Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்ணுக்குத் தெரியாத எதிரியும் அரசுகளின் இராணுவ அணுகுமுறையும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்குத் தெரியாத எதிரியும் அரசுகளின் இராணுவ அணுகுமுறையும்

மனித குலத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத கொரோனாவைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு உட்பட கடுமையான பல நடவடிக்கைகளை கடந்த மூன்று மாதகாலமாக முன்னெடுத்திருக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் போர் ஒன்றில் ஈடுபட்டிருப்பது போன்ற மனோநிலையிலேயே பேசிக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.

gotha-13.jpgஇலங்கையில் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளின் ஆரம்பமே விடுதலை புலிகள் இயக்கத்தை இராணுவ ரீதியாக தோற்கடித்த அரசாங்கத்தின் “சாதனையை” பெருமையுடன் நினைவுபடுத்திய வண்ணமே அமைந்தது. வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவின் அரசாங்கம் ஒரு பொதுச் சுகாதார நெருக்கடி நிலையைக் கையாளும் பொறுப்பில் மருத்துவத்துறையினரை விடவும் ஆயுதப்படைகளுக்கே அதிமுன்னுரிமை அளித்திருப்பதும் அது தொடர்பில் பல்வேறு விமரிசனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதும் எல்லோருக்கும் தெரிந்ததே. கொரோனா நெருக்கடியைக் கையாளுவதற்கென்று நியமிக்கப்பட்டிருக்கும் பல்வேறு செயலணிகளுக்கு இராணுவ பின்னணியுடையவர்களாகவே இருக்கிறார்கள். இறுதியாக இவ்வாரம் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இராணுவத்தின் மருத்துவப் பிரிவின் பணிப்பாளராக பதவிவகித்தவரே நியமிக்கப்பட்டதைக் கண்டோம்.

எமது நாட்டு நிலைவரம் இவ்வாறாக இருக்கையில், அயல்நாடான இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி சுமார் இரு மாதங்களுக்கு முன்னர் ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான அறிவிப்பை மகாபாரத காவியத்தில் 18 நாட்களுக்கும் அதிகமாக நீடித்த யுத்தத்தை நினைவுபடுத்திய வண்ணமே செய்தார்.

 

கொரோனாவைரஸின் தொற்றுக்கு இலக்கான பிரிட்டிஷ் பிரதமர் போறிஸ் ஜோன்சன் தனது அராங்கம் முன்னெடுக்கும் தொற்றுநோய்த் தடுப்பு நடவடிக்கைகளை இரண்டாவது உலகப் போர்க்கால பிரதமர் வின்ஸ்ரன் சேர்ச்சிலின் இடத்தில் தன்னை வைத்துக்கொண்டே முன்னெடுத்தார். அவரது பேச்சுக்கள் இதை தெளிவாக உணர்த்தின.

போதைப்பொருளுக்கு எதிராக தனது போரை மனித உரிமைமீறல்களைப்பற்றிய எந்தக் கரிசனையும் இல்லாமல் மூர்க்கத்தனமாக முன்னெடுத்த பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுரேர்ட் கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது நோய்த்தொற்றுத் தடுப்புக்காவல் உத்தரவை மீறுகின்றவர்களை சுட்டுத்தள்ளுமாறு தனது இராணுவத்துக்கும் பொலிஸுக்கும் உத்தரவிட்டார். பிலிப்பைன்ஸின் மிகப்பெரிய தொலைக்காட்சி சேவையையும் ஒலிபரப்பு நிலையத்தையும் அவர் மூடிவிட்டார்.

uk-pm-300x169.jpgபல நாடுகளின் தலைவர்கள் தங்களது நடவடிக்கைகளை விமர்சனம் செய்கின்றவர்களையும் தவறுகளைத் துணிந்து சுட்டிக்காட்டுகின்ற ஊடகங்களையும் அடக்குவதற்கு தற்போதைய பொதுச்சுகாதார நெருக்கடிநிலையை வசதியாகப் பயன்படுத்துவதில் முனைப்புக் காட்டுகிறார்கள். எதேச்சாதிகார அரசாங்கங்களின் ஆட்சியின் கீழ் இருக்கும் நாடுகளில்தான் இவ்வாறு நடைபெறுகிறதென்று நினைத்துவிடாதீர்கள். உறுதியான ஜனநாயக கட்டமைப்புக்களையும் நிறுவனங்களையும் கொண்ட நாடுகளிலும் கூட நிலைவரம் ஒன்றும் மேம்பட்டதாக இல்லை.

