Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவுக்கு எதிராக போராடும் படையினரை விமர்சிப்பது கவலைக்குரியது- சங்கரத்ன தேரர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

கொரோனாவுக்கு எதிராக போராடும் படையினரை விமர்சிப்பது கவலைக்குரியது- சங்கரத்ன தேரர்

வைத்தியர்கள், தாதியர்கள், படையினரை கடவுள்கள் என போற்றியவர்கள் தான் இன்று மோசமானவர்கள் என விமர்சிக்கிறார்கள் என கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.

கல்முனை சுபத்திராம விகாரையில் தொழிலாளர் தினம் தொடர்பாக செய்தியாளர்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “கடந்த வருடம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்று பாரிய ஒரு உண்ணாவிரதத்தை மேற்கொண்டு இருந்தோம். இதுகுறித்து இன்னும் சரியான பதில் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கவில்லை என மிகவும் மன வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கொரோனா அனர்த்த காலத்தில் அக்கறையுடன் செயற்படும் அரசாங்கம் வடக்கு பிரதேச செயலக விடயத்திலும் அக்கறையுடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கடந்த வாரத்தில் இராணுவ வீரர்களுக்கு நோய்த்தாக்கம் ஏற்பட்டு ஆபத்தான நிலைக்குவந்த கட்டத்தில் சிலர் கேவலமாக நன்றி அறியாதவர்களாக பேசிவருவது வேதனையான விடயம்.

அதேபோன்று, இராணுவ வீரர்கள் மட்டுமல்லாது வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார ஊழியர்கள் தமது உயிரைப் பார்க்காமல் எமது நாட்டில் வாழும் மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென போராடும் நிலையில் இந்தத் துறையினர் குறித்து இழிவான வார்த்தைகளைப் பேசவேண்டாம்!

நோய்த்தொற்று வேண்டுமென்று ஒருவர் பரப்புவது அல்ல. உலகளாவிய ரீதியிலான வைரஸ் தாக்கத்தையும் எமது நாட்டில் ஏற்பட்டுள்ள வைரஸ் தாக்கத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முப்படைகள் வைத்தியர்கள் அயராது பாடு படுகின்றனர்.

அவர்களுக்கு இவ்வாறான சூழ்நிலையில் நீங்கள் ஒத்துழைப்புத் தருவதன் மூலம் மாத்திரமே இந்த ஊரடங்குச் சட்டத்தை நீக்கி சுமூகமான சூழ்நிலைக்கு நாம் மீண்டு வரமுடியும்.

அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தை தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட வேண்டும். மக்களுக்குத் தேவையான அனைத்து நிவாரண வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அத்தியாவசிய சேவையை அரசாங்கம் வீடு வீடாகச் சென்று நடைமுறைப்படுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்ற குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/கொரோனாவுக்கு-எதிராக-போரா/

2 hours ago, தமிழ் சிறி said:

கொரோனாவுக்கு எதிராக போராடும் படையினரை விமர்சிப்பது கவலைக்குரியது- சங்கரத்ன தேரர்

போர்க்குற்றவாளிகளை, கொலைகாரர்களை எக்காலத்திலும் எதற்கும் பாராட்ட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.