Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வழமைக்கு திரும்பும் மக்களுக்காக சற்றுமுன்னர் வெளியானது விசேட வர்த்தமானி!

Featured Replies

ஸ்ரீலங்காவில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துச் செல்வதால், மார்ச் 20ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டு மக்கள் தத்தம் வீடுகளுக்குள் முடக்கப்பட்டனர்.

சுமார் ஒரு மாதகாலமாக அமுலில் இருந்த ஊரடங்கு சட்டம் பின்னர் பகுதி பகுதியாக முதலில் 6மணிநேரம் தளர்த்தப்பட்டு, பின்னர் மீண்டும் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதனையடுத்து தற்போது திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்கு சட்டம் மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படுகின்றது.

இந்நிலையிலேயே, நாளைய தினம் முதல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது கடமைகளை வழமை போன்று ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து, நாளைமுதல் பொது மக்களின் வாழ்க்கை நிலையை வழமை நிலைக்கு கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம் குறித்த விசேட வர்த்தமானி இன்று வெளியிடப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுமக்கள் நாளாந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வது மற்றும் மக்கள் பின்பற்றவேண்டிய நடைமுறைகள் குறித்து அதில் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

தனிமைப்படுத்தல் உத்தரவு மற்றும் சட்டப்பூரவமான அதிகாரங்களை உள்ளடக்கிய குறித்த வர்த்தமானி அறிவிப்பு சுகாதார அமைச்சினால் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் பணியாற்ற வேண்டிய ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் பொதுப்போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

 

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpeg

https://www.ibctamil.com/srilanka/80/142856

5 hours ago, போல் said:

இந்நிலையிலேயே, நாளைய தினம் முதல் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் எனவும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் தமது கடமைகளை வழமை போன்று ஆரம்பிக்க முடியும் எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இது மருத்துவ இல்லை கோவிட் 19 பாதிப்புக்களின் தரவுகளின் அடைப்படையில் எடுக்கப்பட்ட முடிவு அல்ல. 

பொருளாதார முடிவே. 

பொருளாதாரமும் மக்களை ஆட்டிப்படைக்கும் அதேவேளையில் தமிழ் மக்கள் வரும் காலத்தை மிகவும் அவதானமாக அணுகி எமது மக்கள் மத்தியில் ஏற்படக்கூடும் இழப்புக்களை குறைக்கவேண்டும்.  

’முரண்பாடற்ற அறிக்கைகளை வெளியிடவும்’

இன்றைய தினம் முழு நாட்டையும் வழமை நிலைக்குக் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டாலும், முரண்பாடற்ற அறிக்கைகளை மக்களுக்கு வழங்கினாலே மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் இன்றிலிருந்து நாட்டை வழமை நிலைக்குக் கொண்டு வருவதாகவும் அரச மற்றும் தனியார் பிரிவுகளின் பணிகளை ஆரம்பிக்குமாறும் அறிவித்தல் விடுக்கும் நிலையில், மறு அறிவித்தல் வரை பொதுப் போக்குவரத்து சேவைகளில் பயணிகளை ஏற்ற வேண்டாம் எனச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் நாயகம், போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்றும், சஜித் சுட்டிக்காட்டினார்.

எனவே, பொதுப் போக்குவரத்து சேவையைப் பயணிகளுக்காக ஆரம்பிக்காமல், எப்படி வழமையான நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி அலுவலகத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பினார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இன்றைய கொரொனா நிலைமைக்குள் அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டம் பாரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதென்றும் மாறுப்பட்ட, முரண்பாடான அறிவித்தல்கள் கிடைக்குமாயின், மக்கள் மத்திய அரசாங்கத்தின் கட்டமைப்பு ஒழுங்காக செயற்படவில்லை என எண்ணக்கூடும் என்றார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/முரண்பாடற்ற-அறிக்கைகளை-வெளியிடவும்/175-250073

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.