Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் வீட்டுக்கு செல்லும் வரை அவர்களை அனுப்பிக் கொண்டே இருப்பேன் - சோனு சூட் நெகிழ்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் வீட்டுக்கு செல்லும் வரை அவர்களை அனுப்பிக் கொண்டே இருப்பேன் - சோனு சூட் நெகிழ்ச்சி

will-continue-sending-migrants-home-until-the-last-one-reunites-with-family-says-sonu-sood

 

கரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப் போக்குவரத்தும் வசதியும் முடங்கியுள்ளதால் இவர்களில் பலர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

‘சந்திரமுகி’, ஒஸ்தி', 'தேவி', 'அருந்ததி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியும் வைத்தார்.

இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூட். இதற்காக உ.பி அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

என்னை பொறுத்தவரை இது ஒரு உணர்வுப்பூர்வமான பயணம். இந்த தொழிலாளர்கள் தங்கள் வீட்டை விட்டு இப்படி தெருக்களில் அலைந்து திரிவதை பார்க்கையில் மனம் வலிக்கிறது.

கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன். இது என் இதயத்துக்கு நெருக்கமான விஷயமாக உள்ளது. இதற்காக என்னிடம் உள்ள அனைத்தையும் கொடுப்பேன்.

இவ்வாறு சோனு சூட் கூறியுள்ளார்.

ஜூஹூ பகுதியில் இருக்கும் தனது ஹோட்டலை, களப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள தானமாக கொடுத்துள்ளார் சோனு. மேலும் சமீபத்தில் பஞ்சாபில் இருக்கும் மருத்துவர்களுக்காக 1,500 பாதுகாப்பு உபகரணங்களைத் தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.hindutamil.in/news/cinema/bollywood/555017-will-continue-sending-migrants-home-until-the-last-one-reunites-with-family-says-sonu-sood-1.html

 

ஒரு மாத த்திற்கு மேல் பலருக்கு சாப்பாடு போட்டுக்கெண்டிருக்கின்றார், நல்ல மனிதன்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சொந்த செலவில் தனி விமானம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு.... அசத்தும் சோனுசூட்

 

சொந்த செலவில் தனி விமானம் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் மீட்பு.... அசத்தும் சோனுசூட்

 

தமிழில் கள்ளழகர், மஜ்னு, சந்திரமுகி, ஒஸ்தி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சோனு சூட், பாலிவுட்டிலும் முன்னணி நடிகராக உள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், சமூகப் பணிகளில் இறங்கியுள்ள சோனுசூட், தன்னால் இயன்ற உதவிகளை செய்துவருகிறார். 

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் ஓய்வெடுக்க மும்பையில் உள்ள தனது 6 மாடி நட்சத்திர ஓட்டலை வழங்கினார். உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கினார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவி செய்து வருகிறார். அவர்களுக்கு உதவுவதற்காக தனி கால்சென்டர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

சோனுசூட், புலம்பெயர் தொழிலாளர்கள்

அந்தவகையில், கேரள மாநிலம் கொச்சியில் சிக்கி தவித்த ஒடிசாவை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் தங்களுக்கு சொந்த ஊர் செல்ல உதவுமாறு கேட்டிருந்தனர். இதை தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் பேசிய சோனு சூட், அவர்களுக்காக தனி விமானம் ஏற்பாடு செய்து 167 தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப ஏற்பாடு செய்தார். அதன் விமான கட்டணத்தையும் தானே ஏற்றுக் கொண்டார். சோனுசூட்டின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/02082941/1575338/Sonu-sood-arrange-separate-flight-for-migrant-labours.vpf

 

 

 

 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தடுத்து நிறுத்திய போலீசார்... பணியை தொடர்வேன் என்று கூறிய சோனு சூட்

பாந்திரா டெர்மினசில் வெளிமாநில தொழிலாளர்களை சந்திக்க சென்ற இந்தி நடிகர் சோனு சூட்டை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு உண்டானது.

தடுத்து நிறுத்திய போலீசார்... பணியை தொடர்வேன் என்று கூறிய சோனு சூட்

கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பையில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களுக்கு இந்தி நடிகர் சோனுசூட் தனது ஏற்பாட்டில் பஸ் வசதி ஏற்படுத்தி கொடுத்து வருகிறார்.

இதுதொடர்பாக அவரை ஆளும் சிவசேனா கடுமையாக விமர்சித்தது. சோனுசூட்டை பாரதீய ஜனதா பின்னால் இருந்து இயக்குவதாகவும், அதனால் அவர் சிவசேனா தலைமையிலான மாநில அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திடீர் மகாத்மாவாக மாறியுள்ளார் என்று தனது அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாடியது.

இதை தொடர்ந்து, அன்றைய தினம் இரவு திடீரென நடிகர் சோனுசூட் பாந்திராவில் உள்ள மாதோஸ்ரீ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்தித்து பேசினார். அப்போது, வெளிமாநில தொழிலாளர்களுக்கு அவர் செய்து வரும் உதவிக்காக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவரை பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டது.

