Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கோவிட்-19 நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 
அமெரிக்காவில் கறுப்பின மக்கள் கோவிட்௧9 நோயினால் அதிகம் பாதிக்கப்படுவது ஏன் ?

கோவிட்-19 உலகுக்குச் சமத்துவத்தைக் கற்பிக்க வந்த ஒரு வியாதி என்றும் சிலர் நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. அதற்கு, இனங்களோ, மதங்களோ, ஏழிகளோ, பணக்காரரோ, வசதி படைத்தவர்களோ இல்லையோ என்று பாரபட்சமின்றிப் பீடித்து வந்தது. ஆனால் ஏற்கெனவே பாரபட்சங்களாலும், ஏற்ற இறக்கங்களாலும், இன பேதங்களாலும் கட்டியெழுப்பப்பட்ட சமூகங்களில் வைரஸ் கொஞ்சம் தளம்பத்தான் செய்திருக்கிறது. அமெரிக்கா அதற்கு நல்லதொரு உதாரணம்.

அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும், கோவிட்-19 தொற்று 1 மில்லியனைத் தாண்டியும், மரணங்கள் 60,000 ஐ அண்மித்து வருகின்றதுமான இவ்வேளையில், இந்த நோய்க்குப் பலியாகின்ற மக்களில் பெரும்பாலோர் கறுப்பின மக்களாக இருப்பது பலரின் கவனத்தையும் ஏர்த்து வருகிறது.

அமெரிக்காவின் நோய்க்கு கட்டுப்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட ஆரம்ப அறிக்கையின்படி, நோய் தொற்றியவர்களில் 30 வீதத்துக்கு மேலானோர் கறுப்பின மக்கள் எனது தெரிகின்றது. ஆனால் நாட்டின் மொத்த சனத்தொகையில் 13 வீதமானோரே கறுப்பின மக்கள். கோவிட்-19 நோயாளிகள் பற்றிச் சேகரிக்கப்படும் தரவுகள் முற்று முழுதாகச் சரியானவை என ஏற்றுக்கொள்ளப்பட முடியாவிட்டாலும், மாநில ரீதியாகக் கிடைக்கப்பட்ட தரவுகள் மிகவும் கவலைதரும் விடயத்தையே தெரிவிக்கின்றன. லூசியானா மாநிலத்தில் கோவிட்-19 நோயால் இறந்தவர்களில் 56% கறுப்பின மக்கள். ஆனால் அம் மாநிலத்தின் சனத் தொகையில் 32% மே அவர்கள். மிச்சிகன் மாநிலத்தின் சனத்தொகையில் 13.8% வீதமாகவிருந்தும் இறப்பு வீதம் 40 ஆகவிருக்கின்றது.

அமெரிக்காவின் எல்லா மாநிலங்களிலும் தரவுகள் இனரீதியாக அணுகப்படவில்லை. இருக்கின்ற அவசரமானதும், குழப்பகரமானதுமான நிலையில் அதை எதிர்ப்பார்ப்பதும் சாத்தியமில்லை. ஆனால் இன, குல, பரம்பரைகளின் அடிப்படையில் மருந்துகளைத் தயாரிக்கும் (perosanlized medicine) அளவுக்கு முன்னேற்றம் கண்ட நாகரீக உலகில் இதுவும் ஒஉ சிகிச்சைக்கான அணுகுமுறையாகவே பார்க்கப்படவேண்டும்.

 

ஏப்ரல் 9 அன்று அசோசியேட்டட் பிரெஸ் வெளியிட்ட ஒரு செய்தியின்படி, ஒரு பிரதேசத்தில் அறிவிக்கப்பட்ட 13,000 கோவிட் மரணங்களில் 3,300 பேர் ஆபிரிக்க அமெரிக்கர்கள் என்று அறியப்படுகிறது.

காரணங்கள்:

1. ஆபிரிக்க அமெரிக்கர்கள் அதிக அளவில் கிருமித் தொற்றை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது.

கோவிட்-19 நோயைத் தரும் SARS-CoV-2 வைரஸ் இலகுவில் தொற்றக்கூடிய மிகவும் ஆபத்தான கிருமி. அதைத் தடுக்க அரசாங்கங்கள் மக்களை வீடுகளில் இருக்கும்படி கட்டளைகள் போட்டாலும், சில் சேவைகள் கட்டாயமயமாக்கப்பட்டன. பராமரிப்புச் சேவையினர், சில்லறை வியாபார நிலையங்களில் பணி புரிவோர், சுகாதார சேவையளர், விவசாயப் பண்ணைகளில் பணி புரிவோர், பொதுப் போக்குவரத்துப் பணியாளர் எனப் பலர் இவ்வகையறாவுக்குள் அடங்குவர்.

