Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொருளாதாரத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட தளம்பலுக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதலே காரணம் - மத்திய வங்கி அறிக்கை

Featured Replies

(நா.தனுஜா)

நாட்டின் பொருளாதாரம் கடந்த வருடம் தளம்பல் நிலையை எதிர்கொண்டதாகவும் இதற்கு உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் முக்கிய காரணமென்றும் மத்திய வங்கி நாணயச்சபையின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கி நாணயச்சபையின் 70 ஆவது ஆண்டறிக்கை நேற்று பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் மத்திய வங்கி ஆளுநர் டபிள்யூ.டி.லக்ஷ்மனால் கையளிக்கப்பட்டது.

அவ் வறிக்கையில் பின்வரும் விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன:

கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்பட்டாலும்இ நுண்பாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாகப் பொருளாதாரத்தில் ஓரளவேனும் சமநிலையைப் மேணுவதற்கு உதவியாக அமைந்தன.

அதேவேளை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் சுற்றுலாத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதுடன் அது பொருளாதார வளர்ச்சியையும் பாதித்தது. அத்தோடு வணிக நடவடிக்கைகளில் முதலீடு செய்வதற்கான முதலீட்டாளர் நம்பிக்கையிலும் தளர்வை ஏற்படுத்தியது.

எனினும் கடந்த ஆண்டில் குறைவான பணவீக்க நிலைமையே பதிவாகியிருப்பினும் சில காலநிலை மாற்றங்கள் மற்றும் பெருந்தொகையான உணவுப்பொருள் வழங்கல் என்பன பொருட்களின் விலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்தியது.

https://www.virakesari.lk/article/80998

  • தொடங்கியவர்
19 minutes ago, ampanai said:

கடந்த ஆண்டு நாட்டின் பொருளாதார செயற்பாடுகள் மற்றும் அதன் வளர்ச்சியில் ஒரு மந்தநிலை காணப்பட்டாலும்இ நுண்பாகப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பெரும்பாகப் பொருளாதாரத்தில் ஓரளவேனும் சமநிலையைப் மேணுவதற்கு உதவியாக அமைந்தன.

சிங்களத்தின் கடன் மணிக்கூடு ... இந்த ஆசாமிகள் பொய் சொல்கிறார்கள் என எண்ணவைக்கும்  

https://countrymeters.info/en/Sri_Lanka/economy

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

சிங்களத்தின் கடன் மணிக்கூடு ... இந்த ஆசாமிகள் பொய் சொல்கிறார்கள் என எண்ணவைக்கும்  

https://countrymeters.info/en/Sri_Lanka/economy

பில்லியன் கணக்கான பணத்தை அரசாங்கம் ஏன் அச்சிடுகிறது:- மரிக்கார்.

IMG_3839.jpg

கொரோனா வைரஸ் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக பெருந்தொகை வெளிநாட்டு நிதியுதவி கிடைத்தும் பில்லியன் கணக்கில் ஏன் பணம் அச்சிடப்படுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என முன்னாள் கொழும்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் S.M மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

வெளிநாட்டு நிதியுதவியாக 12 ஆயிரத்து 743 கோடியே 10 லட்சம் ரூபா கிடைத்துள்ளதாகவும்,அதில் சுய தொழில் மற்றும் அன்றாடம் சம்பளம் பெறும் 42 லட்சம் பேருக்கு 5 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கினாலும் அரசாங்கத்திடம் 10 ஆயிரத்து 643 கோடியே 20 லட்சம் ரூபா இருக்க வேண்டும். மீதமுள்ள இந்த நிதியுதவியின் மூலம் என்ன செய்ய போகின்றது என்பதை அரசாங்கம் தெளிவுப்படுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

இந்த பணம் சுகாதார உபகரணங்கள், மருந்து, வைத்தியசாலை நிர்மாணம், வர்த்தகர்களுக்கு நிவாரணம் வழங்குதல் உட்பட எதற்கு பயன்படுத்த போகிறது என்பதை அரசாங்கம் கூற வேண்டும்.

இதனிடையே அரசாங்கம் 20 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை அச்சிட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 182 ரூபாவாக இருந்த அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 195 ரூபாவாக அதிகரித்தது. அத்துடன் இதன் காரணமாக கடன் சுமையானது வட்டியின்றி 52 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. அத்துடன் அரசாங்கம் மேலும் 10 ஆயிரம் கோடி ரூபா பணத்தை அச்சிட தயாராகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பிடத்தக்களவு நிதியுதவி அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நிலையில், ஏன் பணத்தை அச்சிடுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என மரிக்கார் கூறியுள்ளார்.

-வணக்கம் லண்டனுக்காக ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-

http://www.vanakkamlondon.com/பில்லியன்-கணக்கான-பணத்தை/

  • தொடங்கியவர்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குறிப்பிடத்தக்களவு நிதியுதவி அரசாங்கத்திற்கு கிடைத்துள்ள நிலையில், ஏன் பணத்தை அச்சிடுகிறது என்பதை அரசாங்கம் விளக்க வேண்டும் என மரிக்கார் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல், அதற்கு பின்னர் பலரை வாங்க எல்லாம் என பல தேவைகள் இருக்கே 🤣

டிஸ்கி : அமெரிக்க டாலரில் கேளுங்கள் தர சம்மதிக்கையில் 👍 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.