சோனு சூட்

இந்தநிலையில், பாந்திரா டெர்மினஸ் ரெயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேசத்திற்கு ஷராமிக் சிறப்பு ரெயில் புறப்பட இருந்தது. அந்த ரெயிலில் பயணம் செய்யும் அம்மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களை சந்திப்பதற்காக நடிகர் சோனுசூட் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் நடிகர் சோனுசூட்டை ரெயில் நிலையத்திற்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும் வெளிமாநில தொழிலாளர்களை சந்திக்கவும் அனுமதி மறுத்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதையடுத்து நடிகர் சோனுசூட் அங்கிருந்து திரும்பி சென்றார். அதன்பின் சோனு அளித்த பேட்டியில், ‘என்னுடைய செயலில் அரசியல் எதுவும் இல்லை. புலம்பெயர் தொழிலாளர்கள் மீதுள்ள உண்மையான அன்பின் காரணமாகவே நான் இதனைச் செய்து கொண்டிருக்கிறேன். கடைசி புலம் பெயர் தொழிலாளர் தன்னுடைய சொந்த வீட்டிற்குச் சென்று சேரும் வரை நான் எனது பணியை தொடர்வேன்’ என்றார்.

https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2020/06/10164532/1596960/police-stopped-Sonu-Sood-went-to-meet-workers.vpf

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு யாருமே இல்ல: Sonu Sood-ன் சோகம்

 

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் பெற்றோர் இல்லாத குறையை உணர்கிறேன்: சோனு சூட்

sonu-sood-misses-his-parents

 

பஞ்சாபின் அடையாளம் என்ற பெருமை பெற்றுள்ள நடிகர் சோனு சூட், தனது பெற்றோர் இல்லாததை நினைத்து இப்போதுதான் அதிகமாக வருத்தப்படுவதாகக் கூறியுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

சோனு சூட்டின் நல உதவிகளை திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து அவருக்குக் கூடுதல் கவுரவத்தை அளித்துள்ளது.

இது குறித்துப் பேசியிருக்கும் சோனு சூட், "எப்போதையும் விட இப்போதுதான் எனது பெற்றோர் இல்லை என்பதை நினைத்து வருந்துகிறேன். அவர்களைப் பெருமைப்படுத்துவேன் என்று எப்போதும் அவர்களிடம் கூறுவேன். எங்களது சொந்த ஊரான மோகா முழுக்க எனது பெயரை அறியச் செய்வேன் என்றும் அவர்களிடம் உறுதியளித்திருந்தேன்.

இது எல்லாமே எனது பெற்றோரின் ஆசிர்வாதங்கள் தான். என்னை பஞ்சாபின் அடையாளமாக நியமித்துள்ளனர். மேலே இருந்து என் பெற்றோர் என்னைப் பார்த்து புன்னகைப்பதை நான் உணர்கிறேன். இது மிகப்பெரிய பொறுப்பு. இதை சுமக்கும் திறன் எனக்கு இருக்கிறது என நினைக்கிறேன். என்னுள் அசாத்தியமான துணிச்சலையும், வலிமையையும் நான் உணர்கிறேன். அது எங்கிருந்து வருகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

ஒரு பக்கம் சிலர் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் எனது நேர்மையான நோக்கமும், மக்களின் அன்பு மற்றும் நம்பிக்கையும் தான் என்னை இயக்குகிறது. அவர்களது நம்பிக்கையை சந்தேகப்படும் எந்த ஒரு நபராலும் போக்கிவிட முடியாது" என்று கூறியுள்ளார்.

 

 

 

https://www.hindutamil.in/news/cinema/bollywood/603441-sonu-sood-misses-his-parents-1.html

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பஞ்சாபின் அடையாளம் சோனு சூட்’ - இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு

sonu-sood-named-state-icon-of-punjab

 

ஊரடங்கு காலத்தில் வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் வீடு திரும்புவதற்கான போக்குவரத்து வசதிகளை நடிகர் சோனு சூட் இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார். பேருந்து மட்டுமின்றி, சிலரைத் தனி விமானம் மூலமாகவும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைத்தார்.

வறுமையில் வாடிய விவசாயிக்கு டிராக்டர், ஸ்பெயினில் சிக்கியிருந்த சென்னை மாணவர்கள் வீடு திரும்ப விமான வசதி எனத் தொடர்ந்து பல்வேறு உதவிகளை நடிகர் சோனு சூட் செய்து வந்தார். பொருளாதார ரீதியில் கஷ்டப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கினார்.

சமீபத்தில் சண்டிகர் அரசுப் பள்ளி மாணவர்கள் இணைய வகுப்புகளைக் கவனிக்க, அவர்களுக்கு ஸ்மார்ட்போன்களை அளித்து உதவி செய்தார். மேலும் ஒரு கிராமத்தில் மாணவர்களுக்காக மொபைல் டவரே அமைத்துக் கொடுத்தார்.

சோனு சூட்டின் நல உதவிகளைப் பாராட்டி சக நட்சத்திரங்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சோனு சூட்டை பஞ்சாபின் அடையாளமாக அறிவிக்கக் கோரி பஞ்சாப் தேர்தல் அதிகாரி கருணா ராஜு விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகர் சோனு சூட் தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

 

https://www.hindutamil.in/news/cinema/bollywood/602362-sonu-sood-named-state-icon-of-punjab-1.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.