உதாரணத்துக்கு, கல்வி, சுகாதார சேவைகளில் பணிபுரிபவர்களில் 30% மானோர் ஆபிரிக்க அமெரிக்கர்கள். சில்லறை வியாபாரத் துறையில் 10% அவர்கள். நிபுணத்துவ தொழில்களிலோ (professional), வணிகத் துறைகளிலோ (business) ஆபிரிக்க அமெரிக்கர்கள் பணிபுரிவதில்லையாதலால், அவர்களுக்கு வீடுகளிலிருந்து பணி புரியும் சந்தர்ப்பங்கள் ஏற்படுவதில்லை.

வேலைக்குத் தனியே வாகனங்களை ஓட்டிச் செல்வதும் அவர்களுக்கு முடிவதில்லை. நகர்ப்புற வாசிகளில் 34% வீதமான ஆபிரிக்க அமெரிக்கர்கள் பொதுப்போக்குவரத்தையே பாவிக்கின்றனர். ஒப்பீட்டளவில் 14% வெள்ளை இனத்தவர் பொதுப்போக்குவரத்தைப் பாவிக்கின்றனர். இக்கொள்ளை நோய்க் காலத்தில் இது தொற்று அதிகரிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.

வாழிடங்களைப் பொறுத்தவரையிலும், அதிகம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் வருமானம் போதாமையால் சிறிய வீடுகளில் அதிகம் பேர் வாழுவதுண்டு. ஜனவரி 2020 கணக்கெடுப்பின்படி 44% ஆபிரிக்க அமெரிக்கர்களே சொந்த வீடுகளில் வசிக்கிறார்கள். இது வெள்ளைக்காரரில் 74% ஆகும். தொடர் மாடிக்கட்டிடங்களில் எலிவேட்டர்களில் பலர் ஒரே நேரத்தில் பயணிப்பதும் இதற்கு ஒரு காரணம்.



2. ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு நீண்டகால வியாதிகள் அதிகம்.

பல ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு இருதய வியாதிகள், சிறுநீரக வியாதிகள் போன்றவை அதிகம். 40% த்துக்கு மேலானோருக்கு உயரழுத்தம் உண்டு. இது உலகிலேயே மிக அதிகமான எண்ணிக்கை. பெரும்பாலான ஆபிரிக்க அமெரிக்கர்கள் கூடுதலான மாசடைந்த காற்றைச் சுவாசிப்பவர்கள். இதனால் தொய்வு போன்ற சுவாச நோய்களும் இவர்களுக்கு அதிகம். இவர்களது வாழிடங்களும் அதிகம் மன உளைச்சலைக் கொடுப்பனவாக உள்ளன. நல்ல அமைதியான சூழல்களில் வாழ இவர்களுக்குக் கிடைக்குமானால் அவர்களது நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும்.

3. ஆபிரிக்க அமெரிக்கர்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பது குறைவு.

ஆபிரிக்க அமெரிக்கர்கள் வருமானம் போதாமையால் அவர்கள் மருத்துவ காப்புறுதி இன்றி, மருத்துவ சேவைகளை நாடுவதில்லை. அத்தோடு மருத்துவ சேவைகளிலும் அவர்களுக்கு அதிகம் நம்பிக்கையில்லை. சில நீண்டநாள் நோய்களுக்குச் சிகிச்சை பெறாமையால் அது ஏனைய நோய்களுக்கும் அடிகோலுகின்றன. 20% ஆபிரிக்க அமெரிக்கர்கள் வறுமையில் வாழ்கின்றனர் (இது வெள்ளை அமெரிக்கர்களில் 10%. பல சிகிச்சைகளில் வெள்ளைக்காரருக்கு முன்னுரிமை கொடுக்கும், பாரபட்ச அணுகுமுறை மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படுகிறது.

“இப்படியான நெடுங்கால கட்டமைப்பு ரீதியான புறக்கணிப்பு கறுப்பின மக்களைப் ‘பலவீனமான’ இனமாக ஆக்கியிருக்கிறது. இதனால் கோவிட்-19 நோய் போன்ற தொற்று இவர்களை அதிகம் பாதிக்கிறது.” என நோர்த் வெஸ்டேர்ண் பல்கலைக்கழக ஃபியென்பேர்க் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளரான கியாரி கேர்ஷோ கூறுகிறார்.

https://marumoli.com/அமெரிக்காவில்-கறுப்பின-ம/?fbclid=IwAR2lthPat_MYOEiCNp3C-OS2tg_HkJI5M3OboV243mZACCHYb7_4s5ZPrRc

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.