Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தென்னிலங்கையின் காய்ச்சலுக்கு இலக்காகித் தடுமாறும் பிரிட்டன்

Featured Replies

தென்னிலங்கையின் காய்ச்சலுக்கு இலக்காகித் தடுமாறும் பிரிட்டன்

"தீர்ப்பு நமது பக்கத்துக்குச் சார்பாக அமைந்தால் நீதி பதி நல்லவர். ஆனால் அவரின் தீர்ப்பு எதிராளி பக்கத் துக்கு சார்பாக அமைந்தால் நீதிபதி பக்கச்சார்பானவர்.'

சர்வதேசம் குறித்து தென்னிலங்கைச் சிங்களம் கொண்டிருக்கும் கருத்தும் நிலைப்பாடும் இதுதான் போலும்.

இலங்கை இனப்பிரச்சினை, அதனால் மோசமாக வெடித்திருக்கும் போர், அந்த யுத்தத்தினால் ஏற்பட் டுள்ள பெரும் மனிதப் பேரவலம் போன்றவை குறித் தெல்லாம் கவனமும் அதிக சிரத்தையும் கொண்டுள்ள பிரிட்டிஷ் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களின் குழு ஒன்று இவ்விடயம் குறித்து கருத்து வெளி யிட்டிருக்கின்றது.

அக்கருத்துகள் தென்னிலங்கையைக் கொதித்துச் சீற வைத்திருக்கின்றன. புண்ணில் புளி வீழ்ந்தாற்போல தென்னிலங்கைச் சிங்களப் பேரினவாதிகள் துள்ளிக் குதித்து ஆர்ப்பாட்டம் செய்திருக்கின்றார்கள். கொழும் பில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்திற்கு முன்னால் அவர் கள் திரண்டு கோஷமிட்டுள்ளதுடன் தூதரக வாசலில் தங்களின் மகஜரின் பிரதி ஒன்றையும் ஒட்டியிருக்கின் றார்கள். ஒன்றுக்கு இரண்டு நாள்கள் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன.

இலங்கை இனப்பிரச்சினை பற்றிய விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புகளிடமிருந்து நேரடியாகவே கேட் டறிவதற்காக இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலி கள், அமைதி முயற்சிகளுக்கு அனுசரணைப் பணி வழங்கும் நோர்வே ஆகிய தரப்புகளை நேரடியாக பிரிட் டனுக்கு அழைப்பது என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் குழு எடுத்த முடிவே தென்னிலங்கைப் பேரினவாதிகளை மூர்க்கம் கொள்ளச்செய்திருக்கின் றது.

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்தைப் பயங்கரவாத இயக்கங்க ளின் பட்டியலில் சேர்த்து அதனைத் தடைசெய்வதற் குப் பிரிட்டன் நடவடிக்கை எடுத்தவேளையில் மட் டும், பிரிட்டன் நல்ல நாடு. இலங்கைப் படைகளுக்கு ஆயுத உதவியும் இராணுவப் பயிற்சியும் கொடுக்கின்ற போது சிறந்த நட்பு நாடு. புலிகளைத் தடை செய்யும் பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியத்தில் நிறைவேற்ற வைப்பதற்கு பிரிட்டன் முன்னின்று உழைத்த போது நல்ல தோழமைத் தேசம்.

ஆனால், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மோசமாக இடம்பெறுவதையும் ஆட்கடத்தல்கள், படு கொலைகள் கட்டுமட்டில்லாமல் நிகழ்வதையும் சகித் துக் கொள்ள முடியாமல் அதைச் சுட்டிக்காட்டி, மனித உரிமைகள் பேணப்படுவது தொடர்பான பதிவுகள் சீரடையும் வரை சில உதவித் திட்டங்களை இடைநிறுத் துவது என்று அறிவித்ததும், அது எதிரி தேசமாகிவிட் டது. அத்தோடு இலங்கை நிலைமை குறித்து சம்பந்தப் பட்ட தரப்புகளிடம் நேரடியாகவே கேட்டறிவது என பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித் ததும் பிரிட்டன் மிக மோசமான ஆக்கிரமிப்பு நாடாகி விட்டது.

இதுதான் தென்னிலங்கையின் கணிப்பீடு.

விடுதலைப் புலிகளுக்கும் தமிழர்களுக்கும் பாதக மான முடிவை பிரிட்டன் எடுக்கும்போது நல்ல நீதிபதி யாக அந்நாட்டை வரவேற்ற தென்னிலங்கை, இப்போது பிரிட்டன் நியாயம் உரைக்க முயற்சிக்கையில் அது, தென்னிலங்கைப் பக்கத்து அநீதிகளை அம்பலப்பலத் தும்போது பிரிட்டனை கடுமையாக வைது, இலங்கை இன்னும் பிரிட்டனின் குடியேற்ற (காலனித்துவ) நாடல்ல என்பதை லண்டனுக்கு நினைவூட்ட முயல்கிறது.

தென்னிலங்கையின் இப்போக்கு, சர்வதேச அதிருப் தியைச் சம்பாதிக்கும் அதன் தொடர் நிலைப்பாட்டில் ஓர் அங்கம்தான்.