 

பிரிட்டனில் சுகாதாரத்துறைப் பணியாளர்கள் மத்தியில் தனிப்பட்ட பாதுகாப்பு உடபகரணங்கள் பற்றாக்குறையாக இருப்பதை பி.பி.சி.யின் முக்கியமான ஒரு நிகழ்ச்சியான ‘”பனரோமா'” அம்பலப்படுத்தியதை அடுத்து, ஜோன்சனின் கன்சர்வேட்டிவ் அரசாங்கம் அதை கடுமையாகக் கண்டனம் செய்தது.

இந்திய பிரதமர் மோடி ஊரடங்கு நடைமுறையை அறிவிப்பதற்கு முன்னதாக ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடனும் பத்திரிகை ஆசிரியர்களுடனும் வீடியோ மூல கூட்டமொன்றை நடத்தினார். ‘கொவிட் –19’ குறித்து உற்சாகம் தருகின்றதும் அனுகூலமானதுமான செய்திகளையே வெளியிடவேண்டும் என்ற பிரதமரின் யோசனையின் பிரகாரம் செயற்படுவதாக அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் உறுதிகூறியதாக மோடியின் இணையத்தளத்தில் தகவல் பதிவாகியிருக்கிறது. அந்தப் பதிவைத் தவிர, வேறு எங்குமே அவ்வாறு அவர்கள் உறுதிகூறிதாக தகவல் வெளியாகவில்லை என்று கூறப்படுகிறது.

இது பொதுச்சுகாதார நெருக்கடியைக் கையாளும்போது அராங்கத்தினால் இழைக்கப்படக்கூடிய தவறுகள் அல்லது குறைபாடுகளை ஊடகங்கள் பெரிதுபடுத்தி மக்கள் மத்தியில் கொண்டு செல்லக்கூடாது என்ற மோடியின் விருப்பத்தை திணிப்பதற்கான ஒரு தந்திரோபாயமே என்று அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குறைகூறுகிறார்கள்.

trump-coronavirus-300x169.jpg

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ம்பைப் பொறுத்தவரை, கொரோனா பரவல் தொடர்பில் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கைகளை அவரது நிருவாகம் அலட்சியம் செய்தமையே இன்று கொவிட் — 19 நோயினால் உலகில் மிகவும் மோசமாகப் பாதிக்கபட்ட நாடாக அமெரிக்காவை மாற்றியிருக்கிறது. ஆனால், அவரது தவறான அணுகுமுறைகள் குறித்து சுட்டிக்காட்டப்படுகின்றபோது நவம்பரில் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தனனைத் தோற்கடிப்பதற்கு அமெரிக்காவின் பிரதான ஊடகங்கள் கங்கணம் கட்டியிருக்கின்றன என்று ட்ரம்ப் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறார்.

வெள்ளைமாளிகை செய்தியாளர்கள் மகாநாடுகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை ட்ரம்ப் படுமோசமாக அவமதிக்கும் காட்சிகளை தொலைக்காட்சிகளில் தாராளமாக காணக்கூடியதாக இருக்கிறது. முன்னர் எந்தவொரு ஜனாதிபதியும் ட்ரம்பைப் போனறு ஊடகவியலாளர்களுடன் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதில்லை. தனது நிருவாகத்துக்கு எதிரான வெளிச்சக்திகளின் சதிமுயற்சிகளுக்கு ஊடகங்கள் துணைபோகின்றன என்றும் அவர் கூறுகிறார். இதன் மூலமாக ஊடகங்களை அச்சுறுத்த எத்தனிக்கிறார். தன்னை விமர்சிக்கின்ற அரசியல் எதிரிகளை, குறிப்பாக நவம்பர் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிடவிருக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடெனையும் அவரது பிரசாரக்குழுக்களையும் பெய்ஜிங்கின் கையாட்கள் என்று ட்ரம்ப் குற்றஞ்சாட்டுகிறார்.

இவ்வாறாக, கொரோனாவைரஸ் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கு நேரகாலத்தோடு நடவடிக்கைகளை எடுக்கத்தவறிய நாடுகளின் தலைவர்கள் தங்களது தோல்விகளை மறைப்பதற்கு அதிகாரத்தை வலுப்படுத்துவதற்கும் உலகளாவிய பொதுச்சுகாதார நெருக்கடியை வாய்ப்பாக பயன்படுத்துகிறார்கள். கண்ணுக்குப் புலப்படாத வைரஸுக்கு எதிரான போராட்டத்தை ஒரு ஆயுதப்போராக உருவகித்து சமுதாயத்தில் இராணுவ மயமாக்கலை தீவிரப்படுத்தவும் கொரோனா பற்றிய உண்மைநிலையை மக்களுக்கு சரியாகக் கூறாமல் தங்களது ஆட்சிகளில் குறைகண்டுபிடிக்காமல், மறுகேள்வியின்றி ஆதரிப்பதன்மூலமே கொரோனாவை விரட்டமுடியும் என்று கதைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

http://thinakkural.lk/article/41756

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.