டாயம் இல்லை.

எனவே சாதாரண தரப் பரீட்சையை சாதாரணமாக நோக்கி சாதாரணமாகக் கடந்து அடுத்த இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள் மாணவர்களே. 9 ஏ 8 ஏ எல்லாம்.. இங்கு கட்டாயம் இல்லை. எடுத்தால் உங்களுக்கு நல்ல பயிற்சியாக அமையும். அவ்வளவே. 

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜெர்மனி போன்று சிறுதொழில் சார்ந்த கல்வி முறைகள் மற்றும் சுய தொழில் வாய்ப்புக்களை சாதாரண தர கல்வியின் பின்னர் வழங்குவது மூலம் மாணவர்கள், சமூகம் சிறக்க வாய்ப்புக்கள் உள்ளன. 

தற்பொழுது கல்விக்கும் தொழில்சார்ந்த வாய்ப்புக்களுக்கும் சம்பந்தம் இல்லை. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.