இலங்கை இனப்பிரச்சினையை அமைதிவழியில் தீர்த்து, சமாதானத் தீர்வு ஒன்றைக் கிட்டச் செய்வதற் கான முயற்சிகளைத் தூண்டிவிடும் நன்னோக்குடன் காரியமாற்ற வந்த தங்களை, தென்னிலங்கை தவறான கண்ணோட்டத்தில் அணுகி, மோசமாக விமர்சிக்கின் றமை குறித்து இலங்கை விடயத்தைக் கையாளும் மேற் படி பிரிட்டிஷ் அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு வின் தலைவர் கீத் வாஸ் கவலையும் விசனமும் வெளி யிட்டிருக்கின்றார்.

நடுவுநிலைமை தவறாத போக்கோடு பிரிட்டனின் அனைத்துக்கட்சி எம்.பிக்கள் குழு எடுத்த எத்தனத்துக்கு இலங்கையில் சில தரப்புகள் தவறான நிறம் பூசியிருக் கின்றமை குறித்து அவர் விசனம் தெரிவித்திருக்கின்றார்.

ஆனால், தமிழரின் பக்கத்தில் உள்ள நியாயங்களை எத்தரப்பாவது கவனத்தில் எடுத்து அதற்கும் முக்கி யத்துவம் கொடுக்குமானால், அத்தரப்பை எப்போதுமே பக்கச் சார்பான தரப்பாகவே தென்னிலங்கை பார்க்கும் என்பதே உண்மை.

அதுதான் பிரிட்டன் விவகாரத்திலும் இப்போது நடக் கின்றது!

உதயன்

  • தொடங்கியவர்

சமாதானப் பேச்சுக்கள் மீளத் தொடங்க உந்துதல் அளிப்பதே எமது குழுவின் நோக்கம் பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் வாஸ் சொல்கிறார்

சமாதானம் உரு வாகாத பட்சத்தில் மட்டுமன்றி அதற் கான நம்பிக்கை இல் லாமற்போகும் போதும், இலங்கை யின் அப்பாவி மக் கள் தொடர்ந்தும் துன் பங்களையும் கஷ்டங்களையும் அனுப விக்க நேரிடும்.

அதனைக் கருத்திற்கொண்டே மீண் டும் சமாதானப் பேச்சுக்களை மீளத் தொடங்குவதற்கு உந்துதல் கொடுக்க பிரிட்டிஷ் நாடாளுமன்றக் குழு விரும்பு கிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஹெய்த் வாஸ்.

கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங் கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த செவ்வி யில் அவர் இதனைக் கூறினார்.

அவர் தமது செவ்வியில் மேலும் தெரி வித்ததாவது

இலங்கையில் நடைபெறும் போரின் மீது அக்கறை கொள்வோர் மீது பல குழு வினரும் ஊடகங்களும் குற்றங்களைச் சுமத்துவது அவநம்பிக்கைகளை ஏற் படுத்துகின்றது. இலங்கை விடயத்தில் அனைத்துலகத்தின் ஈடுபாடுகள் அதிகம் இருக்கவேண்டும் என நான் விரும்புகின் றேன்.

மோதல்களில் ஈடுபடும் தரப்புக்களை ஓர் அமைதி வழியிலான தீர்வைக் காண்ப தற்கு கொண்டுவரும் முயற்சிகளுக்காகவே பிரிட்டனின் அனைத்துக் கட்சி நாடாளு மன்றக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

நம்மில் எவரும் விடுதலைப் புலிகளைச் சந்திக்கவில்லை

மனித உரிமை மீறல்கள், பயங்கரவாத செயல்கள் போன்றவற்றில் எந்தக் கு ழு வினர் ஈடுபட்டாலும் அது கண்டிக்கப்பட வேண்டியது. நானோ அல்லது எமது எந்த அங்கத்தவர்களோ விடுதலைப் புலி களைச் சந்தித்தது இல்லை.

அனைத்துக் கட்சிக் குழுவானது பிரித் தானியா அரசின் கருத்தை பிரதிபலிக்க வில்லை. ஆயினும் அதில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பல மூத்த உறுப்பினர்களை கொண்டுள் ளது என்றார்.

ஹெய்த் வாஸ் லெய்செஸ்ரர் தொகுதி யின் நாடாளுமன்றப் பிரதிநிதியாவர். இவர் முன்னர் முன்னாள் வெளிவிவகார உதவி அமைச்சருமாவார். கடந்த ஐம்பது வருட காலத்தில் பிரிட்டிஷ் நாடாளுமன் றத்தில் பிரதிநிதியாக இருக்கும் முதலா வது இந்திய வம்சாவழியினருமாவார்.

இலங்கையில் ஓர் அமைதியான தீர்வை எட்டுவதற்குரிய பேச்சுக்களுக்கு விடு தலைப் புலிகள் மீதான பிரித்தானியா வின் தடைகள் காரணம் எனவும் அனைத் துத் தரப்பினரும் பேச்சுக்களில் ஈடுபட்டு ஒரு தீர்வைக் காண்பதற்கு தடை நீக்கப் படவேண்டும் எனவும் முன்னர் பிரித் தானியாவின் நாடாளுமன்றத்தில் வாஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.